)
பிரசித்தி பெற்ற அருள்மிகு கள்ளழகர் திருக்கோவிலில் காவல் தெய்வமாக வீற்றிருந்து அருள்பாலிக்கக்கூடிய 18-ஆம் படி கருப்பணசுவாமியை ஒவ்வொரு நாளும் பல்வேறு பகுதிகளில் இருந்து வரக்கூடிய பக்தர்கள் வணங்கி செல்லக்கூடிய நிலையில் இன்று பாடகி சின்மயி தனது குழந்தையோடு நேரில் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தார்.
கடந்த வாரம் நடிகர் சூர்யா, ஜோதிகா ஆகியோர் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவியோடு நேரில் வருகை தந்து 5 அடி உயர அருவாளை நேர்த்திக்கடனாக செலுத்தி சுவாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது
பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் தொடர்ந்து வருகை தந்து கொண்டிருக்க கூடிய நிலையில் தற்போது திரை பிரபலங்களும் தொடர்ந்து 18-ஆம் படி கருப்பண சுவாமியை தரிசனம் செய்ய வருகை தருவது குறிப்பிடத்தக்கது. மக்கள் பலரை, கருப்பசாமி கோயிலுக்குள் வரவழைக்க முக்கிய காரணமாக இருந்தது, கருப்பு படம் என்றே சொல்லலாம். இந்த படத்தை பார்த்த பிறகு, இங்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. அதே சமயத்தில், ஆர்.ஜே.பாலாஜி கருப்பசாமிக்கு வேல் சாத்தியதும் குறித்தும் பரவலாக பேசப்பட்டது. தினந்தோறும் இங்கு பல்லாயிறக்கணக்காணோர் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
பாடகி சின்மயிக்கு கடந்த ஆண்டு வரை பெரிதாக எந்த வாய்ப்பும் வழங்கப்படாமல் இருந்தது. தக் லைஃப் படத்தின் ‘முத்தமழை’ பாடலை அவர் மேடையில் பாடியதில் இருந்து அவருக்கு நிறைய பாராட்டுகளையும் வாய்ப்புகளும் கிடைத்தது. இதையடுத்து, த்ரிஷாவிற்கு பல படங்களில் இவர் டப்பிங் பேசியிருக்கிறார். 96, லியோ உள்ளிட்ட திரைப்படங்களில் த்ரிஷா நடித்த போது, அவருக்கு சின்மயிதான் வாய்ஸ் கொடுத்தார். கருப்பு திரைப்படத்தில் வாய்ஸ் கொடுத்த பிறகு தற்போது அந்த கோயிலுக்கும் அவர் சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது..