What Is The Fight Between Bala And Vikram : தமிழ் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படமாக இருக்கிறது, வணங்கான். இந்த படத்தில் முதலில் சூர்யா நடிப்பதாக இருந்தது. ஆனால், அதிலிருந்து அவர் விலகிய நிலையில் அருண் விஜய் ஹீரோவாக நியமிக்கப்பட்டார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாலா 25 விழா:


தமிழ் திரையுலகின் முக்கிய இயக்குநர்களுள் ஒருவராக இருக்கிறார் இயக்குநர் பாலா. மறைந்த மூத்த இயக்குநர் பாலுமகேந்த்ராவிடம் உதவி இயக்குநராக இருந்த இவர் 1999ல் வெளியான சேது படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்த படம் இவருக்கு தனி அங்கீகாரத்தை கொடுத்தற்கு ஒரு காரணம் விக்ரமின் நடிப்பு. இப்படி, சேது, நந்தா, பிதாமகன் போன்ற படங்களை எடுத்த அவர் அதில் சில ஹிட்களையும் கொடுத்தார். 


கடந்த 25 வருட காலத்தில், இவர் படங்கள் பெரிதாக ஹிட் அடிக்கவில்லை என்றாலும், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாக இருந்தது. சமீப காலங்களில் இவர் எடுத்த வர்மா, நாச்சியார், தாரை தப்பட்டை ஆகிய படங்கள் பெரிதும் ஹிட் ஆகவில்லை. சூர்யாவுடனான இவரது வணங்கான் திரைப்படம்தான் பெரிய ப்ராஜெக்டாக பார்க்கப்பட்டது. ஆனால், அதிலிருந்து சூர்யா விலகிவிட்டார். இதையடுத்து அருண் விஜய் அதில் நாயகனாக நடிக்க, தற்போது அப்படம் ரிலீஸிற்கு ரெடியாக இருக்கிறது. இந்த படத்திற்காகவும், பாலாவின் 25 ஆண்டு கால சினிமா வாழ்க்கையை பாராட்டும் வகையிலும் நேற்று விழா நடைப்பெற்றது. இதில் சூர்யா, சிவகார்த்திகேயன், சிவகுமார் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினரகளாக கலந்து கொண்டனர். ஆனால் பாலாவிற்கு மிக நெருக்கமாக இருந்த விக்ரம் இதில் கலந்து கொள்ளவில்லை.


மேலும் படிக்க | திரைத்துறையில் 25 ஆண்டுகள் - பாலாவிற்கு வெற்றி விழா! சூர்யா கலந்து கொள்வாரா?


என்ன பிரச்சனை? 


பாலா-விக்ரமின் கூட்டணியில் உருவான படங்கள், இருவருக்குமே பெரும் வளர்ச்சியை கொடுத்திருக்கிறது. பாலாவால்தான் விகர்முக்கு சியான் என்ற பெயரும் வந்தது. ஆனால் இவர்கள் இருவரும் பிதாமகன் படத்திற்கு பிறகு இருவரும் ஒன்றாக சேர்ந்து ஒரு படத்திலும் பணியாற்றவில்லை. ஆனாலும் இவர்களுக்குள் இருந்த நட்பு விடுபடவே இல்லை. இதனால், 2018ஆம் ஆண்டு தன் மகன் துருவ்-ஐ பாலா இயக்கிய வர்மா படத்தில் நடிக்க வைத்தார் விக்ரம். ஆனால், அப்படம் மீண்டும் வேறு ஒரு இயக்குநரை வைத்து மறு உருவாக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து பாலா குறித்து விக்ரம் எங்கும் பேசவே இல்லை என்று கூறப்படுகிறது. 


விக்ரம்-பாலா இடையிலான பிரச்சனை குறித்து பிரபல பத்திரிகையாளர் ஒருவர் பேசியிருக்கிறார். அப்போது, வர்மா படத்தின் ஷூட்டிங்கின் போது விக்ரம் ஒரு முறை கூட ஸ்பாட்டுக்கு வராமல், தன் பிள்ளையை முழுமையாக நம்பி பாலாவிடம் கொடுத்தாராம். பிர்வியூ பார்க்கும் போது விக்ரம் அந்த படம் பிடிக்காமல் இடையிலேயே எழுந்து சென்று விட்டாராம். இதையடுத்து பாலா அவருக்கு போன் செய்து, “என்னை அசிங்கப்படுத்துரியா” என கேட்டாராம். இதன் பிறகுதான் இருவரும் பேசிக்கொள்வதில்லை என கூறப்படுகிறது. 


சூர்யா குறித்து பேசிய பாலா:


இயக்குனர் பாலாவின் 25 ஆண்டு கால சினிமா பயணத்தை வாழ்த்து விதமாக நடிகர் சூர்யா மற்றும் சிவகுமார் தங்க சங்கிலியை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்த விழாவில் சூர்யா குறித்து பேசிய பாலா, “சூர்யா இருக்கும்பொழுது நான் புகை பிடிக்க மாட்டேன். அதற்குக் காரணம் சிகரெட் பிடிக்கும் பொழுது அதை பார்க்கும் மற்றவர்கள் அட்வைஸ் தான் செய்வார்கள் ஆனால் சூர்யா மட்டும்தான் வருத்தப்படுவார். ஒரு நடிகரால் வருத்தப்பட முடியாது தம்பியாக இருந்தால் மட்டுமே வருத்தப்பட முடியும்” என உருக்கமாக பேசினார். 


மேலும் படிக்க | 19 வயது நடிகையை திருமணம் செய்ய ஆசைப்பட்ட ரஜினி! யார் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ