Kannada Actress Ranya Rao Arrested: பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் கன்னட திரைப்பட நடிகை ரன்யா ராவை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI) கைது செய்தது. அவரிடமிருந்து 14.8 கிலோ தங்கம் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். துபாயிலிருந்து வந்த ரன்யாவிடம், அவரது பெல்ட்டில் கட்டப்பட்ட இருந்த 14 கிலோ தங்கக் கட்டிகள் மற்றும் 800 கிராம் தங்க நகைகள் பிடிபட்டன. அந்த நடிகை காவல்துறை இயக்குநர் ஜெனரல் (காவல்துறை வீட்டுவசதிக் கழகம்) ராமச்சந்திர ராவின் மகள் என்று கூறப்படுகிறது.
ரன்யா ராவ் திங்கள்கிழமை இரவு துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் இந்தியா திரும்பினார். கடந்த 15 நாட்களில் அவர் நான்கு முறை துபாய் சென்று வந்ததால், விசாரணை அமைப்புகள் ஏற்கனவே அவர் மீது சந்தேகம் கொண்டிருந்தன. அவர் பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்ததும், அதிகாரிகள் உன்னிப்பாகக் கண்காணித்தனர்.
அவரிடம் சோதனை மேற்கொண்ட போது, அவர் நிறைய தங்கம் அணிந்திருந்ததும், அவருடைய ஆடைகளில் சில தங்கக் கட்டிகளை மறைத்து வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. கைதுக்குப் பிறகு, ரன்யா ராவ் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார், அங்கிருந்து அவர் 14 நாட்கள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார்.
விமான நிலையத்தில் தரையிறங்கியதும், அவரிடம் சோதனை மேற்கோள்ள சென்ற போது, ரன்யா தன்னை கர்நாடக காவல்துறை இயக்குநர் ஜெனரல் (டிஜிபி) அந்தஸ்தில் இருக்கும் ஐபிஎஸ் அதிகாரியின் மகள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, உள்ளூர் காவல்துறையினரை தொடர்பு கொண்டு, பெங்களூரு மாநகர போலீஸார் என்னை வீட்டுக்கு அழைத்துச் செல்வார்கள் எனக் கூறியுள்ளார். தற்போது, அந்த காவல்துறை அதிகாரிக்கும், குறிப்பாக அவரது தந்திய எனக்கூறிய ஐபிஎஸ் அதிகாரிக்கு இந்த விஷயம் தெரிந்திருந்ததா அல்லது இவர் தவறான தகவல் அளித்துள்ளாரா என்பதை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
அரசாங்க பதவியில் இருக்கும் அதிகாரிகளுக்கு சில நெறிமுறை சேவைகள் இருக்கிறது. இந்த சேவைகள் பொதுவாக மூத்த அதிகாரிகள் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கானவை. அதை பயன்படுத்திக் கொண்டு, ரன்யா பாதுகாப்பு சோதனைகளில் தப்பிக்கலாம் என திட்டமிட்டு உள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக டிஜிபி கே. ராமச்சந்திர ராவைத் தொடர்பு கொண்டபோது, அவர் தனது மகளிடம் இருந்து விலகி இருப்பதாகத் தெரிவித்தார். அவர் கட்டிடக் கலைஞரான ஜதின் ஹுக்காரியை நான்கு மாதங்களுக்கு முன்பு ரன்யா திருமணம் செய்து கொண்டார் என்று கூறினார். திருமணத்திற்குப் பிறகு ரன்யா தனது பெற்றோரைச் சந்திக்க வரவில்லை. ரன்யா மற்றும் அவரது கணவரின் தொழில் பற்றி தனக்கோ அல்லது தனது குடும்பத்தினருக்கோ எதுவும் தெரியாது என்று அவர் கூறினார். தனது மகள் தன்னை அவமானப்படுத்தியதாகவும், ஏதேனும் சட்டம் மீறப்பட்டிருந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
ரன்யா ராவ் தனியாக வேலை செய்தாரா அல்லது துபாய்க்கும் இந்தியாவுக்கும் இடையில் செயல்படும் ஒரு பெரிய சர்வதேச கடத்தல் கும்பலின் ஒரு பகுதியாக இருந்தாரா என்பதையும் டிஆர்ஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். தற்போது, இந்த வழக்கில் விசாரணை நடந்து வருகிறது. மேலும் ரன்யா யாருடன் தொடர்பில் இருந்தார், அவரது கடத்தலில் யார் ஈடுபட்டார்கள் என்பதைக் கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் படிக்க - பிரபல பின்னணி பாடகி கல்பனா விபரீத முயற்சி.. ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









