மகேஷ்க்கு எகிறும் பிபி.. முருகனின் வருகையால் நடக்க போவது என்ன? - கெட்டிமேளம் இன்றைய எபிசோட் அப்டேட்

Kettimelam Today's Episode Update: மகேஷ் வீட்டில் ஜாமரை செட் செய்ய எல்லாருடைய போனும் டவர் கிடைக்காமல் போகிறது. கவினை போட்டோ எடுத்த ஏஜென்ட் அதை மஹேஷ்க்கு தெரியப்படுத்த போன் செய்து கொண்டே இருக்க போன் ரீச் ஆகவில்லை. 

Written by - Keerthana Devi | Last Updated : May 26, 2025, 12:04 PM IST
    • ஜீ தமிழில் புதிதாக தொடங்கியிருக்கும் சீரியல்..
    • 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது..
    • இன்றைய எபிசோட் அப்டேட்..
மகேஷ்க்கு எகிறும் பிபி.. முருகனின் வருகையால் நடக்க போவது என்ன? - கெட்டிமேளம் இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கெட்டிமேளம். 

Add Zee News as a Preferred Source

கெட்டி மேளம் நேற்றைய எபிசோட்: இந்த சீரியலின் வெள்ளிக்கிழமை எபிசோடில் கவின் மகேஷை பார்க்க வந்த நிலையில் இன்று நடக்கபோவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

Kettimelam Today's Episode Update: மகேஷ் வீட்டில் ஜாமரை செட் செய்ய எல்லாருடைய போனும் டவர் கிடைக்காமல் போகிறது. கவினை போட்டோ எடுத்த ஏஜென்ட் அதை மஹேஷ்க்கு தெரியப்படுத்த போன் செய்து கொண்டே இருக்க போன் ரீச் ஆகவில்லை. 

அஞ்சலி டவர் கிடைக்காத காரணத்தால் கீழே இறங்கி வர டைனிங் டேபிளில் சாப்பிட்டு கொண்டிருந்த கவின் வேண்டுமென்றே மேலே சாப்பாட்டை கொட்டி கொண்டு ரெஸ்ட் ரூம் சென்று விடுகிறான். கீழே வந்த அஞ்சலி அங்கும் டவர் கிடைக்காததால் மீண்டும் ரூமுக்கே செல்வதாக சொல்லி கிளம்புகிறாள். 

பிறகு மகேஷ்க்கு ஏதோ ஒன்று தொண ஜமாரை ஆப் செய்ய ஏஜென்ட் தொடர்ந்து போன் செய்தது தெரிய வருகிறது, உடனே அவனுக்கு போன் செய்ய போன் ரீச் ஆகவில்லை. ஒரு கட்டத்தில் போன் கனெக்ட் ஆக கவின் போட்டோவை அனுப்புவதாக சொல்லி போனை வைக்கிறான். 

போட்டோவை அனுப்புவதற்குள் ஒருவன் டிடெக்டிவ் மொபைல் போனை பிக் பாக்கெட் அடித்து விட்டு செல்கிறான். இதற்கிடைப்ப கேப்பில் லட்சுமி அஞ்சலிக்கு போன் செய்து உன்னை பார்க்க நான் அப்பா பாட்டி வரோம் என்று சொல்ல அஞ்சலி சந்தோசப்படுகிறாள். மகேஷிடம் விஷயத்தை சொல்ல அவன் யாரெல்லாம் வராங்க என்று விசாரிக்கிறான். 

kettimelam

அஞ்சலி இங்கு நடப்பதையெல்லாம் சொல்லிடுவாளா என்று பயமும் கொள்கிறான், கவின் அஞ்சலிக்கு தெரியாமல் வெளியே கிளம்பி வர ஆட்டோவில் வந்து இறங்கிய லட்சுமி, சிவராமன், பாட்டி ஆகியோர் கவினை பார்த்து பேசுகின்றனர். 

கவின் எதையோ சொல்லி சமாளித்து கிளம்ப இவர்கள் மூவரும் மட்டும் வந்திருப்பதை பார்த்து மகேஷ் நிம்மதி அடைகிறான். பிறகு மீண்டும் காலிங் பெல் அடிக்க கதவை திறக்க முருகன் நிற்க மகேஷ் டென்ஷன் ஆகிறான். 

மேலும் ஒரு ரூமுக்குள் இருந்து சத்தம் கேட்டு கொண்டே இருக்க அஞ்சலி கதவை திறக்க போக மகேஷ் தடுக்கிறான், அவனது பதற்றமும் பயமும் மேலும் அதிகரிக்கிறது. இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன? ரூமுக்குள் இருப்பது என்ன என்பது குறித்து அறிய கெட்டிமேளம் சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | ஜெயிலர் 2வில் மெகா சர்ப்ரைஸ்! 11 வருடங்கள் கழித்து ரஜினியுடன் நடிக்கும் பிரபல நடிகர்..

மேலும் படிக்க | ரவி மோகனால் ஏற்பட்ட பிரச்சனை! பாடகி கெனிஷா எடுத்த அதிரடி முடிவு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News