Kettimelam Today's Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒருமணிநேர மெகா தொடர் கெட்டிமேளம்.
கெட்டி மேளம் நேற்றைய எபிசோட்: அஞ்சலி கதவை திறக்க முயற்சி செய்து பிறகு வீட்டில் உள்ள பொருட்களை இடம் மாற்றி வைத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

கெட்டி மேளம் இன்றைய எபிசோட்: அதாவது, மகேஷ் வீட்டிற்கு வந்ததும் அஞ்சலி உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் என்று சொல்லி அவனது கண்களை மூடி அழைத்து சென்று பொருட்களை இடம் மாற்றி வைத்ததை காட்ட மகேஷ் டென்ஷனாகி அஞ்சலியை திட்டி விடுகிறான், இதனால் அஞ்சலி சோகமாகி ரூமுக்கு சென்று விடுகிறாள்.
இதனை தொடர்ந்து இங்கே சிவராமன் ஆபிசில் இருந்து வீட்டிற்கு வர தியா சோகமாக இருப்பதை பார்த்து என்னாச்சு என்று கேட்க என்கூட விளையாட யாருமே இல்ல, போர் அடிக்குது என்று சொல்ல அஞ்சலி நல்லா பாடுவா இரு அவளை கூப்பிடுறேன் என்று அஞ்சலி வீட்டில் இருப்பதாக நினைத்து அவளை பேர் சொல்லி கூப்பிடுகிறார்.

பிறகு பாலமுருகன் நிலா சோறு சாப்பிடுவதற்காக தட்டை தட்டி எல்லாரையும் கூப்பிடுகிறான். அஞ்சலியுடன் போனில் பேசி கொண்டு நிலா சோறு சாப்பிடலாம் என்று அவளுக்கு போன் செய்ய அஞ்சலி போனை எடுக்காமல் இருக்கிறாள். இதனால் சிவராமன் மகேஷ்க்கு போன் செய்கிறார். எல்லா பொருள்களையும் மீண்டும் இடம் மாற்றி வைக்கும் மகேஷ் போனை எடுக்கிறான்.
அஞ்சலி போனை எடுக்கவில்லை என்று சொல்ல அவள் தூங்கி கொண்டு இருப்பதாகவும் 10 நிமிஷத்தில் மீண்டும் போன் செய்வதாகவும் சொல்கிறான். வெற்றி தீபாவின் வண்டியை சர்வீஸ் செய்து இங்கே கொண்டு வர அப்போது இந்த நிலா சோறு சாப்பிட அவனும் சேர்ந்து கொள்கிறான்.
அடுத்து மகேஷ் அஞ்சலியை எழுப்பி மன்னிப்பு கேட்டு உனக்கு ஒரு சர்ப்ரைஸ் என்று சொல்லி கிழே அழைத்து வந்து வீடியோ கால் செய்து கொடுக்கிறான். எல்லாரும் அஞ்சலியுடன் சேர்ந்து நிலா சோறு சாப்பிட துளசி வெற்றியை பார்த்து முறைக்கிறாள்.
வெற்றி இந்த குடும்பத்தை பத்தி நான் என்னமோ நினைத்து கொண்டு இருந்தேன்.. ஆனால் என் அக்கா நல்ல குடும்பத்துல தான் வாழ வந்திருக்கா என்று சந்தோஷப்படுகிறான். பிறகு துளசி தியாவை தூங்க வைக்க அழைத்து செல்ல தியா ஏன் மா அந்த அங்கிளை திட்டிகிட்டே இருக்கீங்க என்று கேட்கிறாள். துளசி அந்த அங்கிளை எனக்கு பிடிக்காது என்று சொல்கிறாள்.

தியா அந்த அங்கிள் தான் என்னை காப்பாற்றியது என்று சொல்ல வர துளசி நீ சின்ன பொண்ணு, இதை பத்தியெல்லாம் பேச கூடாது என்று தடுத்து விடுகிறாள். அடுத்த நாள் காலையில் மகேஷ் அஞ்சலி டல்லாகவே இருப்பதை பார்த்து மீண்டும் மன்னிப்பு கேட்கிறான். சின்ன வயதில் இருந்தே எனக்கு ஒரு பொருள் வைத்த இடத்தில் இருக்க வேண்டும், இல்லையென்றால் கோபம் வரும் என்று சொல்லி அவளுக்கு காபி போட்டு கொடுத்து சமாதானம் செய்கிறான்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்கபோவது என்ன என்பது குறித்து அறிய கெட்டிமேளம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









