புதுடெல்லி: எப்போதும் எனக்கு ஆதரவாக நிற்கும் எனது ரசிகர்கள் எனக்கு கடவுள் மாதிரி என கூகுள் தேடலில் மீண்டும் முதலிடம் பிடித்த சன்னி லியோன் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாலிவுட்டில் நுழைந்த பிறகு, சன்னி லியோன் தனது நடிப்பு மற்றும் நடன திறமையால் சினிமாத்துறையில் ஒரு சிறப்பு அடையாளத்தை உருவாக்கியுள்ளார். சமூக ஊடகங்களில் அதிகம் தேடப்பட்ட பிரபலமே சன்னி என்பதில் சந்தேகமில்லை. இந்த ஆண்டு, ஆகஸ்ட் முதல் வாரத்தில் இந்தியாவில் கூகிள் தேடலில், அதிகம் தேடப்பட்ட பிரபலங்களின் பட்டியலில் சன்னி முதலிடத்தில் உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, சூப்பர் ஸ்டார்ஸ் சல்மான் கான் மற்றும் ஷாருக்கான் போன்றோரை பின்னுக்கு தள்ளி உள்ளார். 


கூகிள் ட்ரெண்ட்ஸ் அனலிட்டிக்ஸ் படி, சன்னி தொடர்பான பெரும்பாலான தேடல்கள் அவரது வீடியோக்களுடன் தொடர்புடையவை, அதுத்தவிர, அவரது வாழ்க்கை வரலாற்றுத் தொடரான 'கரஞ்சித் கவுர்: தி அன்டோல்ட் ஸ்டோரி ஆஃப் சன்னி லியோன்' மக்கள் அதிகம் கண்டறிந்துள்ளனர். இது தவிர, சன்னி தொடர்பான பெரும்பாலான தேடல்கள் மணிப்பூர், அசாம் போன்ற வடகிழக்கு மாநிலங்களில் தேடப்பட்டதைக் காட்டுகின்றன.


 



இதுப்பற்றி பேசிய நடிகை சன்னி லியோன், எனது குழு இது குறித்த தகவல்களை எனக்குக் கொடுத்தது என்றும், எப்போதும் எனக்கு ஆதரவாக நிற்கும் எனது ரசிகர்கள் எனக்கு கடவுள் மாதிரி என்றும் கூறினார். இது ஒரு சிறந்த உணர்வு எனக் கூறினார். 


கடந்த ஆண்டு இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்களின் பட்டியலில் சன்னி முதலிடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.