தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒரு மணி நேர மெகா தொடர் கெட்டி மேளம்.
கெட்டி மேளம் நேற்றைய எபிசோட்: லட்சுமி, சிவராமன், பாட்டி மற்றும் முருகன் ஆகியோர் அஞ்சலி வீட்டிற்கு வர மகேஷ் டென்ஷனான நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
கெட்டி மேளம் இன்றைய எபிசோட்: அதாவது, வெற்றியின் குடும்பத்தினர் பத்திரிக்கை அடிப்பது குறித்து முனுசாமி வீட்டிற்கு கிளம்பி வருகின்றனர். எல்லாரும் வெற்றியை திவ்யாவிடம் தனியாக பேச சொல்கின்றனர்.
மறுபக்கம் மகேஷ் வீட்டில் லட்சுமி, பாட்டி, அஞ்சலி ஆகியோர் சமைத்து கொண்டிருக்க கிச்சன் சுத்தம் இல்லாமல் இருப்பதை பார்த்து மகேஷ் டென்ஷன் ஆகிறான், ஆனால் அதை வெளியே காட்ட முடியாமல் தவிக்கிறான்.

மேலும் பாட்டி இவ்வளவு பெரிய வீட்டை தனியா எப்படி சுத்தம் பண்றீங்க என்று கேட்க அஞ்சலி சுத்தம் செய்ய ஆட்கள் இருக்காங்க, ஆனால் இதுவரைக்கும் நான் அவங்களை பார்த்ததே இல்ல என்று சொல்கிறாள். மகேஷ் இவர்கள் பேசுவதை ஒட்டுக்கேட்க அஞ்சலி இங்கு நடப்பதை சொல்லிடுவாளோ என்று அவனது டென்ஷன் அதிகமாகிறது.
இடையில் புகுந்த முருகன் வீடு சூப்பராக இருப்பதாக சொல்லி சுத்தி பார்க்க செல்ல மகேஷ்க்கு அஞ்சலி கொடுத்த போட்டோ நினைவுக்கு வந்து ஓடி போய் அந்த போட்டோவை மறைத்து வைக்கிறான். அடுத்து துளசிக்கு பார்த்த மாப்பிள்ளை சிவராமனுக்கு போன் செய்து கல்யாணம் குறித்து பேச துளசி 2 மாதம் டைம் கேட்ட விஷயத்தை சொல்கிறார்.
மகேஷ் நிச்சயம் முடிந்த பிறகு எதுக்கு 2 மாசம் என்று கேட்க உடனே அஞ்சலி நான் அக்காகிட்ட பேசுறேன் என்று போன் செய்கிறாள். மறுபக்கம் வெற்றி திவ்யாவிடம் எலெக்சன் வருவதால் கல்யாணத்தை தள்ளி போடலாம் என்று கேட்க திவ்யா கல்யாணம் சீக்கிரம் நடக்கணும் என்று சொல்லி ஷாக் கொடுக்கிறாள்.
பிறகு அஞ்சலி துளசியிடம் பேச அவள் தியாவுக்கு ஹாஸ்பிடல் செலவுகளை பார்க்க இந்த வேலை ரொம்ப முக்கியம், சேர்ந்த உடனே லீவ் போட முடியாது. அதனால் கல்யாணத்தை தள்ளி வைப்பதாக சொல்கிறாள். அடுத்து ரேவதி முருகன் கடைக்கு வராததால் என்னாச்சு என்று தெரியாமல் கிளம்பி லட்சுமி வீட்டிற்கு வருகிறாள்.
முருகன் குறித்து விசாரிக்க அவன் அஞ்சலி வீட்டிற்கு சென்றிருக்கும் விஷயத்தை சொல்ல அஞ்சலியின் போன் நம்பரை வாங்கி கொண்டு வந்து வீடியோ கால் செய்கிறாள். ரேவதி என்ற பெயரை கேட்டதும் முருகன் குஷியாக அஞ்சலி அவனை கலாய்க்கிறாள். அம்மா அப்பா கிட்ட சொல்லி கல்யாணம் முடிச்சிடலாம் என்று சொல்ல முருகன் முதலில் காதலை சொல்வதாக சொல்கிறான்.
அடுத்து வெற்றி கல்யாணத்தை எப்படி நிறுத்துவது என யோசனையில் இருக்க அவனது நண்பர்கள் இரண்டு பேரும் நீங்க தான் என்ற உண்மையை சொல்லுங்க, உங்க மனசை புரிஞ்சுக்கிட்டு ஏத்துப்பாங்க என்று சொல்கின்றனர். இந்த சமயத்தில் துளசியே வெற்றிக்கு போன் செய்கிறாள்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டிமேளம் சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
மேலும் படிக்க | மேனேஜரை தாக்கிய நடிகர் உன்னி முகுந்தன்! இவ்வளவு கொடூரமானவரா? முழு தகவல்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









