வெங்கட் பிரபு அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். இதைத்தொடர்ந்து இந்த படத்தில் கதாநாயகியாக யார் நடிக்க உள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

வெங்கட் பிரபு அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். இதைத்தொடர்ந்து இந்த படத்தில் கதாநாயகியாக யார் நடிக்க உள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி இப்படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கப்போகிறது என்கிற தகவலும் வெளி வந்துள்ளது.
விஜய் நடிப்பில் கடந்த ஆண்டில் ஒரே ஒரு படம் மட்டும்தான் வெளியானது. அதுதான், தி கோட் (The Greatest Of All Time). இந்த படத்தில் விஜய் ஹீரோவாக நடிக்க அவருடன் சேர்ந்து சினேகா, மீனாட்சி செளத்ரி, பிரபு தேவா, பிரசாந்த், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். விஜய் நடிப்பில் கடந்த ஆண்டில் ஒரே ஒரு படம் மட்டும்தான் வெளியானது. அதுதான், தி கோட் (The Greatest Of All Time). இந்த படத்தில் விஜய் ஹீரோவாக நடிக்க அவருடன் சேர்ந்து சினேகா, மீனாட்சி செளத்ரி, பிரபு தேவா, பிரசாந்த், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இதனிடையே விஜய்யை வைத்து GOAT படத்தை இயக்கிய வெங்கட் பிரபு அடுத்ததாக யாரை இயக்கப்போகின்றார் என்ற கேள்வி இருந்து வந்தது. அந்த கேள்வியாக விடையாக அடுத்ததாக வெங்கட் பிரபு சிவகார்த்திகேயனை தான் இயக்க இருக்கின்றார் என தகவல் வெளியானது. இந்த படம் டைம் ட்ராவல் கதைக்களத்தில் உருவாகும் ஒரு சைன்ஸ் பிக்ஷன் படமாக இப்படம் தயாராக இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. அதுமட்டுமின்றி இப்படம் சிவகார்த்திகேயனின் திரைப்பயணத்தில் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படம் என கூறப்படுகிறது. தற்போது விரைவில் இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக இருப்பதாகவும் தெரிகின்றது. அதன்படி இந்தாண்டு இறுதிக்குள் அதாவது நவம்பர் மாத்திற்குள் சிவகார்த்திகேயன் ,மற்றும் வெங்கட் பிரபு இணையும் படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என தகவல்கள் வருகின்றன.
இந்நிலையில் தற்போது இந்த படத்தில் நடிக்கப்போகும் நாயகி யார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த படத்தில் கயாடு லோஹர் நாயகி என கூறப்பட்டு வந்த நிலையில் கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்க இருக்கிறார் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் கூறப்படுகிறது.
இதனிடையே நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் படத்திற்கு பிறகு இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒன்று, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் மதராசி திரைப்படம். சிவகார்த்திகேயனின் 23வது படமான இது, ஆக்சன் திரில்லர் பானையில் உருவாகி வருகிறது. இந்தப் படத்துடன் சிவகார்த்திகேயன் கமிட்டாகி பணியாற்றி வரும் படம், பராசக்தி. இந்த படத்தை, சுதா கொங்கரா இயக்கி வருகிறார். இதில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக நடிக்கிறார். முக்கிய கதை பாத்திரங்களாக அதர்வா, ஸ்ரீலீலா நடிக்க, நெகட்டிவ் கேரக்டரில் ஜெயம் ரவி வருகிறார்.
இதற்கு பிறகு சிவகார்த்திகேயன் அடுத்ததாக தனது நண்பரும் இயக்குனருமான அட்லீயுடன் கைகோர்க்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் சமீபத்தில் சந்தித்துக் கொண்டதாகவும், இவர்கள் இணைந்து பணியாற்ற வாய்ப்புள்ளதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், அடுத்ததாக டான் படத்தின் இயக்குநரான சிபி சக்கரவத்தியின் ஒரு படத்தில் கமிட் ஆக இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால், இது பேச்சுவார்ததைக்கு மேல் செல்லவில்லை என்றும், அடுத்ததாக அவர் குட் நைட் படத்தின் இயக்குநரான விநாயக் ரவிச்சந்திரனுடன் ஒரு படத்தில் இணைவதாகவும் கூறப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ