Thalaivar 173 Cibi Chakaravarthi : மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம், தலைவர் 173. இந்த திரைப்படத்தை இயக்க இருந்த சிபி சக்கரவர்த்தி, தற்போது இதிலிருந்து விலகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான காரணம் என்ன என்பதை இங்கு தெரிந்துகொள்வோம்.

Thalaivar 173 Cibi Chakaravarthi : தமிழ் திரையுலகில் டாப் நட்சத்திரமாக இருக்கும் ராஜிக்காந்த், தனது 70களில் இருக்கும் போதிலும் இளமை துள்ளலுடன் பல புது திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர், சமீபத்தில் கமிட் ஆன திரைப்படம், தலைவர் 173. இந்த படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்க இருந்தார்.
தலைவர் 173-விலகிய சிபி சக்கரவர்த்தி:
தலைவர் 173 திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்கும் இந்த படம் குறித்த அறிவிப்பு சில வாரங்களுக்கு முன்பு வெளியானது. ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த், அடுத்ததாக இந்த படத்தில் இணைய இருக்கிறார். இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியான போது, இதனை சுந்தர்.சி இயக்குவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே தான் இந்த படத்திலிருந்து விலகுவதாக அறிவித்து விட்டார். அதன் பிறகு, இந்த படத்தை இயக்க பல இயக்குநர்களிடம் கதை கேட்கப்பட்டது. இறுதியில் ‘டான்’ பட இயக்குநர் சிபி சக்கரவர்த்திதான் படத்தை இயக்கப்போவதாக அறிவிப்பு வெளியானது. இது குறித்து ஒரு விழா மேடையில் பேசிய சிபி சக்கரவர்த்தி, தன் மீது பலருக்கும் “இவன் இந்த படத்தை ஒழுங்காக எடுப்பானா?” என்று சந்தேகம் இருப்பதாகவும், ரஜினி ரசிகர்களை திருப்திபடுத்துமாறு ஒரு படத்தை எடுக்கப்போவதாகவும் கூறியிருந்தார். இதில் ரஜினிக்கான ஸ்பெஷல் லுக்கிற்காக பல்வேறு அலங்கார நிபுணர்களிடம் இவர் பேச்சுவார்த்தையும் நடத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், அவரும் இப்படத்திலிருந்து விலகியிருப்பதாக தகவல் பரவி வருகிறது.
விலகியதற்கான காரணம்..
தலைவர் 173 படத்திலிருந்து ஏற்கனவே சுந்தர்.சி விலகியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சுந்தர்.சி ரஜினியிடம் ஒரு குடும்ப கான்செப்டை கூறி, நகைச்சுவை கதை ஒன்றை கூறியதாகவும், அதை கேட்ட ரஜினி இது தனக்கு செட் ஆகாது என்று கூறி, கதையை மாற்ற சொன்னதாகவும் தகவல் வெளியானது. இது தனக்கு ஒத்து வராததால், சுந்தர்.சி இப்படத்திலிருந்து விலகியதாக, அப்போது கூறப்பட்டது. ஆனால் தனிப்பட்ட காரணங்களால் இந்த படத்திலிருந்து விலகியதாக சுந்தர்.சி இதற்காக விளக்களமித்திருந்தார். இப்போது சிபி சிக்கரவர்த்தி விலகியதற்கான காரணம் குறித்த தகவலும் இணையத்தில் பரவி வருகிறது.
சிபி சக்கரவர்த்தி, நானியை வைத்து தெலுங்கில் ஒரு திரைப்படத்தை இயக்க இருந்ததாக கூறப்படுகிறது. அதற்கான ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகளுக்கு அதிகம் செலவானதால், அவர் அந்த தயாரிப்பு நிறுவனம் கொடுத்த நெருக்கடியினாலேயே, ரஜினியின் 173 படத்திலிருந்து விலகியதாக கூறப்படுகிறது. ஜெயிலர் 2 படத்தை முடித்து விட்டு, தனது 173வது படத்தில் நடிக்க இருந்த ரஜினிக்கு, இப்போது இயக்குநர் மாறியிருப்பதால் அடுத்த இயக்குநரை தேடுவதற்கும் காலதாமதம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. ஆனாலும், ஒரு இயக்குநரை அவர் தேர்ந்தெடுத்து விட்டதாக கூறப்படுகிறது. சிபி சக்கரவர்த்தி குறித்த இத்தனை தகவல்கள் வெளியில் வந்து கொண்டிருந்தாலும், அவர் தனது எக்ஸ் தளத்தின் பயோவில் இன்னும் #Thalaivar173 என்கிற ஹேஷ்டேக்கை வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த இயக்குநர் யார்?
ரஜினியின் 173 திரைப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கப்போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ‘ஓ மை கடவுளே’ திரைப்படம் மூலம திரையுலகிற்குள் இயக்குநராக நுழைந்த அஸ்வத் மாரிமுத்து, அடுத்ததாக டிராகன் திரைப்படத்தை இயக்கியிருந்தார். பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக வைத்து இந்த படத்தை இயக்கியிருந்த அவர், ரூ.100 கோடி ஹிட் படத்தை காெடுத்தார். அடுத்ததாக சிம்புவின் 51வது திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இதில் சிம்பு காதலின் கடவுளாக நடிப்பதாக கூறப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்பாக ரஜினியுடன் தான் உரையாடிய விஷயம் குறித்து ஒரு பேட்டியில் பேசியிருந்தார். அப்போது, தலைவர் 173 திரைப்பத்திற்கான கதை சொல்ல தனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்ததாகவும், ரஜினிகாந்த் கிட்டத்தட்ட 2 மணி நேரம் மதிய உணவை கூட சாப்பிடாமல் இண்டர்வெல் வரை கதையை கேட்டதாக கூறினார். கதையை கேட்டு முடித்து விட்டு, இதில் வில்லனாக யாரை நடிக்க வைக்கலாம்? என்று கேட்டதாகவும், அது தெளிவாக இல்லாததால் படத்தை இயக்க முடியாத சூழல் உருவானதாகவும் கூறினார். இப்பாேது தலைவர் 173 திரைப்படத்தை இவர் இயக்குவதாக தகவல் வெளியான நிலையில், இதே கதையை அவர் இயக்குவாரா என்கிற கேள்வியும் எழுகிறது.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்:
கேள்வி : தலைவர் 173 படத்தை ஆரம்பத்தில் யார் இயக்க இருந்தார்?
பதில் : முதலில் சுந்தர்.சிதான் இந்த படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டது.
கேள்வி : சுந்தர்.சி ஏன் இப்படத்திலிருந்து விலகினார்?
பதில் : கதை தொடர்பான மாற்றங்கள் மற்றும் தனிப்பட்ட காரணங்களால் அவர் விலகியதாக கூறப்படுகிறது.
கேள்வி : சுந்தர்.சி விலகிய பிறகு யார் இயக்குநராக தேர்வு செய்யப்பட்டார்?
பதில் : ‘டான்’ பட இயக்குநர் Cibi Chakaravarthi இயக்குவதாக அறிவிக்கப்பட்டார்.
கேள்வி : தற்போது தலைவர் 173 படத்தை யார் இயக்கலாம் என்று கூறப்படுகிறது?
பதில் : அஸ்வத் மாரிமுத்து இப்படத்தை இயக்க வாய்ப்பு உள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!