)
பாடகி கெனிஷா சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அதில் தன்னை பற்றி பரவி வந்த வதந்திகளுக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார். தற்போது அவர் பேசியுள்ளது வைரலாகி வருகிறது.
கடந்த சில நாட்களாகவே, ரவி மோகன்-ஆர்த்தி ரவியின் பிரச்சனை குறித்து பரவலாக பலர் பேசி வருகின்றனர். ரவி, தனது மனைவியை விட்டு கடந்த ஆண்டு பிரிவதாக அறிவித்தார். அதன் பிறகு, தான் அவரிடமிருந்து விவாகரத்து பெறப்போவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு, தனக்கு தெரிவிக்கப்படாமல் வெளியானதாக ஆர்த்தி ரவி தனது அறிக்கையில் பதில் கொடுத்தார். இந்த நிலையில், ரவி மோகனின் தோழி என்று முதலில் கூறப்பட்ட கெனிஷா, அதன் பின்பு அவர் வாழ்வின் ஒளியாக மாறினார்.
ஆரத்தி-ரவி பிரச்சனை ஆரம்பித்தற்கும், அவர்கள் இப்பாேது பிரிந்து இருப்பதற்கும் காரணம் கெனிஷாதான் என்று பலர் கூறி வந்தனர், மேலும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடிகர் ரவி மோகனுடன் தான் ஒரு கல்யாண பங்க்ஷனில் ஒரே வண்ண உடை அணிந்தது குறித்து பலர் கேள்வி எழுப்பி வரும் நிலையில் அது குறித்தும் கெனிஷா பேட்டி ஒன்றில் தெளிவாக பேசி இருக்கிறார். தற்போது கெனிஷாவின் இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இது தொடர்பாக கெனிஷா பேசும்போது, நான் சமீபத்தில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகள் திருமணத்தில் கலந்து கொண்டேன். அப்போது என்னுடன் ரவி மோகனும் வந்திருந்தார். எங்களின் ஒரே வண்ணம் உடையை பார்த்து பலர் சோசியல் மீடியாவில் பேசி வந்தனர். அதற்கு காரணம் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் எனக்கு ரொம்பவும் தெரிந்தவர். அவருடைய குடும்பத்தோடு நான் பல வருடங்களாக பழகி வருகிறேன். அவர் அந்த கல்யாணத்திற்கு என்னை வர வேண்டும் என்று கூப்பிட்டு இருந்தார்.
அதனால் தான் நான் செண்டறிந்தேன். அதே போல நண்பர்கள் ஒரே வண்ண உடை அணிவது தப்பில்லை. ஆனால் என்னை பற்றி பல தவறான கருத்துக்கள் பரவப்பட்டது. அது மட்டுமின்றி தயாரிப்பாளர் ஐசரி கணேசனையும் சிலர் திட்டி இருந்தார்கள். முதலில் நான் ஐசரி கணேசனிடம் மன்னிப்பு கேட்குக் கொள்கிறேன், "மன்னிச்சுக்கோங்க சார் உங்களுடைய மகள் கல்யாணத்தில் பரபரப்பு ஏற்படுத்த வேண்டும் என்று நான் நினைக்கவில்லை, உங்களுக்கு என்னால் சங்கடம் வந்திருக்குமோ என்ற வருத்தம்" என்று கெனிஷா பேசியிருக்கிறார்.
அதுமட்டுமின்றி தன்னை பற்றி தவறாக கமாண்ட் பலர் போட்டுக் கொண்ட தான் வருகின்றனர். அவர்களுக்கு நாம் கூறுவது என்னவென்றால் இந்த கமெண்ட்கள் என்னை ஒன்றும் செய்யாது. இவை எந்த வகையிலும் ரியாக்ட் செய்ய வைக்காது. எனக்கு கோபப்படுத்த வேண்டும் என்றே சிலர் அவர்களுடைய கோபத்தை எல்லாம் கமெண்ட்களில் கொட்டி வருகின்றனர். அதை பார்க்கும்போது எனக்கு சிரிப்பதான் வருகிறது என்று கூறியுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ