Why Ma Ka Pa Anand Did Not Attend Priyanka Wedding : தமிழ் திரை பிரபலங்களுக்கு திருமணம் என்றாலும் ஊரே அது குறித்து பேசுவதுண்டு. அப்படி சமீபத்தில் எங்கு திரும்பினாலும் பிரியங்காவின் இரண்டாவது திருமணம் குறித்துதான் பேச்சாக இருக்கிறது. திடீரென நடந்த இந்த திருமணம் ரசிகர்களை வியப்படைய செய்ததோடு, இவர் திருமணம் செய்து கொண்ட நபர் யார் என்பது குறித்த ஆர்வத்தையும் தூண்டியது. இந்த திருமண நிகழ்வு ஒரு சிலருக்கு மட்டுமே அழைப்பிதழ் கொடுக்கப்பட்டதாகவும், இதில் பிரியங்காவின் நெருங்கிய நண்பர்களுள் ஒருவரான மாகபா. ஆனந்த் மிஸ் ஆவதாகவும் ரசிகர்கள் பேசி வந்தனர்.
ஸ்டார் தொகுப்பாளர் பிரியங்கா:
தமிழ் சின்னத்திரையில் எத்தனையோ தொகுப்பாளர்கள் இருந்தாலும், ஒரு சிலர் ரசிகர்களின் மனங்களில் பெரிய இடத்தை பிடித்தவர்களாக இருப்பார்கள். அப்படி, ஒரு சிறிய நிகழ்ச்சியில் தொகுப்பாளராக தோன்றி, 10 ஆண்டுகளில் ஸ்டார் தொகுப்பாளராக மாறியவர் பிரியங்கா.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இன்னும் பெரிய அளவில் ஹிட் ஆவதற்கு காரணம், இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களுள் ஒருவரான பிரியங்காதான். தனது இயல்பான நகைச்சுவை திறமையால் பலரையும் சிரிக்க வைக்கும் இவர், குக் வித் கோமாளி, கிச்சன் சூப்பர் ஸ்டார் உன்னிடம் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று இருக்கிறார். கடந்தாண்டு நடந்து முடிந்த CWC 5 சீசனின் டைட்டில் வின்னரும் இவர்தான்.
இரண்டாவது திருமணம்:
பிரியங்கா, கடந்த 2016 ஆம் ஆண்டு பிரவீன்குமார் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். ஆனால், இந்த திருமணம் சில ஆண்டுகளிலேயே விவாகரத்தில் முடிந்தது. இதற்கான காரணம் குறித்து எங்கும் வெளியில் தெரிவிக்கப்படவில்லை. இந்த நிலையில், பிரியங்கா தற்போது வசி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து இருக்கிறார். தனது திருமண புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட இவருக்கு சிலர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதேபோல இந்த திருமண விழாவில் வெகு சிலர் மட்டுமே கலந்து கொண்டனர்.
மா.க.பா மிஸ்ஸிங்!
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில், மாகபா ஆனந்த்-பிரியங்காவின் காம்போவை பார்க்கவே பலர் காத்திருப்பர். இந்த நிகழ்ச்சி மட்டுமல்லாத இன்னும் சில இதர நிகழ்ச்சிகளையும் இருவரும் சேர்ந்து தொகுத்து வழங்கி இருக்கின்றனர். பிரியங்கா-மா.க.பா வெளியிலும் சில இடங்களில் ஒன்றாக நண்பர்களாக சுற்றியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பிரியங்காவின் முதல் திருமணத்தின்போது அதில் மா.க.பா முதல் ஆளாக கலந்து கொண்டது அனைவருக்கும் தெரியும். ஆனால், பிரியங்காவின் இரண்டாவது திருமணத்தில் அவருக்கு பிக் பாஸ் வீட்டுக்குள் நண்பரான நிரூப் உள்ளிட்ட சிலர் இருக்க, நெருங்கிய நண்பரான மா.க.பா மிஸ் ஆனதை பார்க்க முடிந்தது. இதற்கான காரணம் குறித்து நெட்டிசன்கள் தேடி வருகின்றனர்.
காரணம் என்ன?
மா.க.பா ஆனந்த் தற்போது வெளிநாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகத்தான், அவரால் பிரியங்காவின் திருமண நிகழ்வில் கலந்து கொள்ள முடியவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது. இருப்பினும் ஒரு சிலர் இதற்கு வேறு ஏதேனும் காரணம் இருக்குமோ என தேடி வருகின்றனர். அவர் மால தீவுகளில் இருப்பது போல போஸ்ட் போட்டிருப்பதும் வைரலாகி வருகிறது. இவர் அதில் தனது கமெண்ட் செக்ஷனையும் ஆஃப் செய்து வைத்திருக்கிறார்.
பிரியங்காவிற்கு, பெரும்பாலானோர் வாழ்த்துகளை தெரிவித்த நிலையிலும் ஒரு சிலர் அவர் மீது வெறுப்பு மழையை பொழிந்து வருவதையும் பார்க்க முடிந்தது. இவர் அடுத்த வனிதா ஆகிவிடுவார் என்றும், தன்னை விட வயதில் அதிகமானவரை இவர் ஏன் திருமணம் செய்ய வேண்டும் என்றும் சிலர் அறிவற்ற கேள்விகளை கேட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | வயதானவரை திருமணம் செய்த பிரியங்கா? எத்தன வயசு வித்தியாசம் தெரியுமா?
மேலும் படிக்க | பிரியங்காவை திருமணம் செய்தவர் இவ்ளோ பெரிய ஆளா? இவர் யார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ