)
Vijay: நடிகர் விஜய் அவருக்கென தனி ரசிகர் பட்டாலத்தையே வைத்திருக்கிறார். அவரது படம் வந்தாலே ரசிகர்களுக்கு திருவிழாவாக இருக்கும். அந்த அளவிற்கு நடிகர் விஜய்யை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், விஜய் நடிகராக உருவான காலகட்டத்தில் படத்திற்கு அட்வான்ஸ் வாங்கிவிட்டு ஏமாற்றியதாக கூறி இருக்கிறார் ஆஸ்கார் மூவிஸ் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு.
யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய அவர், திரை பிரபலங்கள் என்றாலே உயர்ந்த மனிதர்கள் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர். ஆனால் அவர்கள் பல முகங்களை காட்டக்கூடியவர்கள். எனது மனதில் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேல் காயமாக இருக்கும் ஒரு விஷயத்தை இங்கு வெளிப்படுத்த விரும்புகிறேன். நடிகர் விஜய்யின் 5வது படத்தை நான்தான் தயாரித்தேன்.அதற்கு முன்பு வரை அவரது தந்தை எஸ்ஏசி தான் அவரை வைத்து படம் இயக்கினார், தயாரித்தார். அது அனைவருக்கும் தெரிந்ததே நாளைய தீர்பு, செந்தூர பாண்டி, ரசிகன், தேவா.
விஷ்ணு படம்
அதன் பின்னர் வெளி தயாரிப்பாளர்கள் யாரும் வந்து நமது பையனை வைத்து படம் எடுக்க மாட்டார்களா? என எஸ்ஏசி, ஷோபா எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது விஜய்யை வைத்து நாங்கள் தான் படம் எடுத்தோம். விஷ்ணு என்ற படத்துக்காக அவரை கமிட் செய்தோம். ரூ. 3 லட்சம் சம்பளம், 1 லட்சம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்தோம். ஷூட்டிங் தொடங்கினோம். அப்படம் 60 சதவீததிற்கு மேல் மூணாறில்தான் ஷூட் செய்யப்பட்டது. அந்த படத்தை எஸ்ஏசி தான் இயக்கினார். படத்தின் பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய ஹிட்டானது. தொட்டபெட்டா ரோட்டு மேல பாடலை விஜய் மற்றும் அவரது அம்மா ஷோபா பாடினர். எங்களுக்கு நல்ல லாபம் கிடைத்தது.
நன்றியை மறக்கவே மாட்டோம்
இந்த சூழலில் விஷ்ணு படபிடிப்பு காலத்தில் சில விஷயங்கள் நடந்தது. விஜய்யின் அம்மா ஷோபா அனைவரிடம் நல்ல பாசத்துடன் இருக்கக்கூடியவர். தாய் போல் பாசம் காட்டக்கூடியவர். சென்னையில் அப்போது இருந்த விஜயவாகினி என்ற ஸ்டுடியோவில் ஷூட்டிங் நடந்தது. அப்போது, ஷோபா அம்மாவே சமைத்து, எங்களுக்கு சாப்பாடு கொண்டு வருவார். நீயும் எனது மகன் மாதிரி தான் என அவர் கூறுவார். எனக்கு சைனஸ் பிரச்சனை இருந்தது. அதனால் எனக்கு நண்டு ரசம் வச்சுக்கொடுத்ததை மறக்கவே முடியாது. விஷ்ணு படம் முடியும் தருவாயிலேயே, மீண்டும் விஜய்யை வைத்து படம் எடுக்க முடிவு செய்தோம்.
அடுத்தப்படத்திற்கு அட்வான்ஸ் கொடுக்க விஜய்யின் வீட்டிற்கு சென்றோம். அங்கு வேளாங்கண்ணி மாதா சிலை முன்பு, எஸ்ஏசி, ஷோபா மற்றும் விஜய் 3 பேரும் சேர்ந்து அட்வான்ஸ் வாங்கினார்கள். அப்போது, விஷ்ணு படத்தின் மூலமாக எனது மகனுக்கு வாழ்க்கையையே தந்திருக்கீங்க. இந்த நன்றியை மறக்க மாட்டோம், இந்த படத்தை சீக்கிரமாகவே முடித்து தருகிறோம் என கூறினார்கள். பின்னர் படத்தை தொடங்கலாம் என கேட்டதற்கு, விஜய் ஒன்ஸ்மோர் படத்தில் கமிட் ஆகி இருக்கிறார். பிரியமானவளே படத்தில் கமிட் ஆகி இருக்கிறார் என கூறி தள்ளிப்போட்டுக்கொண்டே சென்றார்கள். இதையடுத்து பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை என படங்கள் வெளியாகிக்கொண்டே இருந்தது.
விஜய்க்கு கடிதம்
இதனைத்தொடர்ந்து நானும் எனது அப்பாவும் பல முறை எஸ்ஏசியை சந்தித்த முயற்சி செய்தோம். அவரது ஆஃபீஸ் சென்று காந்திருப்போம். ஆனால் அவர் எங்களை அவாய்ட் செய்வது போல தெரிந்தது. சரி விஜய்க்கு ஒரு கடிதம் எழுதுவோம் என எனது அப்பா, கடிதம் எழுதினார். கடிதம் அவரின் கைக்கு சென்றுவிடாமல் இருந்துவிட கூடாது என்பதற்காக, ஞானம் என்ற துணை இயக்குநரிடம் கடித்ததை கொடுத்து அனுப்பினார், ஆனால் 6 மாதம் ஆகியும் எந்த பதிலும் இல்லை. இதனால், என் அப்பா என்னிடம், ஷோபா அம்மாவை தொடர்பு கொண்டு பேசு என கூறினார்.
யாருனே தெரியல
நானும் ஷோபா அம்மாவின் நம்பருக்கு தொடர்பு கொண்டு பேசினேன். விஷ்ணு பட தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பேசறேன் என்றேன். அதற்கு "ஷோபா அம்மா, விஷ்ணு பட தயாரிப்பாளரா? பாலாஜியா?" என கேட்டு சில வினாடிகள் யோசித்தார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அம்மா நண்டு ரசம் அடிக்கடி வச்சு கொடுத்தீங்களே? என்றேன். "நண்டு ரசமா? அது நிறைய பேருக்கு வச்சு தருவேன். ஆனா நீங்க யாருன்னு தெரியலயே" என கூறினார். எனக்கு மேலும், அதிர்ச்சியாக இருந்தது. பின்னர் அம்மா நீங்கே ஏதோ மறந்துட்டு பேசறேங்கனு நினைக்கறேன். நீங்களும் விஜய்யும் தொட்டபெட்ட பாட்டு பாடினீங்களே அப்படினு சொன்னேன். அதற்கு அவர், "நான் தம்பி கூட நிறைய பாடல்கள் பாடியிருக்கிறேன்" என்றார். சரி இதுக்கு மேல போன் பேசினால் சரிவராது என நான் வைத்துவிட்டேன்.
கார் டிரைவரிடம் அட்வான்ஸ்
பின்னர் நான் என் அப்பாவின் ஆபீசுக்குள் நுழைந்தால், விஜய் வீட்டு கார் டிரைவர் மூலமாக ரூ. 1 லட்சம் பணம் திருப்பி தந்திருந்தார்கள். என்னை யாரென்று தெரியவில்லை என கூறிவிட்டு. கார் டிரைவரிடம் பணத்தை கொடுத்து அனுப்பினார்கள். முறைப்படி அவர்கள்தான் வந்திருக்க வேண்டும். எனது அப்பாவுக்கு கோபம் வந்தது. உடனே எஸ்ஏசிக்கு போன் செய்து, அட்வான்ஸ் வாங்கிட்டு இப்படி கேவலப்படுத்தாதீங்க. உங்கள் டிரைவரிடமே பணத்தை திருப்பி தந்துவிடுகிறேன் என ரூ. 1 லட்சத்தை திருப்பி அனுப்பிவிட்டார்.
இன்றைக்கு புகழ், காசு, பணம், பங்களா என எதை வேண்டுமானாலும் அடைந்திருக்கலாம். ஆனால் அன்பை கொடுத்துவிட்டு, அதை பொய் என்று சொன்னாங்களே? அந்த வலி, வேதனை என்றைக்கும் எந்த காலத்திலும் ஆறாது என மிக வருத்தத்துடன் பாலாஜி பிரபு கூறினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ