)
Tanushree Dutta : பிரபல நடிகை தனுஸ்ரீ தத்தா, தனது சொந்த வீட்டிலேயே தனக்கு வன்கொடுமை நிகழ்வதாக கூறி, வீடியோ வெளியிட்டிருக்கிறார். இது, பாலிவுட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இவருக்கு என்ன நிகழ்ந்தது? யார் இவரை வன்கொடுமை செய்தது? இவர் வீடியோவில் என்ன செய்கிறார்? இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.
தனுஸ்ரீ தத்தா:
நடிகை தனுஸ்ரீ-யை, தமிழ் ரசிகர்கள் அனைவரும் தீராத விளையாட்டுப்பிள்ளை படத்தில் பார்த்திருப்போம். இதில் அவர், மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக, ஜோதி எனும் கதாப்பாத்திரத்தில்னடித்திருப்பார். இதற்கு முன்னர் இந்தியிலும் அவர் சில படங்களில் நடித்திருக்கிறார். பாலிவுட்டில் அதிக பட வாய்ப்புகள் வந்ததால், அங்கேயே செட்டில் ஆகி விட்டார். 2013க்கு பிறகு அவர் திரையுலகின் பக்கமே எட்டிப்பாக்கவில்லை என்று கூறப்படுகிறது.
படங்களை விட, இவரை பலரும் #MeToo விவகாரத்திற்கு பிறகுதான் அதிகமாக அடையாளம் கண்டுகொண்டனர். 2018ஆம் ஆண்டு, இந்த #MeToo பற்றி இந்தியாவில் அதிகமாக பேசிய போது, அவர் பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இது, அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. இதையடுத்து, அவர் இன்ஸ்டாகிராமில் புதிதாக ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.
வைரல் வீடியோ:
தனுஸ்ரீ பதிவிட்டிருக்கும் வீடியோவில் அவர், தன் வீட்டில் உள்ளவர்களே, தன்னை துன்புருத்துவதாக கூறியிருக்கிரார். வீட்டில் இருப்பவர்கள், வேண்டுமென்றே அறிமுகம் அற்ற சில பேரை வேலைக்காரர்களாக நியமித்ததாகவும், அவர்கள் திருட்டு மற்றும் பிற க்ரைம் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார். 2018-ல் மீ டூ-வில் பாலியல் புகார் கூறியது முதல் இதுவரை நான் தொடர்ந்து துன்புறுத்தப்படுகிறேன். எனது வீட்டிலேயே நான் துன்புறுத்தலுக்கு உள்ளாகிறேன். எனக்கு நடக்கும் துன்புறுத்தல்களை நான் போலீஸாரை தொடர்பு கொண்டு தெரிவித்தேன். அவர்கள் காவல் நிலையம் வந்து முறைப்படி புகார் கொடுக்க சொல்கிறார்கள்.
நான் நாளை புகார் அளிக்கலாம் என்று இருக்கிறேன்.
இன்று என் உடல்நிலை சரியில்லை. கடந்த 4, 5 ஆண்டுகளாகவே நான் தொடர்ச்சியாக துன்புறுத்தப்படுகிறேன். அது எனது உடல்நிலையில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனது வீட்டில்கூட என்னால் வேலை செய்ய முடியவில்லை. என் வீடே அலங்கோலமாகக் கிடக்கிறது.
தனுஸ்ரீ அந்த வீடியோவில் எனது சொந்த வீட்டில் ‘அவர்கள்’ துன்புறுத்துகின்றனர் என்று வரிக்கு வரி சொன்னாலும், யார் அந்த நபர்கள் என்று சொல்லவில்லை. இதனையடுத்து பலரும் தனுஸ்ரீ தாத்தாவுக்கு ஆதரவாக பேசி வருகின்றனர். யார் அந்த நபர்கள் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தனுஸ்ரீ இன்னொரு வீடியோவையும் வெளியிட்டிருக்கிறார். அதில் தன் வீட்டிற்கு மேல் இருப்பவர்கள் ட்ரில்லிங் போடுதையும், டம் டம் என்று அடிப்பதையும் பதிவு செய்திருக்கிறார். இது போன்ற சத்தம் எப்போதும் ஓய்வதில்லை என்றும் தெரிவித்திருக்கிறார். தன்னை ரிலாக்ஸ் செய்து கொள்ள இந்து மந்திரங்களை ஹெட்போன்ஸில் கேட்பதாகவும போட்டிருக்கிறார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ