Actress Janani Iyer Engagement Photos : பிரபல நடிகையான ஜனனி ஐயர், தற்போது சர்ப்ரைஸாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில போட்டோக்களை வெளியிட்டிருக்கிறார். இதையடுத்து, இவரை திருமணம் செய்து கொள்ள போகும் நபர் யார் என்பது குறித்து பலரும் பரவலாக தேடி வருகின்றனர்.
ஜனனி:
கோலிவுட்டில் வெகு சில திரைப்படங்களிலேயே நடித்திருந்தாலும், பலரது கவனத்தை ஈர்த்த நடிகையாக வலம் வருகிறார், ஜனனி ஐயர். சென்னையில் பிறந்து வளர்ந்த இவர், ஆஸ்திரேலியாவில் படித்து கொண்டிருந்த போது, இவருக்கு தமிழ் திரையுலகில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து, படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு, கோலிவுட்டுக்கு வந்துவிட்டார்.
இவர், முதன் முதலில் அறிமுகமானது பாலாவின் இயக்கத்தில் 2011ஆம் ஆண்டு வெளியான ‘அவன் இவன்’ திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இதில் ஒல்லியான காவல் அதிகாரியாக நடித்திருந்த இவரது கதாப்பாத்திரம் பலரையும் ஈர்த்தது. தொடர்ந்து சில படங்களீல் நடித்திருந்தாலும், இவருக்கு இன்னும் புகழ் சேர்த்தது ‘தெகிடி’ திரைப்படம்தான். 2013ஆம் ஆண்டு வெளியான தெகிடி திரைப்படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம், பெரும் ஹிட் அடித்ததை தொடர்ந்து, இன்னும் பெரிய ஹீரோயினாக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
திருமண நிச்சயதார்த்தம்:
நடிகர் ஜனனி, திடீரென தனது நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். அவர், சாய் ரோஷன் ஷ்யாம் என்பவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இவர்களின் இந்த நிச்சயதார்த்தம் தமிழ் முறைப்படி நடந்திருக்கிறது.
இந்த புகைப்படங்களில் ஜனனியும் அவரை திருமணம் செய்து கொள்ள இருப்பவரும் கையில் இருக்கும் மோதிரத்தை காண்பிக்கும் புகைப்படமும் இடம் பெற்றிருக்கிறது. இதனை பார்த்த நடிகைகளும், ரசிகர்களும், புது ஜோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும், சிலர் மாப்பிள்ளை சூப்பராக இருப்பதாகவும் கூறி வருகின்றனர்.
மாப்பிள்ளை யார்?
ஜனனியை திருமணம் செய்து கொள்ள இருப்பவர், ஒரு விமானி. இவரது இன்ஸ்டாகிராமில் தான் வேலையில் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். இவர்கள் இருவரும், கடந்த சில ஆண்டுகளாக டேட்டிங் செய்து கொண்டிருந்ததாகவும், இப்போது திருமண பந்தத்திற்குள் இணைய இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த ஜோடிப்பொறுத்தம் சூப்பராக இருப்பதாகவும், இவர்களின் திருமணம் எப்போது என்றும் பலர் கேட்டு வருகின்றனர்.
ஜனனி, 2014ஆம் ஆண்டு தனது ஐயர் என்று தனது பெயருக்கு பின்னால் இருந்த சாதிய அடைமொழியை தூக்கிவிட்டார். முன்னர் மாடலாக இருந்த இவர், திரு திரு துரு துரு திரைப்படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அதன் பிறகு, விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்திலும் ஒரு பெயர் குறிப்பிடாத கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். ஜனனிக்கு, கடந்த சில ஆண்டுகளாக நடித்த சில படங்கள் ஓடாமல் போனது. இருப்பினும், பலூன், வேழம், ஹாட்ஸ்பாட் உள்ளிட்ட திரைப்படங்கள் மக்கள் மத்தியில் கவனம் பெற்றது.
மேலும் படிக்க | கணவரிடம் வரதட்சணை வாங்கிய ரம்யா பாண்டியன்! அதற்கு காரணம் இதுதான்..
மேலும் படிக்க | தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே திருமணம்.. வைரலாகும் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









