)
Joy Crizildaa Child : பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிஸில்டா கொடுத்த புகாரால் காவல் நிலையமும் கையுமாக அலைந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில், சமீபத்தில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஜாய் கிரிஸில்டாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது.
ஜாய் கிரிஸில்டா மாதம்பட்டி ரங்கராஜ் மீது புகார்!
ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா, மாதம்பட்டி ரங்கராஜுடன் உறவில் இருப்பது குறித்த தகவல், முன்னரே வெளியாகி விட்டது. இறுதியில், சில மாதங்களுக்கு முன்பு தனக்கும் மாதம்பட்டி ரங்கராஜிற்கும் திருமணம் நடந்ததாகவும், தான் கர்ப்பமாக இருப்பதாகவும் ஜாய் கிரிஸில்டா போட்டோ வெளியிட்ட பிறகு, இந்த விவகாரம் பூகம்பமாக வெடித்தது. காரணம், மாதம்பட்டி ரங்கராஜ் ஏற்கனவே திருமணமாகி இரண்டு பிள்ளைகளுக்கு தந்தை என்பதால்.
ஜாய் கிரிஸில்டா வெளியிட்ட பாேட்டோக்கள் வீடியோக்களுக்கு, மாதம்பட்டி ரங்கராஜிடம் இருந்து ஒரு ரியாக்ஷனும் வராத நிலையில், இறுதியில் இருவரும் காவல் நிலையம் செல்ல வேண்டியதாயிற்று. தன்னை ஏமாற்றி மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்து கொண்டதாகவும், தன் வயிற்றில் வளரும் குழந்தைக்கு அவர் முழு பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என்றும் ஜாய் கிரிஸில்டா புகாரளித்தார்.
காவல் நிலையத்தில் கொடுத்த புகார் பலனளிக்கவில்லை என்று கூறிய ஜாய் கிரிஸில்டா, அடுத்து மாநில மகளிர் ஆணையத்தை நாடினார். இதில், சம்பந்தப்பட்ட இருவரிடமும் தற்போது விசாரணை நடந்து வருகிறது.

ஆண் குழந்தை பிறந்தது:
ஜாய் கிரிஸில்டா, நிறைமாத கர்ப்பிணியாக விசாரணைக்கு வந்ததும், நடக்க முடியாமல் நடந்து சென்றதும் மக்களின் அனுதாபத்தை சம்பாதித்தது. இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு, ஜாய் கிரிஸில்டாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தை பிறக்கும் முன்னரே, இதற்கு ரஹா ரங்கராஜ் என்று பெயரிட்டு ஜாய் கிரிஸில்டா குறிப்பிட்டு இருந்தார்.
தனக்கு ஆண் குழந்தை பிறந்த விவரத்தை குறிப்பிட்டிருக்கும் அவர், கூடவே இன்னொரு விஷயத்தையும் கூறியிருக்கிறார். அவர் மாதம்பட்டி ரங்கராஜிற்கும் ஒரு ஸ்பெஷல் மெசஜையும் போட்டிருக்கிறார்.
மாதம்பட்டி ரங்கராஜிற்கு சொன்ன மெசஜ்:
இப்போது, மாதம்பட்டி ரங்கராஜ் குறித்து பதிவிட்டிருக்கும் அவர், குழந்தைக்கு பிறப்பு சான்றிதழில் அவரது பெயரை குறிப்பிட்டிருப்பதை படம் பிடித்து போட்டுள்ளார். "உனக்கு இதை பெருவதற்கு தகுதியே இல்லை. ஒரு சிலவற்றை பெருமையாக இடத்தில் இருந்து இல்லாமல் வலியில் இருந்து கொடுப்போம். இதுவு அப்படித்தான்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மாதம்பட்டி ரங்கராஜ் என்ன சொல்கிறார்?
ஜாய் கிரிஸில்டா விஷயம் குறித்து, ஊடகத்தினரை சந்திக்க மறுக்கும் மாதம்பட்டி ரங்கராஜ், “ஜாய் கிரிஸில்டா நினைப்பது நடக்காது” என்று குறிப்பிட்டு இருந்தார். மேலும், முதல் முறை விசாரணைக்கு வரும் போது தனது முதல் மனைவியை அழைத்து வந்திருந்தார். இது, பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஜாய் கிரிஸில்டா, மாதம் ரூ.6,50,000 பராமரிப்பு தொகையாக மாதம்பட்டி ரங்கராஜ் தனக்கு வழங்க வேண்டும் என்று மனு கொடுத்துள்ளார். இது குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ