)
தமிழ் திரையுலகில், முக்கிய நடிகராக இருப்பவர் ரவி மோகன். இவருடைய தோழியான கெனிஷா, சமீபத்தில் சென்னையை விட்டு வெளியேறுவதாக பதிவிட்டிருந்தார். இதையடுத்து, இவர் தற்போது ஒரு மலையாள மொழி படத்தில் பாடகியாக அறிமுகம் ஆவதாக கூறப்படுகிறது.
கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழ் திரையுலகில் முக்கிய நடிகராக இருப்பவர், ரவி மோகன். ‘ஜெயம் ரவி’ என்றிருந்த தனது பெயரை, மாற்றிக்கொண்ட இவர் ஒன்றரை ஆண்டுக்கு முன்பு தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்தார். அந்த சமயத்தில், கோவாவை சேர்ந்த பாடகியான கெனிஷா என்பவருடன் நெருக்கம் காட்டி வந்தார்.
தங்களுக்குள் இருக்கும் உறவு என்ன என்பது குறித்து, ரவி மோகனோ கெனிஷாவோ வெளியில் சொல்லவில்லை. ஆரம்பத்தில் கொஞ்சம் விலகியே இருந்த அவர்கள், சமீப காலமாக பொது வெளிகளில் நட்பைத்தாண்டிய உறவு இருப்பது போல பழகி வந்தனர். இதற்கு கடைசியில் ஒரு எண்ட் கார்ட் போடப்பட்டது.
கெனிஷா, ஆர்த்தி குறித்து தனது பதிவுகளில் யாரெல்லாம் கமெண்ட் செய்தார்களோ அவர்களிடம் ஆர்த்தியை தரக்குறைவாக பேசி பதில் கமெண்ட் காெடுத்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இறுதியில், தனது போன் ஹேக் செய்யப்பட்தாகவும், அந்த கமெண்ட்களை தான் பதிவிடவில்லை என்றும் கெனிஷா விளக்கமளித்தார். அந்த கமெண்ட்களை பார்த்து தன்னை திட்டியவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் 30 நிமிட வீடியோக்களையும் வெளியிட்டார்.
அந்த வீடியோக்களில், தனக்கு 18 வயதிலேயே திருமணம் ஆகிவிட்டதாகவும், இளம் வயதிலேயே தன் கணவரால் அனுபவித்த கொடுமைகளால் அந்த கரு கலைந்து விட்டதாகவும் தெரிவித்தார். மேலும், தனது தாய் தந்தையை இழந்தது குறித்தும், வாழ்வில் பணத்திற்கு கஷ்டப்பட்டு பாரில் பாடல் பாடியது குறித்தும் பேசினார். இவர் ரொம்பவும் எமோஷனலாக பேசி வெளியிடப்பட்டிருந்த இந்த வீடியோக்கள் வைரலானது. ஆனால், என்ன நடந்ததோ தெரியவில்லை. இதற்கு மறு நாளே, தான் சென்னையில் இருந்தும் சமூக வலைதளங்களில் இருந்தும் வெளியேறுவதாக கெனிஷா அறிவித்தார். ரவி மோகனை ‘ரிலீஸ்’ செய்வதாகவும் கூறினார். இதனால், மக்கள் இவர்கள் இருவருக்கும் பிரேக்-அப் ஆகியிருக்குமோ என்று பேசிக்கொண்டனர். இதையடுத்து, கெனிஷாவின் அக்கவுண்டும் தற்போது ஆக்டிவாக இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
பாடகி கெனிஷா, தமிழில் சில ஆல்பம் பாடல்களை பாடியிருக்கிறார். அதில் பெரிதாக, சமீபத்தில் ‘அன்றும் இன்றும்’ என்று ஒரு பாடலை பாடி ரிலீஸ் செய்திருந்தார். இதில், ரவி மோகன் கேமியோ ரோலில் நடித்திருந்தார். தமிழில் படங்களில் பெரிதாக பாடவில்லை என்றாலும், எப்போதாவது பாடல்களை பாடி வெளியிட்டு வந்தார். தற்போது இவர், மலையாளத்தில் அறிமுகமாகம் ஆவதாக கூறப்படுகிறது.
மட்ஃபிஷ் எனப்படும் அந்த மலையாள படத்தில், இவர் திரையிசை பாடகராக அறிமுகாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஜிதின் ஐசக் தாமஸ் இயக்குகிறார். சன்னி வெய்ன் இதில் நாயகனாக நடிக்கிறார். ஏற்கனவே, கேரளாவில் நடைப்பெற்ற ஒரு கான்சர்டில் கெனிஷா கலந்து கொண்டது பேசுபொருளானது. அந்த நிகழ்ச்சியில்தான், அவர்கள் இருவரும் கட்டிப்பிடித்த வீடியோ வைரலானது.
ரவி மோகன், கெனிஷா சென்னையை விட்டுக்கிளம்பிய மறு நாளே பத்திரிகையாளர்களை சந்தித்தார். அதில் அவர் நடந்து கொண்ட விதம் பலருக்கும் பயத்தை கிளப்பியது. தற்போது அவர், சபரிமலைக்கு மாலை போட்டிருக்கிறார். சமீபத்தில் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனமும் செய்தார். கைவசம், பென்ஸ், ஜீனி, கராத்தே பாபு உள்ளிட்ட படங்களையும் வைத்துள்ளார்.