)
Parijatham Serial In Zee Tamil: தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரிஜாதம்.
இந்த சீரியலில் கடந்த சனிக்கிழமை எபிசோடில் நிச்சயதார்த்த புடவை எடுக்க இசை வந்திருக்க விஷால் கடுப்பான நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது விஷால் தனது நண்பர்களிடம் அவ்வளவு சொல்லியும் அவர் புடவை எடுக்க வந்திருக்கா என்று இசை மீது கோபப்படுகிறான். பிறகு தொடர்ந்து இசை போன் கால் செய்ய இசை போனை கவனிக்காமல் இருக்கிறாள். அதன் பிறகு இசை விஷாலுக்கு வீடியோ கால் செய்ய விஷால் இவ முகத்தை வேற பார்த்து பேசணுமா என்று போனை எடுக்க மறுக்கிறான்.
ஒரு கட்டத்தில் ஃபோனை எடுக்கும் விஷால் இசையை பேசவிடாமல் மீண்டும் ஸ்ரீஜாவை காதலிக்கும் விஷயத்தை சொல்கிறான். இசைக்கு இந்த முறையும் அவன் பேசுவது என்னவென்று கேட்காமல் போகிறது.
அடுத்ததாக சிந்தாமணி பானுமதி உடன் சேர்ந்து ஒரு குறி சொல்லும் பெண்மணியை சந்தித்து ஏஐ குரலில் பார்த்திபன் பேசுவது போல ஏற்பாடு செய்து தேவகி பாட்டியை நம்ப வைக்க திட்டமிடுகின்றனர். அதன் பிறகு சிந்தாமணி பாட்டியை இங்கே குறி கேட்க அழைத்து வர பார்த்திபன் குரலில் என் பொண்டாட்டி பானுமதி பாவம் அம்மா அவளை வீட்ல சேர்த்துக்கோங்க என்று சொல்ல வைக்கின்றனர். இதனை தேவகி பாட்டியும் நம்பி விடுகிறார்.
அதன் பிறகு தேவகி பாட்டி பானுமதி கோவிலில் சந்தித்து அந்த வீட்டுக்கு உன்னை கூட்டிட்டு போறேன் என்று வாக்கு கொடுக்க இதை சுபத்ரா தேவியும் பார்த்து விடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய பாரிஜாதம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
சுருக்கமாக:
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ