)
Madhampatty Rangaraj Second Wife Post :
நடிகரும் சமையல்கலை நிபுணருமான மாதம்பட்டி ரங்கராஜ், சமீபத்தில் தனது முதல்மனைவி ஸ்ருதி ரங்கராஜ் உடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதையடுத்து, உடனே அவரது இரண்டாவது மனைவி ஜாய் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார்.
மெகந்தி சர்கஸ் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தவர் மாதம்பட்டி ரங்கராஜ். இவர், நடிகர் மட்டும் கிடையாது, பெரிய கேட்டரிங்க நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். திரையுலக பிரபலங்களில் வீட்டி விஷேஷங்களுக்கு, இவரது நிறுவனத்தில் இருந்துதான் சாப்பாடு செல்லும்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5வது சீசனில் புது நடுவராக வந்தார், மாதம்பட்டி ரங்கராஜ். இந்த சீசனிலும் 3 நடுவர்களுள் ஒருவராகவே தொடர்கிறார். இவர், பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டாவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக கூறப்பட்டது. சில வாரங்களுக்கு முன்பு ஜாய் கிரிஸில்டா போட்டிருந்த பதிவு இதனை உறுதிப்படுத்தும் வகையில் இருந்தது.
ஜாய் கிரிஸில்டா மாலையும் கழுத்துமாக மாதம்பட்டி ரங்கராஜ் உடன் இருக்கும் புகைப்படத்தையும், அவர் தனக்கு குங்குமம் வைத்துவிடும் புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார். கேப்ஷனில், “Mr and Mrs. மாதம்பட்டி ரங்கராஜ்” என்று குறிப்பிட்டிருந்தார். கூடவே, தாங்கள் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் கூறியிருந்தார்.
ரங்கராஜ்ஜின் 2வது திருமணம் குறித்த விஷயம், வெளியில் வந்தவுடன் ரசிகர்கள் அனைவரும் இது குறித்து பேசி வந்தனர். மாதம்பட்டி ரங்கராஜ்ஜின் முதல் மனைவி ஸ்ருதி ரங்கராஜ் பயோவில் ‘மாதம்பட்டி ரங்கராஜ்ஜின் மனைவி’ என்று குறிப்பிட, அதே போல ஸ்ருதி ரங்கராஜ்ஜும் செய்திருந்தார். இதனால், ரங்கராஜ்ஜின் வாழ்வில் என்ன நடக்கிறது, அவர் முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் இரண்டாவது மனைவியை திருமணம் செய்தாரா? என்று பல கேள்விகள் எழுந்தது. இந்த நிலையில், அவர் தனது முதல் மனைவியுடன் நேற்று கோவையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இரண்டாவது மனைவி வெளியிட்ட பதிவு..!
மாதம்பட்டி ரங்கராஜ், அவருடைய முதல் மனைவியுடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படம் வைரலானதை தொடர்ந்து, இரண்டாவது மனைவியும் ஒரு பதிவினை வெளியிட்டிருக்கிறார்.

அவர் கர்ப்பமாக இருப்பதால், செக்-அப் சென்றுள்ளார். அதில் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள டப்பாவில் ‘ஜாய் ரஙராஜ்’ என்று எழுதியிருக்கிறார். கேப்ஷனில், “மருத்துவமனை விசிட்” என்று பதிவிட்டுள்ளார். கேப்ஷனில் அதே போல #RahaRangaraj #BabyRaharangaraj #MadhampattyRangaraj என்று பதிவிட்டிருக்கிறார். முதலில், அவர் மாதம்பட்டி ரங்கராஜ்ஜை தனது பதிவுகளில் டேக் செய்து வந்தார். இப்போது இவரை மாதம்பட்டி ரங்கராஜ் ப்ளாக் செய்து விட்டதாக கூறப்படுகிறது.
ஏன் இந்த திடீர் பதிவு?
ஜாய் ரங்கராஜ் ஆரம்பத்தில் தனது திருமணம் குறித்து பதிவிட்டார். அதன் பிறகு, தன்னுடைய நம்பர் ஹேக் செய்யப்பட்டு விட்தாக ஒருமுறை பதிவிட்டார். இதற்கு பிறகு, அவர் இன்ஸ்டாவில் சைலண்டாகத்தான் இருந்தார். இப்போது மாதம்பட்டி ரங்கராஜ்ஜின் முதல் மனைவியுடன் இருக்கும் புகைப்படம் வெளியானதற்கு பிறகு, இவர் இவ்வாறு பதிவிட்டிருப்பது பேசு பொருளாக மாறியிருக்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ