)
Celebrities Wedding Announcements Controversy : தமிழ் நாட்டில் பிரபலங்களாக இருக்கும் 4 பேர், ஒரே சமயத்தில் தங்களின் திருமண அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றனர். இது குறித்த முழு தகவலையும், அந்த பிரபலங்கள் யார் யார் என்பதையும் இங்கு பார்ப்போம்.
நிவேதா பெத்துராஜ், சில நாட்களுக்கு முன்பு தனது காதலரை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார். அவரை கட்டிப்பிடிப்பது போல இருந்த புகைப்படத்தை பதிவிட்டு, கேப்ஷனில் இமோஜி மற்றும இன்ஃபினிட்டி சிம்பிளை போட்டிருந்தார். இவரை சிங்கிள் என்று நினைத்துக்கொண்டிருந்த பலரும், காதலர் இருக்கும் விஷயம் தெரிந்து ஷாக் ஆகி இருக்கின்றனர். கூடவே கமெண்ட் செக்ஷனில் ஒரு குறிப்பிட்ட அரசியல்வாதியின் பெயரை சொல்லி, அவர் நிலை என்ன என்றும் கேட்டு வருகின்றனர். நிவேதா, ரஜித் இப்ரான் என்பவரை காதலிக்கிறார். இவர், பெரிய தொழிலதிபர் என்று கூறப்படுகிறது.
தமிழில் முக்கிய நடிகராக இருக்கும் நடிகர் விஷாலும் சாய் தன்ஷிகாவும் திருமணம் செய்து கொள்ள போகின்றனர் என்பது முன்னரே அனைவருக்கும் தெரியும். ஆகஸ்ட் 29ஆம் தேதி அவர்களுக்கு திருமணம் நடப்பதாக தெரிவிக்கப்பட்டது. மாறாக, அந்த நாளில் நிச்சயதார்த்தம் நடைப்பெற்று இருக்கிறது. இதையடுத்து, விஷால் தான் இனி எந்த முத்தக்காட்சியிலும் நடிக்கப்போவதில்லை என்று தெரிவித்து இருக்கிறார்.
Thank u all u darlings from every nook and corner of this universe for wishing and blessing me on my special birthday. Happy to share the good news of my #engagement that happend today with @SaiDhanshika amidst our families.feeling positive and blessed. Seeking your blessings and… pic.twitter.com/N417OT11Um
— Vishal (@VishalKOfficial) August 29, 2025
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் முக்கிய நடுவர்களுள் ஒருவராக இருக்கிறார் மாதம்பட்டி ரங்கராஜ். இவருக்கு ஸ்ருதி என்பவருடன் ஏற்கனவே திருமணம் ஆகி விட்டது. இந்த நிலையில், ஜாய் கிரிஸில்டா, தனக்கும் ரங்கராஜுக்கும் திருமணம் ஆகிவிட்டதாகவும், இப்போது தான் கர்ப்பமாக இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார்.
Mr & Mrs Rangaraj #madhampattyrangaraj pic.twitter.com/kRSWAvbZ5n
— Joy Crizildaa (@joy_stylist) July 26, 2025
இதைத்தொடர்ந்து, இப்போது ரங்கராஜ் தன்னுடன் பேசுவதே இல்லை என்றும் தனக்கும் தன் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் நியாயம் வேண்டும் என்றும் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருக்கிறார். தன் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை இவர் பழி வாங்குவதற்காக வெளியிட்டிருக்கிறாரோ என்கிற சந்தேகமும் பலருக்கு எழுந்திருக்கிறது. மாதம்பட்டி ரங்கராஜ், இந்த சர்ச்சை குறித்தோ, குழந்தை குறித்தோ எதுவும் வாய் திறக்காமல் இருக்கிறார்.
ராமதாஸ்:
பாமக நிறுவனர் ராமதாஸ், சமீபத்தில் தனது 50வது ஆண்டு திருமண விழாவை, தனது இரண்டாவது மனைவி சுசீலாவுடன் சேர்ந்து கொண்டாடினார். இந்த கொண்டாட்டம் ஆனது, பிரபல நட்சத்திர ஹோட்டலில் நடந்தது. இந்த நிகழ்வில், ராமதாஸின் குடும்பத்தினர் யாரும் பங்கேற்கவில்லை. சொல்லப்போனால், மக்களுக்கே இவருக்கு இன்னொரு திருமணம் நடந்திருப்பது இப்போதுதான் தெரிய வந்திருக்கிறது.
நம்ப சாதி பெண்களை காதலிக்கிற மாற்று சாதி பையன்கள் நாடக காதல் பண்ணுகிறார்கள் என பேசியவர் ராமதாஸ். இவர் மனைவிக்கு தெரியாமல் வேறு சாதி பெண்ணை வைப்பாக வைத்துக் கொண்டு, சாதி அரசியலுக்காக எத்தனை உயிர்களை காவு வாங்கி இருக்கிறார்? ... ச்சே!#பாமக #ramadoss #pmk pic.twitter.com/WN6Mlml0pU
— Thamizhachi (@ThamizhachiAuth) August 30, 2025
வெளி உலகில் யாருக்கும் தெரியாத படி, இன்னொரு குடும்பத்தை சீக்ரெட் ஆக வைத்திருந்த ராமதாஸ், இப்போது 50வது திருமண நாளை கொண்டாடி, வசமாக நெட்டிசன்களின் பிடியில் சிக்கியிருக்கிறார். கடந்த மாதம், தனது முதல் மனைவி சரஸ்வதியுடன் 60வது திருமண நாளை கொண்டாடி, அறுபதாம் கல்யாணமும் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊரெல்லாம் பேச்சு..
கடந்த சில நாட்களாகவ, ஊரெல்லாம் மேற்கூறிய இந்த பிரபலங்களின் திருமணங்கள் குறித்த பேச்சாகத்தான் இருக்கிறது. இதில் இரண்டு பேர் 2வது திருமண சர்ச்சையில் சிக்கியிருப்பவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ