தனது அண்ணன் வெங்கட் பிரபு படங்களின் மட்டும் நடித்து வந்த பிரேம்ஜி தற்போது மற்ற இயக்குனர் படங்களிலும் நடித்து வருகிறார். இசையமைப்பாளராகவும் மாறியுள்ள பிரேம்ஜி சில படங்களுக்கு இசையும் அமைத்துள்ளார். தற்போது அவரது நடிப்பில் உருவாகியுள்ள வல்லமை படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. கருப்பையா முருகன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் பிரேம்கி, திவதர்ஷினி, சங்கர், முத்துராமன், சி.ஆர்.ரஜித், சுப்பிரமணியன் மாதவன் ஆகியோர் நடித்துள்ளனர். வல்லமை படத்தில் எழுத்து, பாடல்கள், தயாரிப்பு, இயக்கம் என அனைத்தையும் கருப்பையா முருகன் மேற்கொண்டுள்ளார். ஜி.கே.வி இசையமைக்க, சூரஜ் நல்லுசாமி ஒளிப்பதிவு செய்ய, சி கணேஷ் குமார் எடிட்டிங் மற்றும் எஸ்கே அஜய் கலைப் பணிகளை மேற்கொண்டுள்ளார். பேட்டிலர்ஸ் சினிமா சார்பில் இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
படத்தின் கதை
கிராமத்தில் விவசாய வேலைகளை செய்து வரும் பிரேம்ஜி (சரவணன்) தனது மனைவியை இழந்த சோகத்தை இருக்கிறார். இந்நிலையில் தனது மகள் திவதர்ஷினி (பூமிகா) படிப்பில் நல்ல விதமாக வரவேண்டும் என்பதற்காக சென்னைக்கு அழைத்து வருகிறார். சென்னையில் ஒரு சிறிய வீடு எடுத்து இருவரும் தங்குகின்றனர். பிரேம்ஜி பிழைப்பிற்காக போஸ்டர் ஒட்டும் வேலை செய்கிறார். இந்நிலையில் ஒருநாள் தனது மகளுக்கு உடம்பு முடியவில்லை என்று மருத்துவரிடம் கூட்டி செல்கிறார். அப்போது தான் தனது மகள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகி உள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் பிரேம்ஜிக்கு தெரிய வருகிறது. இதனை செய்தது யார் என்று கண்டுபிடித்து அந்த நாய வஞ்சகனை கொலை செய்ய வேண்டும் என்று அப்பாவும் மகளும் திட்டமிடுகின்றனர். இறுதியில் அவர்களது திட்டம் நிறைவேறியதா என்பதே வல்லமை படத்தின் கதை.
பிரேம்ஜி நன்றாக நடித்து இருக்கிறாரா இல்லையா என்ற கேள்விக்கு போவதற்கு முன்பு, இப்படி ஒரு கதையை தேர்வு செய்த அவரை தனியாக பாராட்ட வேண்டும். 12 வயது பெண்ணின் அப்பாவாக சரவணன் என்ற கதாபாத்திரத்தை கண் முன்னே கொண்டு வந்துள்ளார். பண வசதியோ, அதிகாரமோ இல்லாத ஒரு சாதாரண மனிதர் இப்படி ஒரு சூழ்நிலையில் என்ன செய்வார் என்பதை எனது நடிப்பின் மூலம் காட்டியுள்ளார் பிரேம்ஜி. இதன் மூலம் தனக்கு நன்றாக நடிக்க வரும் என்பதை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நிரூபித்துள்ளார். அவரது மகள் கதாபாத்திரத்தில் நடிக்கும் திவ்யதர்ஷினியும் நல்ல ஒரு நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அவரது எதார்த்தமான முகம் இந்த கதைக்கு கூடுதல் வலு சேர்கிறது. படத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் வருபவர்களும் இயக்குனர் சொன்னதை சரியாக செய்துவிட்டு சென்றுள்ளனர்.
இசை மற்றும் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்றார் போல உள்ளது. இரண்டு மணி நேரமே படம் ஓடினாலும் இன்னும் சிறிது காட்சிகளை எடிட்டர் கட் செய்து இருக்கலாம். காட்சிகளின் நீளம் சிறிது இடங்களில் சலிப்பை தட்டுகிறது. அதேபோல ஒரு காட்சிக்கும் இன்னொரு காட்சிக்கும் தொடர்பு இல்லாதது போல ஒரு சில இடங்களில் உள்ளது. அது படம் பார்க்கும்போது நமக்கு ஒரு வித குழப்பத்தை ஏற்படுத்தகிறது. தொடர்ச்சியாக வரும் காட்சிகளை எடுக்கவில்லையா அல்லது தேவையில்லை என்று கட் செய்தார்களா என்பது தெரியவில்லை.
பெண் குழந்தைகளுக்கு நடக்கும் அநியாயத்தை இந்த சமூகத்திற்கு சொல்ல வேண்டும் என்ற இயக்குனர் கருப்பையா முருகனின் எண்ணத்திற்கு பாராட்ட வேண்டும் என்றாலும், அதனை திரைப்படமாக சரியாக சொல்லவில்லை. கதையாக கேட்பதற்கு நன்றாக இருந்தாலும் திரைக்கதையில் இன்னும் நல்ல நல்ல காட்சிகளை சேர்த்து இருக்கலாம். வல்லமைக்கு திரைக்கதையில் இன்னும் சற்று வலிமை சேர்த்திருந்தால் சூப்பரான படமாக அமைந்து இருக்கும். நிச்சயம் குடும்பத்துடன் சென்று பார்க்க கூடிய படம் தான் வல்லமை.
மேலும் படிக்க | ரெட்ரோ படத்தில் நடிக்க தேர்வான முதல் ஹீரோ..சூர்யா இல்லை! வேறு யார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ