)
உலக நாயகன் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது கிளாசிக் திரைப்படமான 'நாயகன்' (Nayagan) மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த ரீ-ரிலீஸ் கொண்டாட்டத்தின் முதல் டிக்கெட், மறைந்த நகைச்சுவை நடிகர் மற்றும் கமல்ஹாசனின் தீவிர ரசிகரான ரோபோ சங்கருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. கமலா திரையரங்கின் உரிமையாளர் விஷ்ணு தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள இந்தப் பதிவு, சினிமா ரசிகர்களின் மனதை உருக்கியுள்ளது.
உலக நாயகன் மீதான ரோபோ சங்கரின் அளவற்ற அன்பு
தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரையில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் ரோபோ சங்கர். தனது தனித்துவமான உடல்மொழி மற்றும் நகைச்சுவைத் திறமையால் ரசிகர்களைக் கவர்ந்த இவர், தனுஷுடன் 'மாரி', விஷ்ணு விஷாலுடன் 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்', அஜித்துடன் 'விஸ்வாசம்' எனப் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். குறிப்பாக, 'மாரி' மற்றும் 'மாரி 2' திரைப்படங்களில் இவரது பாத்திரம் அதிக கவனம் பெற்றது.
ரோபோ சங்கர், தன்னை வெளிப்படையாகவே கமல்ஹாசனின் தீவிர ரசிகராகக் காட்டிக் கொண்டவர். பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் கமல்ஹாசனின் பாடல்களுக்கு நடனமாடி பலரின் மனதைக் கவர்ந்தவர். கமல்ஹாசன் மீதான அவருடைய அபிமானம் எந்த அளவிற்கு இருந்தது என்றால், இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கே வெளிப்படையாக ஒரு சவால் விடுத்திருந்தார். "கமல்ஹாசன் குறித்து யாருக்கு அதிகத் தகவல்கள் தெரியும் என்று ஒரு போட்டி வைத்துக்கொள்வோம்" என்று அவர் விடுத்த சவால், இன்றும் பேசப்படுகிறது.
சோகத்தில் முடிந்த சினிமாப் பயணம்
சிறுசிறு வேடங்களில் தொடங்கி முன்னணி காமெடியனாக உயர்ந்த ரோபோ சங்கர், உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு மரணமடைந்தார். அவரது மறைவு தமிழ் சினிமாவில் ஒரு பெரிய சோகத்தை ஏற்படுத்தியது.
மனதை உருக்கிய கமலா திரையரங்க உரிமையாளரின் அறிவிப்பு
இந்நிலையில் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு 'நாயகன்' திரைப்படம் மீண்டும் வெளியாகவுள்ளது. கமலா சினிமாஸில் கமல்ஹாசன் படங்களின் வெளியீட்டுக் கொண்டாட்டங்களில் ரோபோ சங்கரின் பங்கு மிகப் பெரியது. இதனைக் கருத்தில் கொண்டே, கமலா திரையரங்கின் உரிமையாளர் விஷ்ணு தனது எக்ஸ் தளத்தில் ஒரு உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.
Bookings for Nayagan will open soon !
— Vishnu Kamal (@kamala_cinemas) November 4, 2025
Celebrations at Kamala Cinemas for Kamal Sir’s films will not be the same without Robo Shankar uncle
Before public bookings open, the first ticket will be kept in memory of Robo Shankar uncle and the next few for his family.
அந்தப் பதிவில், "கமலா சினிமாஸில் ரோபோ சங்கர் இல்லாமல், கமல்ஹாசன் படங்களுக்கான கொண்டாட்டங்கள் நிறைவு பெறாது. இதனால், 'நாயகன்' படத்திற்கான முன்பதிவு தொடங்கும் முன், முதல் டிக்கெட் ரோபோ சங்கருக்காகவும், அடுத்த சில டிக்கெட்டுகள் அவரின் குடும்பத்தினருக்காகவும் எடுத்து வைக்கப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
கமல்ஹாசன் மீதான ரோபோ சங்கரின் அளவற்ற அன்பிற்கு, கமலா திரையரங்கம் அளித்துள்ள இந்த கௌரவம், ரசிகர்களின் மனதில் நீங்காத நினைவாக நிலைத்துவிட்டது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ