)
Madhampatty Rangaraj Messed With Shabana : கடந்த சில நாட்களாகவே, இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரு பிரபலமாக இருக்கிறார், மாதம்பட்டி ரங்கராஜ். நடிகரும் சமையல் கலை நிபுணருமான இவர், பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டாவை காதலித்து திருமணம் செய்து, கர்ப்பமாக்கி விட்டு ஏமாற்றியதாக சர்ச்சை எழுந்துள்ளது. இது குறித்து பாடகி சுசித்ரா கொடுத்திருக்கும் ஒரு நேர்காணல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மாதம்பட்டி ரங்கராஜ் சர்ச்சை:
நடிகரும், சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவரது மனைவி ஸ்ருதி. கடந்த சில காலமாகவே மாதம்பட்டி ரங்கராஜ் தனது மனைவியிடம் இருந்து பிரிய போவதாகவும், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா என்பவரை காதலித்து வருவதாகவும் கூறப்பட்டது. இந்த சூழலில் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் தனக்கும் திருமணம் ஆன புகைப்படத்தை சில வாரங்களுக்கு முன்பு ஜாய் கிரிஸில்டா வெளியிட்டார். அதோடு அவர் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் பதிவிட்டிருந்தார். ஆரம்பத்தில் இருவரும் சேர்ந்து வாழ்வதாக பேசப்பட்ட நிலையில், திடீரென தன் மனைவி ஸ்ருதியுடன் வெளியே நிகழ்ச்சியில் பங்கேற்றார் மாதம்பட்டி ரங்கராஜ். இதனைத் தொடர்ந்து, மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றி விட்டதாக ஜாய் கிரிஸில்டா சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார்.
அப்போது பேசிய ஜாய் கிரிஸில்டா, மாதம்பட்டி ரங்கராஜ் மனைவி நான். என்னை அவர் ஏமாற்றிவிட்டார். எனக்கும் என் குழந்தைக்கும் நீதி வேண்டும். அவர் முதல் மனைவியோடு தொடர்பில் இருப்பது எனக்கு தெரியாது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நாங்கள் திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வீட்டில் வசித்து வந்தோம்.என் குழந்தைக்கு அவர் தான் அப்பா. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். MRC நகரில் உள்ள திரிவேதியம்மன் கோவிலில் திருமணம் நடந்தது. சில தினங்களுக்கு முன் அவரை தனியார் நட்சத்திர விடுதியில் சந்தித்தேன். ஆனால் அவர் என்னுடன் பேசவில்லை. மீண்டும் நான் பேச முற்பட்டபோது அவர் என்னை பலர் முன்னிலையில் தாக்கினார். அவர் என்னோடு சேர்ந்து வாழ சிலர் தடுக்கின்றனர் என தெரிவித்தார்.
ஷபானாவிடம் தவறாக பேசினாரா?
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், மாதம்பட்டி ரங்கராஜ் 3 நடுவர்களுள் ஒருவராக இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக இருப்பவர், ஷபானா. சீரியல் நடிகையான இவர், இந்த நிகழ்ச்சியில் நன்றாக சமைக்கும் குக்குகளுள் ஒருவர் என்று பெயர் வாங்கியிருக்கிறார். சமீபத்தில் பாடகி சுசித்ரா, மாதம்பட்டி ரங்கராஜ் ஷபானாவிற்கு தவறாக மெசஜ் செய்ததாக ஒரு நேர்காணலில் பேசியிருந்தார்.
அதில், குரேஷியும் மாதம்பட்டி ரங்கராஜும் சேர்ந்து கொண்டு ஷபானாவிற்கு ஒரே நேரத்தில் தவறாக குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும் கூறியிருக்கிறார். இதையடுத்து, இவர்களுக்குள் பிரச்சனை அதிகமானதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இருப்பினும் இதை உறுதிப்படுத்தும் சான்றுகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ