விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் தற்போது அண்ணன் தம்பிகளின் பாசம் என விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது. தமிழிலேயே உருவான இந்த சீரியல் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு இருக்கிறது, தமிழில் நல்ல டிஆர்பியுடன் இன்னும் இந்த சீரியல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. ஒரு பக்கம் இந்த சீரியலை பல இல்லத்தரசிகள் விரும்பி பார்த்து வந்தாலும் நெட்டிசன்கள் பலரும் இந்த சீரியலை ஒருபக்கம் ட்ரோல் செய்து வருகின்றனர். இப்போது கதையில் வரும் அண்ணன்-தம்பிகள், இத்தனை வருஷம் சேர்ந்து கூட்டு குடும்பம் என்றால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் என்று காட்டிவிட்டு இப்போது மனக்கசப்புடன் பிரிந்து இருக்கின்றனர். பிரிந்த அண்ணன்-தம்பிகள் மீண்டும் இணைவார்களா என்று ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கூடிய விரைவில் முடிவுக்கு வரவுள்ளதாக செய்திகள் வெளியாகி சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது. அதாவது, விஜய் டிவியில் தற்போது புத்தம் புதிதாக கிழக்கு வாசல் என்று தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது. அதாவது, விஜய் டிவியில் தற்போது புத்தம் புதிதாக கிழக்கு வாசல் என்று தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது. இதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வெங்கட் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். மேலும் ஏற்கனவே வெங்கட் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜீவா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலின் மூலம் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. மேலும், தனி புது தொடரில் நடிப்பது குறித்து வெங்கட்டுக்கு நெருங்கிய நண்பர்களிடம் விசாரித்த போது, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நிறைவு பகுதிக்கு வந்து விட்டது. இந்த தொடர் ஜூன் மாதத்துடன் முடி இருப்பதாக கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் இந்த தொடர் முடிந்த பிறகு அதே நேரத்தில் கிழக்கு வாசல் தொடர் ஒளிபரப்பாக இருப்பதாக கூறுகிறார்கள்.


மேலும் படிக்க | விஜய் படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட லோகேஷ் கனகராஜ்! எந்த படம் தெரியுமா?


அதேசமயம் இது குறித்து பேசிய வெங்கட், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த சீரியல் ஜூன் மாதத்திற்குள் முடிந்து விடும். இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் முடிவதற்கும் புதிய சீரியல் தொடங்குவதற்கும் சரியாக இருக்கும் என்று கூறியுள்ளனர். இந்த தகவல் வெளியான முதல் ரசிகர்கள் பலரும் வருத்தத்தில் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.


கிழக்கு வாசல் சீரியல்
விஜய் டிவியில் தற்போது புத்தம் புதிதாக கிழக்கு வாசல் என்று தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த சீரியலை நடிகை ராதிகா சரத்குமாரின் ராடா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த சீரியலில் விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ் ஏ சந்திரசேகர் முதன்முதலாக சின்னத்திரைக்கு என்ட்ரி கொடுக்க இருக்கிறார். இந்த சீரியலில் ராதிகா, பூவே பூச்சூடவா சீரியல் கதாநாயகி ரேஷ்மா மற்றும் கதாநாயகனாக சஞ்சீவ் நடிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. ஆனால் தற்போது சஞ்சீவுக்கு பதிலாக இந்த சீரியலில் பாண்டியன் ஸ்டோர்ஸில் நடித்து வரும் வெங்கட் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | பயில்வான் ரங்கநாதனுக்கு 2 ஆஸ்கார் விருது..குழப்பும் வெங்கட்பிரபுவின் வாழ்த்து


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ