)
Suriya In Assembly Election Clarification : சினிமா துறை மட்டுமன்றி, சமூக நலனிலும் அதிக அக்கறை கொண்ட நடிகராக இருப்பவர், சூர்யா. இவர், அரசியலுக்கு வருகிறாரா என்கிற கேள்வி பலருக்கும் நெடு நாட்களாக மனங்களில் இருக்கிறது. இந்த நிலையில், அதற்கு விளக்கம் தெரிவித்து சூர்யா நற்பணி இயக்கம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் செய்தி குறித்த முழு விவரம், இதோ:
“ஊடக நண்பகர்களுக்கும், சமூக வலைத்தள நண்பர்கள், சகோதர, சகோதரிகளுக்கும் அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம் சார்பில் வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
All India Suriya Fans Club Clarrification About On Going Controversy On #Suriya Sir,
— Rajasekar Russalayan (@iamrajesh_pov) August 20, 2025
Entry In Politics & Contesting In Elections News Are Not TRUE..
Focusing Only On Acting & Agaram Foundation Only... pic.twitter.com/sakrWhving
கடந்த சில நாட்களாக அண்ணன் சூர்யா அவர்கள் பற்றி சில பொய்யான தகவல்கள் இணைய ஊடகங்களில் பரவி வருகிறது. வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அண்ணன் சூர்யா அவர்கள் களமிறங்கப் போகிறார் என்று சமூக வலைத்தளங்களை மையமாக வைத்து இந்த பொய்யான செய்தி பரப்பப்பட்டு வருகிறது. இந்தச் செய்தி உண்மைக்கு மாறான போலியான தகவல் என்பது மட்டுமல்ல. அண்ணன் சூர்யாவின் கோட்பாடுகளுக்கு முரணானது.
கலை உலகப் பயணமும். அகரமும் இப்போதைய அவர் வாழ்வுக்கு போதுமான நிறைவைத் தந்துள்ளது. சமீபத்தில் நடந்த அகரம் நிகழ்வு தமிழ்நாடு மட்டுமின்றி உலகு தழுவிய அளவில் கவனம் ஈர்க்கப்பட காரணமானவர்களாகிய உங்களுக்கு எங்கள் மகிழ்ச்சி கலந்த நன்றிகள்.
அண்ணன் சூர்யாவை நேசிக்கும் கோடிக்கணக்கான தம்பி. தங்கைகள். நண்பர்களின் வாழ்த்துக்களோடு சினிமாவில் மட்டுமே அண்ணனின் கவனம் இருக்கும். எங்கள் அண்ணன் சூர்யா அவர்கள் பற்றி வெளியான போலியான இந்த செய்தியைத் திட்டவட்டமாக மறுக்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யா, அவரது குடும்பம் மற்றும் பல்வேறு அமைப்புகளுடன் சேர்ந்து ‘அகரம்’ அமைப்பை நடத்தி வருகிறார். பல்வேறு ஏழை, எளிய மாணவர்களுக்கு படிப்பதற்கும் வேலை வாய்ப்புகளை வழங்கவதற்கும் இந்த அமைப்பானது காரணமாக இருக்கிறது. இந்த அமைப்பிற்காக, சம்பளம் அல்லது ஆதாயம் ஏதும் இல்லாமல் பலர் தன்னார்வலர்களாக வேலை செய்து வருகின்றனர். சமீபத்தில், இந்த அமைப்பின் 15வது வருட விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில், அகரம் அமைப்பு மூலம் படித்து மருத்துவரான மாணவர்கள், நல்ல வேலையில் இருக்கும் மாணவர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
இவ்வளவு பேரை வளர்த்து விட்ட சூர்யாவையும் அவரது குடும்பத்தினரையும் பலரும் பாராட்டி வந்தனர். இதற்கு சில நாட்கள் கழித்து சூர்யா முதல்வரை சந்தித்தாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், இவர் அடுத்து அரசியலில் களம் காண்பதற்காகத்தான் இப்படிப்பட்ட முயற்சிகளை எடுத்தாரா என்கிற கேள்வியும் எழுந்தது. அதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில்தான் தற்போது அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சூர்யாவின் படங்கள்:
நடிகர் சூர்யாவிற்கு, கடந்த சில ஆண்டுகளில் வெளியான படங்கள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, தற்போது அவர் கருப்பு படத்தில் நடித்து முடித்திருக்கிறார், வெங்கி அட்லூரியின் படத்திலும் நடித்து வருகிறார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ