அர்ஜுன் ரெட்டி, டியர் காம்ரேட், நோட்டா, போன்ற பல படங்களில் நடித்து பிரபலமானவர், விஜய் தேவரகொண்டா. இவருக்கென்ற இந்திய அளவில் பல லட்சம் ரசிகர்-ரசிகைகள் பட்டாளம் உள்ளது. இவர் குறித்து ஒரு பிரபல நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விஜய் தேவரகொண்டா: 


அர்ஜுன் ரெட்டி படம் மூலம், இந்திய அளவில் பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. தமிழில் கூட இப்படம் ஆதித்ய வர்மா என்ற பெயரில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியாகியிருந்தது. அர்ஜுன் ரெட்டி படத்தின் ஹீரோ விஜய் தேவரகொண்டா, அப்படத்தில் டாக்சிக்கான ஒரு ஆணாகவும், கோபக்கார இளைஞராகவும் நடித்திருப்பார். அப்போது அந்த படம் இளைஞர்களால் புகழப்பட்டாலும் இப்போது அந்த ஹீரோவின் கதாப்பாத்திரத்தை விமர்சனம் செய்து வருகினர். அந்த படத்தின் போது தனக்கு விஜய் தேவர்கொண்டாவினால் நிகழ்ந்த சம்பவம் ஒன்றை ஒரு பிரபல நடிகை தெரிவித்துள்ளார். 


பிரபல நடிகை புகார்:


தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து, நடிகையாக மாறியவர் அனசுயா பரத்வாஜ். இவர், ரங்காஸ்தலம், பக்கா கமர்ஷியல், மைக்கேல் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். 2021ஆம் ஆண்டு வெளியான புஷ்பா படத்திலும் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்திருந்தார். புஷ்பா 2 படத்திலும் மெயின் ரோலில் வருகிறார். இப்போது விஜய் தேவரகொண்டா மீது பரபரப்பு புகார் கூறியுள்ளவரும் இவர்தான். அவர், விஜய் தேவரகொண்டா குறித்து அதிர்ச்சி தரும் வகையிலான சில குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். 


மேலும் படிக்க | இந்தியன் 2 படம் குறித்து முக்கிய அப்டேட்டை வெளியிட்ட சித்தார்த்!


ரசிகர்களுக்கு நடிகைக்கும் மோதல்..


விஜய் தேவரகொண்டா-சமந்தா நடிப்பில் உருவாகிவரும் படம், குஷி. காதல்-ரொமான்ஸ் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வரும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அந்த போஸ்டரில் The Vijay Devarakonda என குறிப்பிடப்பட்டிருந்தது. இதை கேலி செய்து படத்தின் பெயரை குறிப்பிடாமல் அனசுயா ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இது. விஜய் தேவரகொண்டா ரசிகர்களை வெறுப்படைய செய்தது. இதனால், நடிகையின் ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கும் இவருக்கும் சண்டை மூண்டது. 


தீரா பகை?


அனசுயா, விஜய் தேவரகொண்டாவை அர்ஜுன் ரெட்டி படம் வந்தது முதலே அட்டாக் செய்து வருகிறார். இவர், ஆரம்பத்தில் விஜய்யுடன் நட்புடன்தான் இருந்ததாகவும் அவர் அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்த பிறகுதான் இவர்களுக்குள் ஏதோ பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது என்றும் ரசிகர்கள் யூகித்தனர். அதற்கு ஏற்றார் போல, அவரும் ஒரு நேர்காணலில் இந்த பிரச்சனை குறித்து பேசியுள்ளார். 


“என்னை ட்ரோல் செய்ய ஆள் செட் பண்ணார்..”


அர்ஜுன் ரெட்டி திரைப்படம் வெளியானபோது, அந்த படத்தில் ஹீரோ நிறைய கெட்ட வார்த்தைகள் பேசுவது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால், படத்தில் அவை ம்யூட் செய்யப்பட்டுவிட்டன. ஆனால், திரையரங்கில் அந்த படத்தை பார்த்த விஜய் தேவரகொண்டா, ரசிகர்களிடம் அந்த வார்த்தைகளை கத்தும்படி கூறியதாக அனசுயா தெரிவித்துள்ளார், இது, ஒரு தாயாக தன்னை மிகவும் பாதித்ததாகவும் அவர் கூறியுள்ளார். இதைப்பற்றி விஜய் தேவரகொண்டாவிடமே தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார். அதன் பிறகு, விஜய் தேவரகொண்டாவின் செய்தி தொடர்பாளர், தன்னை இணையத்தில் ட்ரோல் செய்ய சிலரிடம் பணம் கொடுத்ததாக ஒருசிலர் தன்னிடம் வந்து கூறியதாகவும் அவர் தான் கலந்து கொண்ட நேர்காணலில் தெரிவித்துள்ளார், “அது எப்படி அவரது உதவியாளர் பணம் கொடுத்த விஷயம், விஜய்க்கு தெரியாமல் இருந்திருக்கும்? இது அவரது கவனத்தில் வராமல் இருந்திருக்காது. எல்லாம் அவருக்கு தெரிந்துதான் நடந்திருக்கிறது.” என அந்த நடிகை தெரிவித்துள்ளார். இந்த விஷயம், தென்திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் படிக்க | பாலியல் தாெழிலாளியாக மாறிய 19 வயது ஹாலிவுட் நடிகை...! யாருடைய மகள் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ