Viral Video Of Samantha In Tirupati Temple : தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக விளங்குபவர் சமந்தா. இவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்ததை தொடர்ந்து, சிங்கிளாக வலம் வந்தார். இந்த நிலையில், அவர் தற்போது ஒரு இயக்குநரை காதலித்து வருவதாக கூறப்படுகிறது.
சினிமாவில் இருந்து பிரேக் எடுத்த சமந்தா..!
நடிகை சமந்தாவிற்கு, கடந்த 5 வருடங்கள் இடி மேல் இடி கொடுப்பதாக இருந்தது. 2017ஆம் ஆண்டு, நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட அவர், சில ஆண்டுகளிலேயே விவாகரத்து பெற்றார். 2021ஆம் ஆண்டில் நாக சைதன்யாவை விட்டு பிறிந்த பிறகு, தொடர்ந்து சிங்கிள்-ஹீரோயின் சப்ஜெக்ட் இருக்கும் படங்களில் நடித்து வந்தார். ஆனால், இந்த படங்கள் அனைத்தும், தோல்வியை தழுவின. இவர் நடித்த காதல் படமான குஷியும், பெரிய வெற்றியை பெறவில்லை.
இதற்கிடையில், மயோசிடிஸ் என்ற தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா அதனுடனும் போராடி வந்தார். இதையடுத்து, சிட்டடெல் என்ற இந்தி சீரிஸில் மட்டும் நடித்து விட்டு, பின்பு தான் சினிமாவில் இருந்து பிரேக் எடுப்பதாக அறிவித்தார். அதிலிருந்து, இன்னும் எந்த படங்களிலும் இவர் கமிட் ஆகாமல் இருக்கிறார்.
திருப்பதி வீடியோ:
சமந்தா, இப்போது நடிகை மட்டும் கிடையாது. தயாரிப்பாளரும் கூட. இவர் தயாரித்திருக்கும் முதல் தெலுங்கு படம், சுபம். இந்த படத்தை ராஜ் நிடிமோரு என்பவர் இயக்கியிருக்கிறார்.இந்த படம், வரும் மே மாதம் 9ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதையடுத்து, அவர் அப்படத்தின் இயக்குநர் ராஜ் உடன் திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்திருக்கிறார். இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில் அவர் ட்ரெடிஷனல் அக பிங்க நிற சுடிதார் அணிந்திருந்தார். அவருடன் வந்திருந்த ராஜ், வேட்டி சட்டை அணிந்து வந்திருந்தார்.
காதலில் இருக்கிறாரா?
நடிகை சமந்தா, நாக சைதன்யாவுடனான திருமண உறவில் இருந்து விலகியதை அடுத்து, எந்த உறவிலும் இல்லாமல் சிங்கிளாக இருந்தார். தனது தோழிகளுடன் வெளி நாட்டிற்கு இவர் டூர் சென்றதையும் பார்க்க முடிந்தது. இந்த நிலையில், அவர் தற்போது இயக்குநர் ராஜ் நெடுமோருவுடன் திருப்பதிக்கு சென்றிருக்கும் வீடியோ வைரலாகி வருவதை தொடர்ந்து இருவரும் காதல் உறவில் இருப்பதாக சிலர் கூறி வருகின்றனர். அவர், சமந்தாவின் பட இயக்குநர என்பதால் திருப்பதிக்கு ஒன்றாக சென்றிருக்கலாம் என்றும், இது அவர்கள் டேட்டிங் செய்து வருவதற்கான சான்று எதுவும் இல்லை என்றும் கூறப்படுகிறது.
நாக சைதன்யாவின் திருமணத்திற்கு பிறகு..
சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சோபிதாவை காதல் திருமணம் செய்தார். இந்த திருமணம் முடிந்த பிறகு, தன்னை அனைவரும் குற்றவாளியை பார்ப்பதை போல பார்ப்பதாக நாக சைதன்யா ஒரு நேர்காணலில் கூறியிருந்தார். தானும் சமந்தாவும் தற்பாேது தங்களது பிரிவில் இருந்து மூவ்-ஆன் ஆகிவிட்டதாகவும், ரசிகர்கள் மட்டும் ஏன் இன்னும் மூவ்-ஆன் ஆகவில்லை என்றும் கேட்டிருந்தார்.
சமந்தா, தனது திருமண ஆடையை முற்றிலுமாக மாற்றி, அதனை கருப்பு கவுனாக மாற்றிய விவரம் அனைவருக்கும் தெரியும். அது மட்டுமல்ல, நாக சைதன்யாவின் திருமண அறிவிப்பிற்கு பிறகு சமந்தா நடு விரலை காட்டி போட்ட பதிவும் வைரலானது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | 200 கோடி ரூபாயை வேண்டாம் என்று உதறித் தள்ளிய நடிகை சமந்தா! ஏன் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ