First Choice For Retro Movie Hero Before Suriya : கோலிவுட் திரை உலகில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக இருக்கிறது ரெட்ரோ. இந்த படத்தில் சூர்யா ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படத்தின் கதையை அவர் சூர்யாவிற்காக முதலில் எழுதவில்லையாம். வேறு யாருக்காக எழுதினார் தெரியுமா?
ரெட்ரோ:
90களில் நடக்கும் கேங்ஸ்டர் டிரமாவாக உருவாகியிருக்கிறது, ரெட்ரோ திரைப்படம். இதில் சூர்யா ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். சில படங்களையே இயக்கி இருந்தாலும், ரசிகர்கள் மத்தியில் நல்ல இயக்குநர் என்ற பெயரை பெற்றவராக இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். அவர் இயக்கியிருக்கும் படம் என்பதால், இதன் மீதான எதிர்பார்ப்பு அனைவருக்கும் எகிறியிருக்கிறது.
ரெட்ரோ படத்தின் டீசர் வெளியான போதே, இதன் கதைக்கரு என்னவாக இருக்கும் என சிலர் கண்டுகொண்டனர். இந்த நிலையில், இப்படத்தின் கதையை தான் முதலில் சூர்யாவிற்காக எழுதவில்லை என்றும், அதை யாரை மனதில் வைத்து எழுதினேன் என்கிற விவரத்தையும் கார்த்திக் சுப்புராஜ் ஒரு சமீபத்திய நேர்காணலில் தெரிவித்திருக்கிறார்.
யாருக்காக எழுதப்பட்ட கதை?
ரெட்ரோ படத்தின் ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டிருக்கும் கார்த்திக் சுப்புராஜ், படம் குறித்து ஒரு நேர்காணலில் பேசியிருக்கிறார். அதில், இந்த படத்தை தான் ரஜினிகாந்திற்காக எழுதியதாகவும், தொடக்கத்தில் இதனை எழுதியபோது இது ஆக்ஷன் கதையாக இருந்ததாகவும் கூறியிருக்கிறார்.
பின்னர், இந்த கதை காதல் கதையாக மாறியதால் இதனை வேறு ஒரு நடிகரை வைத்து எடுக்கலாம் என யோசித்த அவர், சூர்யாவை அதற்காக தேர்ந்தெடுத்ததாக கூறியிருக்கிறார். ரெட்ரோ படத்தின் முதல் ட்ராஃப்டை சூர்யாவிடம் படிக்க கொடுத்த போது, “இதனை நீ தலைவரிடம் (ரஜினிகாந்த்) சொன்னாயா? இது அவருடைய ஸ்டைல் கதை போல இருக்கிறது” என்றாராம்.
சம்பவம் செய்வாரா கார்த்திக் சுப்புராஜ்?
குறைந்த பட்ஜெட்டில் பயமுறுத்தும் ‘பீட்ஸா’ என்கிற ஹாரர் படத்தை கொடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இவர் இயக்கிய இறைவி மற்றும் ஜிகர்தண்டா ஆகிய படங்களும் மக்கள் மத்தியல் நல்ல வரவேற்பினை பெற்றது. இவரை “நடிகர்களுக்கு கம்-பேக் கொடுக்கும் இயக்குநர்” எனவும் அழைப்பதுண்டு. காரணம், பெரிய நடிகர்களின் மார்கெட் துவண்டு கிடக்கும் சமயத்தில் அவர்களை வைத்து படம் எடுக்கும் இவர், அதனை ஹிட்டும் ஆக்கி விடுகிறார். பேட்ட, மகான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய படங்கள் அதற்கு சான்று.
அந்த வகையில், கடந்த சில ஆண்டுகளாக பெரிதாக ஹிட் கொடுக்காத சூர்யாவிற்கு ரெட்ரோ படமாவது கம்-பேக் கொடுக்குமா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. படம் வெளியான பிறகுதான், என்ன நிலவரம் என்பது தெரியும்.
பாடல்கள் ஹிட்!
படங்கள் ரிலீஸாகும் முன்பு வெளியாகும் பாடல்கள், பெரிய ப்ரமோஷனாக அமைந்து விடுகின்றன. அந்த வகையில், ரெட்ரோ திரைப்படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியிருந்த கண்ணாடி பூவே பாடலும் கணிம்மா பாடலும் ரசிகர்கள் மனங்களில் இடம் பெற்றுள்ளன. எனவே, இதனை ரசிக்கவாவது சில கூட்டம் தியேட்டருக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | 51 வயது நடிகருக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே.. யார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ