)
Joy Crizildaa Maintenance Money Madhampatty Rangaraj : தமிழ் திரையுலகில், கடந்த சில மாதங்களாகவே பெரிதும் கவனம் ஈர்த்துள்ள ஒரு வழக்கு, மாதம்பட்டி ரங்கராஜ் vs ஜாய் கிரிஸில்டாவுடையது. இதில், நாளுக்கு நாள் புதுப்புது அப்டேட் வெளியாகி வருகிறது.
ஜாய் கிரிஸில்டா vs மாதம்பட்டி ரங்கராஜ்:
மெகந்தி சர்கஸ் திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் மாதம்பட்டி ரங்கராஜ். சில படங்களிலேயே நடித்திருந்தாலும், மக்கள் மத்தியில் இவர் தெரிந்த முகமாக இருப்பதற்கு காரணம், இவர் பங்கேற்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான். இதன் 5வது மற்றும் 6வது சீசனில் நடுவராக இருந்தார். இவருக்கு ஸ்ருதி என்பவருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், இவர் ஜாய் கிரிஸில்டாவுடன் உறவில் இருப்பதாக தகவல் வெளியானது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, சில மாதங்களுக்கு முன்பு ஜாய் கிரிஸில்டா தனது சமூக வலைதள பக்கங்களில், மாதம்பட்டி ரங்கராஜை திருமணம் செய்து கொண்டதாகவும் கரப்பமாக இருப்பதாகவும் பதிவிட்டார். இது, மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கடுத்து தொடர்ந்து மாதம்பட்டி ரங்கராஜுடன் எடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வந்த அவர், ஒரு கட்டத்தில் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அங்கு, மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து விட்டதாக புகாரளித்தார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறி, மாநில மகளிர் ஆணையத்தில் புகாளரித்தார். இதையடுத்து, இது குறித்த வழக்கு விசாரணையானது நடைப்பெற்று வருகிறது.
பராமரிப்பு தொகை வேண்டும்!
ஜாய் கிரிஸில்டா, தற்போது சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் புதிதாக ஒரு கோரிக்கை மனுவை கொடுத்திருக்கிறார். அதில், தனக்கு மாதாமாதம் பராமரிப்பு தொகையை மாதம்பட்டி ரங்கராஜிடம் இருந்து பெற்றுத்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார். 7 மாத கர்ப்பிணியாக இருக்கும் தனக்கு, மருத்துவ செலவு, வீட்டு வாடகை, இதர செலவுகளுக்காக, ரங்கராஜ் மாதம் ரூ.6,50,000 பராமரிப்பு தொகையாக வழங்க வேண்டும் என உத்தரவிடக்கோடி, மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.
வீட்டு லீஸ், கார் EMI குறித்து ஜாய் கிரிஸில்டா பேச்சு:
மாதம்பட்டி ரங்கராஜ் குறித்து, ஜாய் கிரிஸில்டா சில வாரங்களுக்கு முன்பு ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். அப்போது தான் இப்போது தங்கியிருக்கும் வீடு மாதம்பட்டி ரங்கராஜ் லீஸ்க்கு எடுத்த வீடுதான் என்றும், இந்த வீட்டிற்கான லீஸ் தொகை குறித்தும் பேசினார். இதைத்தாண்டி, தனக்கு மாதம்பட்டி ரங்கராஜ் விலையுயர்ந்த காரை வாங்கி கொடுத்ததாகவும், அதற்கு இப்போது EMI கட்டுவது நான்தான் என்றும் தெரிவித்தார். மாதம்பட்டி ரங்கராஜை திருமணம் செய்ததில் இருந்து, தன் வேலையை விட்டதாக கூறிய அவர், இப்போது தானே அனைத்து செலவுகளையும் பார்த்துக்கொள்வது சிரமமாக இருக்கிறது என்றும் தெரிவித்திருந்தார்.
மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் கூறுவது என்ன?
மாதம்பட்டி ரங்கராஜ், இந்த விஷயத்தில் மிகவும் அமைதியாக இருந்தார். சில நாட்களுக்கு முன்புதான், இதை சட்டரீதியாக மட்டுமே எதிர்கொள்ளப்போவதாகவும், ஜாய் கிரிஸில்டா நினைப்பதை தன்னால் செய்ய முடியாது என்றும் கூறினார். இதற்கிடையில், மாதம்பட்டி ரங்கராஜ் ஜாய் கிரிஸில்டா மீது மான நஷ்ட வழக்கு தொடுத்திருந்தார். இதன் விசாரணையும் நடந்து வருகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ