)
Fight At Pati Patni Aur Woh 2 Shooting : இந்தியில் முக்கிய நடிகர்களும் ஒருவராக விளங்குகிறார் ஆயுஷ்மான் குரானா. இவர் நடித்து வரும் படம் பதி பத்னி அவுர் வோ 2. இதன் படப்பிடிப்பு ப்ராக்யராஜில் நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பில் ஏற்பட்ட சம்பவம் தான் தற்போது வைரலாகி வருகிறது.
பதி பத்னி அவுர் வோ 2 படத்தின் படப்பிடிப்பு நடந்து நடந்து கொண்டிருந்தபோது அங்கு நடந்த டிராமா தான் தற்போது பேச்சு பொருளாக மாறி இருக்கிறது. இதுகுறித்து வைரலாகி வரும் வீடியோக்களின் படி, படப்பிடிப்பு நடந்து வந்த ஊரில் இருந்த மக்கள், இயக்குனரை அறைந்து விட்டு, அவ்விடத்தில் இருந்த நடிகர்களையும் தாக்கியதாக கூறப்படுகிறது.
படத்தின் கதைப்படி, ஒரு கார் காட்சியை படமாக்க வேண்டியதாக இருந்திருக்கிறது. அப்போது உள்ளூரை சேர்ந்த இரண்டு பேர் சூட்டிங் எடுத்துக் வந்திருந்தவர்களின் அருகில் வந்து அடிதடியில் ஈடுபட்டதாக தெரிகிறது. இந்த வீடியோவில், படக்குழுவினர் உள்ளூர் மக்களிடம் விவாதத்தில் ஈடுபடுவதும், அதன்பிறகு அவர்கள் இவர்கள் மீது கை ஓங்குவதும் பதிவாகி இருக்கிறது.
இந்த சண்டை ஏன் நடந்தது, எதற்காக அவர்கள் இயக்குனரையும் பிற குழுவினரையும் தாக்கினர் என்பது தெரியவில்லை.
இந்த வீடியோவில், கார் காட்சியை இயக்குனர் உள்ளிட்ட பிறர் படமாக்கி வருவதும், இடையில் பைக்கில் வந்த இரண்டு பேர் முதலில் நின்று கொண்டிருந்த இயக்குனரை சட்டையை பிடித்து கீழே விழுந்து அறைவதும் பதிவாகி இருக்கிறது. வீடியோ முடிவில், போலீசார் உன்கிட்ட உள்ளூர் மக்கள் சிலர் வந்து சண்டையை தடுக்க முயற்சி செய்கின்றனர். இடையில் இன்னும் சிலர் தாக்குவதற்கு முற்படுகின்றனர்.
#WATCH: A video showing a violent clash between locals and film crew members from Pati Patni Aur Woh 2, starring Ayushmann Khurrana, is going viral. The incident occurred during the ongoing shoot in Prayagraj, #Prayagraj #AyushmannKhurrana #PatiPatniAurWoh2 pic.twitter.com/hwdSzWywrG
— UP BK NEWS (@UP_BKSH) August 29, 2025
கதாநாயகன் கதாநாயகி வாக்குவாதம்!
இந்த படத்தின் நாயகியான சாரா அலி கானும், நாய்கள் ஆயுஷ்மான் குரானாவும் காரில் அமர்ந்து பேசிக் கொள்வது போன்ற காட்சி படமாக்கப்பட்டு வந்தது. அப்போது, இருவரும் சண்டை போட்டுக் கொள்வது போல இருந்து காட்சி வெளியாகி இருக்கிறது. அதன் பின்பு சாரா அலி கான் காரில் இருந்து இறங்கி செல்வது பதிவாகி இருக்கிறது. இது பார்த்ததற்கு இருவருக்கும் இடையே சண்டை ஏற்படுவது போல இருந்தாலும், இது படத்தில் ஒரு காட்சி என்று கூறப்படுகிறது.
இரண்டாம் பாகம்..
பதி பத்னி அவுர் வோ திரைப்படத்தின் முதல் பாகம் 2019 ஆம் ஆண்டில் வெளியானது. இதில் கார்த்திக் ஆரியன், அனன்யா பாண்டே, பூமி பட்னேக்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இரண்டாம் பாகத்தில் வேறு கதாநாயகன் கதாநாயகியை வைத்து படமாக்கி வருகின்றனர். படத்தின் கதை, ஏற்கனவே திருமணமான ஒருவருக்கு இன்னொரு பெண் மீது ஈர்ப்பு வருகிறது. அதை அவர் எப்படி கையாள்கிறார், என்பதை வைத்து கதை எடுக்கப்பட்டுள்ளது. இந்த கதைதான், படக்குகழுவினர் தாக்கப்பட்டதற்கு காரணமாக இருந்திருக்கும் என்றும் சிலர் கூறி வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ