விவாகரத்து செய்து விட்டு..மீண்டும் சேர்ந்து வாழும் பிரபல சினிமா ஜோடி! காரணம் என்ன தெரியுமா?

பிரபல மலையாள நடிகரான பிரியதர்ஷன், தனது மனைவியுடனான 24 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு விவாகரத்து செய்து விட்டு, தற்போது மீண்டும் அவருடன் இணைந்து வாழ்ந்து வருகிறார். இது குறித்த முழு விவரத்தை, இங்கு தெரிந்து கொள்வோம்.  

Written by - Yuvashree | Last Updated : Apr 8, 2026, 05:45 PM IST
விவாகரத்து செய்து விட்டு..மீண்டும் சேர்ந்து வாழும் பிரபல சினிமா ஜோடி! காரணம் என்ன தெரியுமா?

இந்திய திரையுலகில் இருக்கும் முன்னணி இயக்குநர்களில் முக்கியமானவராக இருப்பவர்தான், பிரியதர்ஷன். இவருக்கும், பிரபல நடிகையான லிஸிக்கும் 1990ல் திருமணம் நடந்தது.

Add Zee News as a Preferred Source

பிரியதர்ஷன் லிஸ்ஸி தம்பதி:

பிரியதர்ஷன், இந்து, லிஸ்ஸி கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர். இதுவே இவர்களது காதல் வாழ்க்கையை துவங்க முதல் தடையாக இருந்தது. ஆரம்பத்தில் இவர்கள் இருவரின் வீட்டிலும் இதற்கு சம்மதிக்கவில்லை. ஆனால் போகப்போக இருவரையும் ஏற்றுக்கொண்டார்கள். பிரியதர்ஷனும் லிஸ்ஸியும் 1990ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்திற்கு பிறகு, கல்யாணி பிறந்தார். இவர்களுக்கு சித்தார்த் என்கிற ஒரு மகனுமுள்ளார். 2016ஆம் ஆண்டில் இருவருக்கும் கருத்து வேறுபாடு எழுந்தது. இதனால் இருவரும் விவாகரத்து பெற்றனர்.

மீண்டும் இணைந்து..

24 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு, பிரியதர்ஷனும் லிஸ்ஸியும் பிரிந்தது பலருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், அவர்களுக்கு தெரியாது இவர்கள் மீண்டும் இணைந்து வாழப்போகிறார்கள் என்று. ஆம், இருவரும் விவாகரத்து பெற்ற பிறகும் இருவரும் தற்போது இணைந்து வாழ்ந்து வருகின்றனர்.

பிரியதர்ஷன் இயக்கத்தில் அக்‌ஷய் குமார் நடித்திருக்கும் பூத் பங்களா என்கிற படம், ஏப்ரல் 16ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இது குறித்த ப்ரமோஷன் பேட்டியில் பிரியதர்ஷன் கலந்து கொண்டார். இதில், அவர் மீண்டும் லிஸ்ஸியுடன் இணைந்து வாழ்வது குறித்து கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த பிரியதர்ஷன், தங்களின் திருமணத்திற்கு மதம்தான் முதலில் தடையாக வந்ததாகவும், குடும்பத்தினர் இதற்கு சம்மதிக்கவில்லை, பின்னர் ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார். நாங்கள் இருவரும் 32 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்ததாகவும், அதில் ஒரு சலிப்பும், ஈகோவும் வந்ததாகவும் கூறினார். இந்த ஈகோ பிரச்சனையால் தங்களின் உறவு ஒரு கசப்பான உறவாக மாறியதாகவும் தெரிவித்தார். இதனால், இருவரும் பிரிய முடிவெடுத்ததாக அவர் கூறினார்.

பிரிந்த சில வருடங்களுக்கு பிறகு தாங்கள் ஒருவரை ஒருவர் மிஸ் செய்ததாக உணர்ந்ததாகவும், அதனால் மறுபடியும் இணைந்ததாகவும் அவர் கூறியிருந்தார். வாழ்க்கையில் ஒரு துணை என்பது மிகவும் முக்கியமானது என்று கூறிய அவர், பிரிந்திருந்த காலத்திலும் தாங்கள் வேறு திருமணத்தை நோக்கி செல்லவில்லை என்றும், அடுத்து வரும் நபர் மோசமானவராக இருந்தால் என்ன செய்வது என்கிற பயமும் அதற்கு காரணம் என்றும் கூறியிருந்தார். 

மேலும் படிக்க | அல்லு அர்ஜுன் - அட்லீயின் திரைப்பட டைட்டில் ’ராக்கா’! இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?

மேலும் படிக்க | ஜெயிலர் 2 படத்தில் நடிக்க மறுத்த முக்கிய பிரபலம்! காரணத்தை கேட்டு அதிர்ந்த ரசிகர்கள்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Trending News