)
Joy Crizildaa Latest Instagram Post: பிரபல நடிகரும் சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை ஏமாற்றிவிட்டதாக ஜாய் கிரிஸில்டா பகிர்ந்த விஷயங்கள் தற்போது பகீர் கிளப்பி வைரலாகி வருகிறது. இதையடுத்து, இவர் சற்று முன் வெளியிட்டுள்ள போஸ்ட் ஒன்று வைரலாகி வருகிறது.
மாதம்பட்டி ரங்கராஜ்-ஜாய் கிரிஸில்டா சர்ச்சை:
குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர், மாதம்பட்டி ரங்கராஜ். பல பிரபலங்களின் வீடுகளுக்கு கேட்ரிங் சர்வீஸ் செய்யும் இவர், சில படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். ஸ்ருதி என்பவரை ஏற்கனவே திருமணம் செய்து, இரண்டு குழந்தைகளுக்கு தகப்பன் ஆன இவர், தன்னை காதலித்து கர்ப்பமாக்கி ஏமாற்றியதாக சமீபத்தில் ஜாய் கிரிஸில்டா பகீர் கிளப்பினார்.
தானும் மாதம்பட்டி ரங்கராஜும் 2023 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டதாகவும், தாங்கள் இருவரும் ஒன்றரை வருடங்கள் ஒன்றாக வசித்து வந்ததாகவும் கூறிய அவர், அவரால் இரு முறை கருக்கலைப்பு செய்துள்ளதாகவும், இப்போது தான் 7 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
திடீரென்று தன் வாழ்வில் இருந்து மாதம்பட்டி ரங்கராஜ் மறைந்து போய் விட்டதாகவும், தன் குழந்தைக்கு அவர் உரிமை கொடுக்க வேண்டும் என்றும் சமீபத்தில் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.
கண்டுகொள்ளாத மாதம்பட்டி ரங்கராஜ்
ஜாய் கிரிஸில்டா கோர்ட் படி ஏறிய பின்பும் கூட, இவரது குற்றச்சாட்டுகளுக்கு இப்போது வரை மாதம்பட்டி ரங்கராஜ் பதிலளிக்க தயாராக இல்லை. சில நாட்களுக்கு முன்பு, ஜாய் கிரிஸில்டாவால் மாதம்பட்டி பகஷாலா நிறுவனத்திற்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டதாக வழக்கு தொடர்ந்தார். அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் கூறியிருக்கிறது. மேலும் ஜாய் கிரிஸில்டா வழக்கிலும் அவரிடம் விசாரணையை மேற்கொண்டது.
என்ன பிரச்சனை?
மாதம்பட்டி ரங்கராஜ்-ஜாய் கிரிஸில்டா இடையே உறவு இருப்பதாக சில மாதங்ளகளுக்கு முன்பே தகவல்கள் பரவியது. அந்த சமயத்தில் இது குறித்து யாரும் எதுவும் வாய் திறக்கவில்லை. கடந்த ஜூலை மாதம் ஜாய் கிரிஸில்டா தனக்கும் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் திருமணமான புகைப்படங்களையும், தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தையும் வெளியிட்டார். இதிலிருந்து இவர்கள் உறவில் இருந்த பிரச்சனைகள் குறித்து அனைவருக்கும் தெரிய வந்தது. நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட ஜாய் கிரிஸில்டா, இதே போல மாதம்பட்டி ரங்கராஜ் பல பெண்களை ஏமாற்றியதாக தன்னிடம் பலர் மெசஜ் செய்ததாக பேசினார். மேலும், தன்னை அவர் சில மாதங்களுக்கு முன்பு அடித்து துன்புருத்திய தகவல்களையும் தெரிவித்தார்.
மாதம்பட்டி ரங்கராஜுக்கு செக் வைத்த ஜாய் கிரிஸில்டா
இந்நிலையில் தற்போது ஜாய் கிரிஸில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுட சுட போஸ்ட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "ஒருத்தன் குற்ற உணர்ச்சியே இல்லாம அலைறான்".. பெருமையாக தலையெழுப்பிக்கிட்டு நடக்கறாம்.. நீ உன்னை ஒரு உத்தமன் போலே காட்டிக்கொண்டு சுற்றிக்கிட்டே இருக்கிறாய்... உன்னைப் போன்ற மனிதாபிமானம் இல்லாத ஒருவனை யாரும் பத்திருக்க முடியாது..."

நீங்க ஓடினாலும் சரி, ஒளிந்தாலும் சரி கருவில் இருக்கும் உன் குழந்தையின் சாபம் உன்ன நிழலாகவே தொடரும்... ஒரு நாளும் உன்னை விட்டு போகாது.. என்று பதிவிட்டுள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ