Kettimelam Today's Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒருமணிநேர மெகா தொடர் கெட்டிமேளம்.
கெட்டி மேளம் நேற்றைய எபிசோட்:இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெற தொடங்கிய நிலையில் இன்றைய நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, சிவராமன் குடும்பம் திருவிழா நடக்கும் இடத்திற்கு வருகின்றனர். பிறகு உங்க சம்பந்தி வரலையா என்று கேட்க ஈஸ்வரமூர்த்தி மற்றும் முனுசாமி குடும்பத்தினர் ஒன்றாக வருகின்றனர். அதன் பிறகு நாங்க அரசியலில் எதிரியாக இருக்கலாம் ஆனால் தற்போது அமைதியாக போகிறோம் என்று அறிவிக்கின்றனர்.
அதாவது என்னுடைய மகன் வெற்றிக்கும் முனுசாமியின் மகள் திவ்யாவுக்கும் கல்யாணம் நடக்க போவதாக மக்களுக்கு அறிவிப்பை கொடுக்கின்றனர். அடுத்ததாக தர்மகர்த்தா வரதராஜன் குடும்பத்தினர் வருகின்றனர்.
இவர்களுடன் கவின் வர அஞ்சலியை பார்த்த அவன் அஞ்சலி கண்ணில் படாமல் போன் வந்தது போல போனை எடுத்து கொண்டு நகர்ந்து சென்று விடுகிறான். அதன் பிறகு ஈஸ்வரமூர்த்தி முனுசாமி ஆகியோர் தர்மகத்தாவை வரவேற்று தங்களது குடும்பத்தை அறிமுகம் செய்து வைக்கின்றனர்.

ஈஸ்வரமூர்த்தி சிவராமன் குடும்பத்தை அறிமுகம் செய்ய வரதராஜன் அதை கண்டுகொள்ளாமல் உள்ளே சென்று விடுகிறார். இதனால் லட்சுமி வருத்தமடைய சிவராமன் ஆறுதல் கூறுகிறார். துளசி மற்றும் அஞ்சலி என இருவரும் வெற்றிக்கு வாழ்த்து சொல்ல வெற்றி ஃபீல் செய்கிறான்.
அடுத்ததாக ஈஸ்வரமூர்த்தி, முனுசாமி என இருவருக்கும் பொதுவான எதிரி ஒருவன் என்ட்ரி கொடுக்கிறான். இந்த திருவிழா நல்லபடியாக நடக்கக்கூடாது என திட்டம் போட்டு சிலையை கடத்த பிளான் போடுகிறான்.
பிறகு எல்லோரும் சிலையை ஆற்றுக்கு கொண்டு போய் பூஜை செய்து திரும்ப கொண்டு வருவதற்காக கிளம்ப வில்லன் செய்த ஏற்பாட்டால் துளசி, அஞ்சலி கொண்டு சென்ற சிலையை கடத்தி செல்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டி மேளம் சீரியலை உங்கள் ZEE தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.









