Simran Dabba Character Comment Aimed At Jyothika :
தமிழ் திரையுலகில், ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர், சிம்ரன். அப்போது, ஹீரோயினாக நடித்து வந்த இவர், இப்போது அம்மா-அண்ணி கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்த கதாப்பாத்திரங்கள் குறித்து ஒரு நடிகை தன்னிடம் கூறிய விஷயத்தை மேடையில் பேசியிருக்கிறார். இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.
தாய்-அண்ணி-ஆன்டி கேரக்டரில் சிம்ரன்..
90sகள் மற்றும் 2000 காலக்கட்டத்தின் தொடக்கத்தில், பலருக்கு கனவுக்கண்ணியாக திகழ்ந்தவர் நடிகை சிம்ரன். இவரை, அந்த காலத்தில் பிடிக்காத ஆட்களே இல்லை. கவர்ச்சி நடனத்திற்கும், இடுப்பின் வலைவிற்கும் பெயர் போன இவர், திருமணத்திற்கு முன்பு வரை பல முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். குறிப்பாக இவர் விஜய் மற்றும் அஜித்துடன் சேர்ந்து நடித்த பல படங்கள் பெரிதும் ஹிட் ஆகியிருக்கின்றன.
குழந்தை பிறந்த பின்பு, பெரிய பிரேக் எடுத்துவிட்டு மீண்டும் திரையுலகிற்குள் ரீ-என்ட்ரி கொடுத்தார், சிம்ரன். ஆனால் அவருக்கு, பழைய மாதிரி ஹீரோயின் ரோல் வழங்கப்படவில்லை. வாரணம் ஆயிரம், ஐந்தாம் படை உள்ளிட்ட படங்களில் அம்மா-அண்ணி கதாப்பாத்திரத்தில் நடித்தார். இப்போதும் அது போன்ற கதாப்பாத்திரங்களையே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
மேடையில் பேசிய விஷயம்..
சமீபத்தில் ஒரு தமிழ் சினிமா விருது நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில், சிம்ரனுக்கும் ஒரு விருது கிடைத்தது. இதை வாங்கிவிட்டு பேசிய அவர், தன்னுடன் நடித்த ஒரு நடிகைக்கு சமீபத்தில் மெசஜ் அனுப்பிய சம்பவத்தை நினைவு கூர்ந்தார். “இந்த கதாப்பாத்திரத்தில் உன்னை பார்ப்பதற்கு சர்ப்ரைஸாக இருந்தது..” என்று கூறியிருக்கிறார். அதற்கு எதிரில் இருந்த அந்த நடிகை, “ஆன்டி ரோலில் நடிப்பதற்கு இது எவ்வளவோ பரவாயில்லை..” என்று கூறியிருக்கிறார். நடிகையின் அந்த பதிலுக்கு, ரிப்ளை கொடுக்க நினைத்த சிம்ரன், “டப்பா கதாப்பாத்திரங்களிலும் நடிப்பதற்கும், எதிலுமே நடிக்காமல் இருப்பதற்கும் இந்த ஆன்டி ரோலும், அம்மா ரோலும் எவ்வளவோ பரவாயில்லை..” என்று கூறியிருக்கிறார்.
Simran: i Messaged a Female Co-Actor I was surprised to see you in that role
Co-Actor: Atleast it's better than doing a Aunty roleSimran:Such an insensitive reply i got. It's better to do Main Aunty roles than doing Dabba rolepic.twitter.com/XcmPifCodl
— AmuthaBharathi (@CinemaWithAB) April 20, 2025
ஜோதிகாவை சொன்னாரா?
சிம்ரன், அந்த நடிகை யார் என்பதை அந்த மேடையில் கூறவே இல்லை. ஆனால், அவர் சொன்ன ‘டப்பா’ என்ற வார்த்தையை நெட்டிசன்கள் பிடித்துக்காெண்டனர். அவர்கள், ஒரு வேளை அவர் சொல்வது ஜோதிகாவை பற்றி இருக்குமோ என்று கூறி வருகின்றனர். காரணம், ஜோதிகாவும் சிம்ரனும் நல்ல தோழிகள் என்பதும், இருவரும் ஒரே காலத்தில் ஒன்றாக திரையுலகில் வளர்ந்த நடிகைகள் என்பதும் அனைவருக்கும் தெரியும். அது மட்டுமல்லாமல், ஜோதிகா சமீபத்தில் ‘டப்பா கார்டல்’ என்ற தொடரில் நடித்திருந்தார். இதையெல்லாம் வைத்து, நெட்டிசன்கள் சிம்ரனிடம் அப்படி பேசிய நடிகை அவராகத்தான் இருப்பார் என்று கூறி வருகின்றனர். இருப்பினும், இது அவர்தானா என்பது உறுதியாக தெரியவில்லை.
சிம்ரன் நடிக்கும் படங்கள்..
சிம்ரன் இந்த வருடத்தில் மட்டும் சப்தம் மற்றும் குட் பேட் அக்லி என இரு படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடித்திருக்கும் டூரிஸ்ட் ஃபேமலி திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. அதே போல, தி லாஸ்ட் ஒன் என்கிற படத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார்.
மேலும் படிக்க | 50 வயது அப்பாஸுக்கு ஜோடியாகும் 27 வயது நடிகை! யார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ