)
Kuraishi Made Fun Of Madhampatty Rangaraj CWC : தமிழ் திரையுலகில் தெரிந்த முகமாக இருக்கிறார் மாதம்பட்டி ரங்கராஜ். மெகந்தி சர்கஸ், பென்குயின் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர், பிரபலமான சமையல் கலைஞராகவும் இருக்கிறார். எல்லா செலிபிரிட்டிக்களின் வீட்டு விசேஷங்களுக்கும் இவர்தான் கேட்டரிங் வேலை செய்து காெடுப்பார். இந்த நிலையில், அவர் பேசுபொருளாக மாறுவதற்கு காரணம் அவரது 2வது திருமணம்தான்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5வது சீசனில் புது நடுவராக வந்தவர், மாதம்பட்டி ரங்கராஜ். இவர் கடந்த சில நாட்களாக இணையத்தில் பேசுபொருளாக இருக்கிறார். காரணம், இவருடன் திருமணம் ஆகிவிட்டதாக செலிப்ரிட்டி ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா பதிவிட்டிருந்தார். கூடவே, தான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் பதிவிட்டிருந்தார்.
இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. காரணம், மாதம்பட்டி ரங்கராஜ் ஏற்கனவே திருமணம் ஆனவர். அவரது மனைவியின் பெயர் ஸ்ருதி. இவர்களுக்கு 2 குழந்தைகளும் இருக்கின்றனர். திருமண உறவில் இருக்கும் இவர், இப்படி இன்னொருவரை திருமணம் செய்து இருந்தது பெரும் பேசுபொருளாக மாறியது. தங்களது உறவு குறித்து ஜாய் கிரிஸில்டா தொடர்ந்து பதிவிட்டு வரும் நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் இது குறித்து வாய் திறவாமல் இருக்கிறார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி, கிட்டத்தட்ட இறுதிக்கட்டதை எட்டி விட்டது. இந்நிகழ்ச்சியில் மாதம்பட்டி ரங்கராஜ் 3 நடுவர்களுள் ஒருவராக இருக்கிறார். இவரை பற்றி யாரேனும் இன்ட்ரோ கொடுக்கும் போது “அவர் நீதி, நேர்மை, நியாயம்” என்றுதான் அழைப்பர். அப்படி, சமீபத்திய எபிசோடிலும் அவருக்கு இன்ட்ரோ கெடுக்கப்பட்டது.
குரேஷி செஞ்சு விட்டாப்ல
— Nandhan Talkz (@Nandhan_Talkz) August 23, 2025
ஷோ பாக்கும்போது எனக்கே தோனுச்சு pic.twitter.com/YdZOABrwdM
ரக்ஷன், “அவர் தாங்கைய்யா நீதி” என்று ரகுவரன் வேடம் போட்டிருந்த குரேஷியிடம் கூறினார். அதற்கு ரக்ஷன், “அவரா நீதி? அவர் முகத்தை பார்த்து நீதி என்று சொல்லிவிட்டு ஒரு 10 செகண்ட் சிரிக்காமல் இருங்க பார்ப்போம்..” என்றார். இதை பார்த்துவிட்டு மாதம்பட்டி ரங்கராஜ் அவரை இறங்கி வந்து அடித்தார். இது தற்போது இணையவாசிகள் மத்தியில் பேசபொருளாக மாறியிருக்கிறது. ஒரு சிலர் அந்த நகைச்சுவை கேஷுவலாக நடந்திருக்கும் என்று சொல்ல, இன்னும் சிலர் மாதம்பட்டியை குரேஷி முகத்திற்கு நேராக கலாய்த்திருப்பதாக சிலர் கூறி வருகின்றனர்.
ஜாய் கிரிஸில்டா சமீபத்தில் பகிர்ந்த வீடியாே..
ஜாய் கிரிஸில்டா, சில நாட்களுக்கு முன்பு மாதம்பட்டி ரங்கராஜுடன் நெருக்கமாக இருக்கும் வீடியாேவை பதிவிட்டருந்தார். அந்த வீடியோவை எடிட் செய்தது தன் கணவர் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இதுவும், நெடடிசன்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படும் விஷயமாக இருக்கிறது. இது குறித்து, மாதம்பட்டி எதுவுமே பேசாமல் இருப்பது குறித்தும் அனைவரும் பேசி வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ