தமிழில், பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சமீபத்தில் நடந்த பிரச்சனை வைரலானது. இதில் சம்பந்தபட்ட மாகபா, புகழ் மற்றும் கானா வினோத் ஆகியோர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜர் ஆகி விளக்கமளித்தனர். இது குறித்த முழு விவரத்தை, இங்கு தெரிந்து காெள்வோம்.

தமிழ் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியாக இருக்கிறது, குக் வித் கோமாளி. சில சீசன்களுக்கு முன்பு வரை, இந்த நிகழ்ச்சி கலகலப்புக்கும், சிரிப்பிற்கும் பெயர் போனதாக இருந்தது. ஆனால் கடந்த சில சீசன்களாக, வெறும் சர்ச்சைக்கும் அவப்பெயருக்கும் பெயர் போனதாக இருக்கிறது. அதை நிரூபிக்கும் வகையில், சமீபத்தில் ஒரு பிரச்சனை நடந்திருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.
தாக்குதலுக்கு ஆளானதாக திவாகர் பேட்டி!
சில மாதங்களுக்கு முன்பு நிறைவுப்பெற்ற ‘பிக்பாஸ் 9’ நிகழ்ச்சியில், திவாகர் பங்குபெற்றிருந்தார். கஜினி படத்தில் வரும் சூர்யாவின் தர்பூசணி சீனை ரீகிரியேட் செய்து வைரலானதால் அவருக்கு ‘வாட்டர்மெலன் ஸ்டார்’ என்கிற பெயரும் வந்தது. இதையடுத்து, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாகவும் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து, அவர் சில நாட்களிலேயே பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எவிக்ட் செய்யப்பட்டார்.
பிக்பாஸில் இருந்து வெளியில் வந்த பிறகு, அவருக்கு ஒரு சில நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து, குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் இவர் பங்கற்க வாய்ப்பு கிடைத்தது. இந்த ஷூட்டிங்கில் கலந்து கொள்வதற்காக தான் ஈவிபி ஃபிலிம் சிட்டிக்கு வந்ததாக பேட்டி கொடுத்த திவாகர், தன்னை புகழ், மாகபா ஆனந்த் மற்றும் கானா வினோத் ஆகியோர் இணைந்து தன்னை தாக்கியதாக கூறியிருந்தார். இது, திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
“இரும்பு ராடால் தாக்கினர்”
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது குறித்து வீடியோவினை பதிவிட்டிருந்த திவாகர், தன் மீது புகழ் உள்ளிட்ட சிலர் தான் காலையில் குக் வித் கோமாளி செட்டிற்கு வந்த நேரத்தில் இருந்தே கடுப்பில் இருந்ததாகவும், தன்னை முறைத்துக்கொண்டே இருந்ததாகவும் கூறினார். மாகபா ஆனந்த் 24*7 குடி போதையிலேயே இருப்பார் என்றும், அந்த போதையில்தான் தன்னை இரும்பு ராடால் தாக்கியதாகவும் கூறினார். இது குறித்து ஈவிபிக்கு அருகில் இருக்கும் நஸ்ரேத்பேட் காவல் நிலையத்தில் புகாரளித்திருப்பதாகவும், போலீஸார் இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மாகபா, புகழ் மற்றும் கானா வினோத் விளக்கம்!
திவாகர் கொடுத்த புகாரின் பேரில் புகழ், மாகபா மற்றும் கானா வினோத் ஆகிய அனைவரையும் நஸ்ரேத்பேட் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்தனர். தமிழ் புத்தாண்டான நேற்று, இந்த விசாரணை நடந்துள்ளது. இதில், அவர்களிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்கப்பட்டது. அப்போது, அவர்கள் இது குறித்து விவரித்தனர்.
குக் வித் கோமாளி செட்டிற்கு வந்ததில் இருந்து திவாகர் பிரச்சனை செய்து கொண்டிருந்ததாக கூறிய அவர்கள், திவாகர் சக போட்டியாளர் ஒருவரின் மனைவி மீது தோளில் கைப்போட்டு “இத்தனை நாள் உன் புருஷன் கூடதானா இருந்த..இன்னிக்கு ஒரு நாள் என் கூட இரு..” என்று சொன்னதாக கூறினர். கூடவே கானா வினோத் பேசுகையில், “சேரி, குப்பம்” என்று சாதிய வெறிப்பிடித்த வார்த்தைகளை திவாகர் பேசி வந்ததாக தெரிவித்தார்.
மாகபா குடி போதையில் இருந்தாரா?
இந்த பேட்டியின் போது, மாகபா ஆனந்திடம், “நீங்கள் குடி போதையில் இருந்ததாக திவாகர் ஒரு குற்றச்சாட்டை வைக்கிறாரே அதற்கு என்ன கூறுகிறீர்கள்?” என்று கேட்டார். இதைக்கேட்டு டென்ஷனான மாகபா ஆனந்த், “நீங்க என்ன சேனல்?” என்று கேட்டார், அந்த நிருபர் தான் வேலை செய்யும் சேனலின் பெயரை கூறினார். அப்போது அவர், “நான் 18 மணி நேரம் நின்று வேலை செய்வேன். குடி போதையில் இருந்தால் அப்படி வேலை செய்ய முடியுமா? என்னால் நேராக நிற்க முடியுமா?” என்று கேட்டார்.
புகழ் வைத்த கோரிக்கை!
நகைச்சுவை நடிகரும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஸ்டார் கோமாளியுமான புகழ் பேசிய போது, திவாகரை நேர்காணல் எதுவும் எடுத்து வளர்த்து விட வேண்டாம் என்றும், அவரை மதிக்க வேண்டாம் என்றும் கூறியிருந்தார். திவாகர், பேசுகையில் அவர் மீது பொறாமையின் காரணமாக தாக்கப்பட்டதாக கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த புகழ், “அவர் மீது, எனக்கு பொறாமையா? அவர் என்ன வளர்ச்சியை கண்டு விட்டார் என்று நான் அவர் மீது பொறாமை பட வேண்டும்? அவர் எங்கு வளர்ந்தார்?” என்று பேசினார்.
திவாகர் வெளியிட்ட வீடியோ..
தற்போது வாட்டர்மெலான் ஸ்டார் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அதில், “கானா வினோத் எனது குடும்பத்தை பற்றி தறக்குறைவாக பேசியது உண்மை. புகழ் என் மீது பொறாமை பட்டதும் உண்மை, மாகபா என் மீது கம்பி வைத்து எரிந்ததும் உண்மை. இவர்கள் என் மீது பிரஸ் மீட்டில் கொடுத்த விஷயங்கள் தவறு. மாகபா பெண்களை ஈசிஆர்-ல் தவறாக நடத்திய வீடியோ ஆதாரங்களை ஏகப்பட்ட பேர் என்னிடம் அனுப்பினார்கள். அவர் குடித்தால் தாய்க்கும் தாரத்திற்கும் வித்தியாசம் தெரியாது. இதே புகழ், மலேசியாவில் ஒயின் ஷாப்பில் தண்ணி அடித்துவிட்டு காசு கொடுக்காமல் உட்கார வைத்திருந்தனர். என் நண்பர்கள்தான் அவரை மீட்டு கொண்டு வந்தனர்.
அண்டாகாகசம் ஷோவில், மாகபா உட்கார்ந்து தண்ணி அடித்து கொண்டிருந்தார். நான் அவர் அருகில் அமர்ந்து ஸ்நாக்ஸ் சாப்பிட்டேன். இதை என் கண்ணால் பார்த்தேன். நான் சொல்றது சத்தியம். காசு வாங்கிட்டு இந்த பிரச்சனையை விடச்சொல்லி என்னை ப்ரஷர் பண்றாங்க. புகழும் பெண்களிடம் தவறாக நடந்து கொள்ளக்கூடிய ஆள். இவருக்கு ரௌடிக்களுடன் சகவாசம் உள்ளது. புகழுக்கு நடிக்கவே தெரியாது. டிவியில் செய்வதையே, திரையிலும் செய்வதால் அவருக்கு எந்த வாய்ப்பும் கிடைப்பதில்லை. நடித்த படம் எல்லாம் ஃப்லாப்பு..” என்று பேசியிருக்கிார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!