)
Saravanan First Wife Police Compliant : தமிழ் திரையுலகில் முக்கிய நடிகராக விளங்குபவர், நடிகர் சரவணன். இவர், தனது 2வது மனைவியுடன் சேர்ந்து தன்னை மிரட்டுவதாக முதல் மனைவி பரபரப்பு புகார் அளித்திருக்கிறார். இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.
சரவணன் மீது புகார்:
அமீர் இயக்கிய பருத்திவீரன் திரைப்படத்தில் ஹீரோ கார்த்திக்கு ‘சித்தப்பு’ கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தவர் சரவணன். அதன் பிறகு அவர் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும், அந்த கேரக்டர் போல எதுவுமே அவருக்கு அமையவில்லை. இதனால் பலரும் அவர் ‘சித்தப்பு’ சரவணன் என்றே அழைத்து வருகின்றனர். இந்த நிலையில், அவரது முதல் மனைவி சூர்யாஸ்ரீ அவர் மீது பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கிறார்.
சென்னை ஆவடி காவல் நிலையத்தில் அவர் அளித்திருக்கும் புகாரில் குறிப்பிட்டிருக்கும் விஷயங்கள், பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. சரவணன், தனது இரண்டாவது மனைவி ஸ்ரீதேவியுடன் சேர்ந்து, தன்னை அடித்து துன்புருத்துவதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதகாவும் சூர்யா ஸ்ரீ தெரிவித்திருக்கிறார்.
சிக்கிய வீடியோ ஆதாரம்:
சூர்யா ஸ்ரீ, கொலை மிரட்டல் புகாருடன் சேர்த்து, அது தொடர்பான வீடியோ ஆதாரத்தையும் பதிவிட்டிருக்கிறார். அதில், தன் முதல் மனைவியை அவர் மிரட்டுவது பதிவாகி இருக்கிறது. வீட்டுக்குள் புகுந்து, 2வது மனைவி தானும் தன் கணவரும் இருக்கும் புகைப்படத்தை எடுத்ததாகவும், 18ஆம் தேதி உன்னை கொன்று விடுவேன் என்று கூறி மிரட்டுவதாகவும் சூர்யாஸ்ரீ புகார் அளித்திருக்கிறார்.
ஒரே அடுக்குமாடி குடியிருப்பு..
நடிகர் சரவணன், சூர்யாஸ்ரீயை திருமணம் செய்யும் முன், அவருடன் சில ஆண்டுகள் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக கூறப்படுகிறது. பின் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். பின்னர், 2015ஆம் ஆண்டு தனக்கு ஆண் குழந்தை வேண்டுமென்று கூறி, முதல் மனைவியை சம்மதிக்க வைத்து, இரண்டாவதாக ஸ்ரீதேவியை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். தற்போது ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் இவர்கள், தனித்தனி வீட்டில் வாழ்வதாக தெரிகிறது. சரவணன் இரண்டாவது மனைவியுடனும், முதல் மனைவி தனியாகவும் வசிப்பதாகவும் கூறப்படுகிறது. வீடு யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான பிரச்சனையில், தன்னை கொன்று விடுவேன் என்று மிரட்டுவதாக புகாரில், சூர்யாஸ்ரீ தெரிவித்துள்ளார்.
உயிருக்கு ஆபத்து..
இப்படி நடிகர் சரவணன் மீது புகார் எழுவது இது முதன்முறையல்ல. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, தான் சொந்த செலவில் கட்டிய வீட்டில் இருந்து தன்னை வெளியேறும்படி சரவணன் மிரட்டுவதாக அவர் முதல் மனைவி புகாரளித்திருக்கிறார். அப்போது தன் உயிரிக்கு ஏதாவது ஒன்று என்றால் அதற்கு சரவணன்தான் காரணம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
சரவணன் சர்ச்சையில் சிக்குவது இது முதன்முறையல்ல. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் கலந்து கொண்ட போது, பெண்கள் குறித்து அவதூறாக பேசியதற்காக நிகழ்ச்சியின் பாதியிலேயே அவர் வெளியேற்றப்பட்டார். இவர் மீது சில மகளிர் அணியினர் அப்போது புகாரும் அளித்திருந்தனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ