)
Madhampatty Rangaraj Shruthi Post : கடந்த சில நாட்களாகவே மாதம்பட்டி ரங்கராஜின் பிரச்சனை தலைவிரித்து ஆடி வருகிறது. இந்த நிலையில், அவரது முதல் மனைவி ஸ்ருதி ரங்கராஜ், அவருக்கு ஆதரவாக ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். இது, பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மாதம்பட்டி ரங்கராஜ் பிரச்சனை:
நடிகரும் சமையல் கலை நிபுணருமான மாதம்பட்டி ரங்கராஜ், பெரும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா, தன்னை மாதம்பட்டி ரங்கராஜ் ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாக மாநில மகளிர் ஆணையத்தில் புகாரளித்தார். ஏற்கனவே திருமணமான மாதம்பட்டி ரங்கராஜ், 2வதாக திருமணம் செய்த பெண்ணை ஏமாற்றிஇருக்கிறாரா என்ற கேள்வி மக்கள் மனங்களில் எழ ஆரம்பித்தது. இந்த நிலையில், மாதம்பட்டி ரங்கராஜுடன் பிரிவில் இருந்ததாக கூறப்பட்ட ஸ்ருதி ரங்கராஜ், தற்போது தன் கணவருக்கு ஆதரவாக பதிவிட்டு இருக்கிறார்.
ஸ்ருதி பதிவு:
வழக்கறிஞரும் மாதம்பட்டி ரங்கராஜின் மனைவியுமான ஸ்ருதி, தற்போது ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அதில், “மார்ச் 2025-ல் நான் என் குடும்பப் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டபோது, ஏப்ரல் 2025-இலேயே ஜாய் கிரிசில்டாவிடமிருந்து ஒழுக்கமற்ற மற்றும் அவமதிப்பான செய்திகளைப் பெற்றேன். நீதிமன்ற ரீதியாக பிரிந்ததாகக் கூறும் ஒருவர் இப்படிப்பட்ட செய்திகளை அனுப்புவது ஏன்? இதுவே அவருடைய இரட்டை முகத்தனத்தை வெளிக்கொணர்கிறது. அவர் ஊடகங்களைத் தனிப்பட்ட மற்றும் பொருளாதார லாபத்திற்காக தவறாக பயன்படுத்தி, எங்கள் குடும்ப அமைதியைக் குலைக்க முயற்சி செய்வது இதிலிருந்து தெளிவாக தெரிகிறது.
ஜாய் தனது சொந்த கையெழுத்தில் எழுதிய கடிதத்தில், எனது கணவர் திரு. ரங்கராஜிடம் இருந்து பணம் பறிப்பது மற்றும் எங்களை பிரிப்பது தான் தனது நோக்கம் என்று வெளிப்படையாக கூறியிருப்பது பதிவாக உள்ளது.
அவர் ஊடகங்களில் அளித்த பேட்டிகளில் "எனக்கு பணம், வீடு எதுவும் வேண்டாம்", "நான் யாரையும் பிரிக்க விரும்பவில்லை" என்று கூறினாலும், அவருடைய சொந்த கையெழுத்தில் உள்ள கடிதமே அதற்கு நேர்மாறாக உண்மையை வெளிப்படுத்துகிறது.
அந்த affirmation-ல் சில பகுதிகள்:
பிரிவு 4: "என் பொருளாதார தேவைகளை ரங்கராஜ் கவனிக்க வேண்டும்."
பிரிவு 6: "ரங்கராஜ் என்னை தனது மனைவியாக சமூகம் முன் அறிமுகப்படுத்த வேண்டும்."
பிரிவு 8: "ரங்கராஜ் எனக்கு ஒரு வீடு வாங்கிக் கொடுக்க வேண்டும்." மற்றும் "ரங்கராஜ் எனக்கு மாதம் ரூ.8,00,000 வழங்க வேண்டும்."
பிரிவு 9: "இப்போது எனக்கு ரூ.10,00,000 வேண்டும்."
பிரிவு 12: "ரங்கராஜ் தனது மனைவி ஸ்ருதி பிரியாவுக்கு விவாகரத்து கொடுக்க வேண்டும்.
இந்த வரிகளே ஜாய் கிரிசில்டாவின் உண்மையான நோக்கம் - பணம் பறிப்பு மற்றும் சட்டபூர்வமான மனைவியான எனக்கான குடும்ப வாழ்க்கையை நாசம் செய்வது - என்பதை தெளிவாக காட்டுகின்றன.
நான் என் கணவர் திரு. ரங்கராஜ் அவர்களுடன் உறுதியாக நிற்கின்றேன்; அவரை இறுதி வரை காப்பாற்றுவேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள், யாரை நம்புவது என்றே தெரியவில்லை என்று கூறி வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ