)
Nanjil Vijayan Harassment Transgender : 2025ல் பல பிரபலங்கள் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகின்றனர். அந்த பிரபலங்களின் வரிசையில் தற்போது நாஞ்சில் விஜயன் சிக்கியிருக்கிறார். இவர் சிக்கியிருக்கும் சர்ச்சை குறித்து இங்கு பார்ப்பாேம்.
நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை புகார்..!
தனியார் தொலைக்காட்சியில் பிரபலமான கலைஞர்களுள் ஒருவராக இருக்கிறார், நாஞ்சில் விஜயன். பல ரியலிட்டி ஷோக்களில் காமெடி கலைஞராக கலந்து கொண்டிருக்கிறார். அன்புள்ள கில்லி, நெருங்கி வா முத்தமிடாதே உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவர் மீது, திருநங்கை ஒருவர் புகார் கொடுத்திருக்கிறார்.
தானும் நாஞ்சில் விஜயனும் கடந்த 5 வருடங்களாக ஒன்றாக பழகியதாகவும், தன்னுடன் பழகிய அவர் பாலியல் ரீதியாக தன்னை பயன்படுத்திக்கொண்டு ஏமாற்றி விட்டதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார். தன்னை திருமணம் செய்வதாக கூறி, ஏமாற்றியதாகவும் அவர் கூறியிருக்கிறார். இதையடுத்து அந்த திருநங்கை ஒரு நேர்காணலிலும் கலந்து கொண்டார். அப்போது நாஞ்சில் விஜயனின் மனைவி மேரி தனது தோழியாக இருந்தவர் என்றும், தான் நாஞ்சிலை காதலித்து வந்த போது தன்னிடம் நட்பாக பழகியதாகவும் பேசியிருக்கிறார்.
திருமணத்திற்கு பின் தன்னுடன் அவர் பேசுவதை நிறுத்தியதாகவும், பின்னர் நாஞ்சிலையும் பேசக்கூடாது என்று கன்ட்ரோல் செய்ததாகவும் கூறியிருக்கிறார். மேலும், கடந்த 7 மாதங்களாக தன்னை அனைத்திலும் நாஞ்சில் விஜயன் ப்ளாக் செய்து விட்டதாக அந்த திருநங்கை தெரிவித்திருக்கிறார். நாஞ்சில் தரப்பில் இதற்கு எந்த பதிலும் இன்னும் அளிக்கப்படவில்லை.
மாதம்பட்டி ரங்கராஜ் மீது புகார்!
நடிகரும் சமையல் கலை நிபுணருமான மாதம்பட்டி ரங்கராஜும் சமீபத்தில் ஒரு பாலியல் புகாரில் சிக்கினார். பிரபலங்களின் ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா, சமீபத்தில் கமிஷனர் அலுவலகத்தில் அவர் மீது புகாரளித்தார். அதில், தனக்கும் தன் குழந்தைக்கும் நியாயம் வேண்டும் என்றும், தன்னை கர்ப்பமாக்கிய மாதம்பட்டி ரங்கராஜ் இப்பாேது தன்னை மொத்தமாக கோஸ்ட் செய்து விட்டதாகவும் கூறியிருக்கிறார். சமீபத்திய நேர்காணலில் கூட தான் பணத்திற்காக ரங்கராஜை மாட்ட வைத்ததாக பலர் எழுதுவதாகவும், தன் குழந்தைக்கு இனிஷியல் வேண்டும் என்றுதான் இவ்வளவு போராடுவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஒரே தொலைக்காட்சியை சேர்ந்த பிரபலங்கள்..
நாஞ்சில் விஜயன், மாதம்பட்டி ரங்கராஜ் ஆகிய இருவருமே ஒரே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியின் பிரபலங்கள்தான். சொல்லப்போனால், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருவரும் ஒன்றாக வேலை பார்த்திருக்கின்றனர். 5வது சீசனில் வெளியில் சொல்லப்படாத காரணங்களுக்கா நாஞ்சில் விஜயன் அதிலிருந்து விலகினார். இப்படி, அந்த குறிப்பிட்ட தொலைக்காட்சியை சேர்ந்த பிரபலங்கள் அடுத்தடுத்து சர்சையில் சிக்கி வருவது குறித்து பலரும் பேசி வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ