நீங்கள் வாங்கும் தர்பூசணி உண்மையானதா? கலப்படத்தை எளிதாக கண்டு பிடிக்கலாம்!

சமீப நாட்களாக தர்பூசணி பழத்தில் ரசாயனங்கள் சேர்க்கப்படுவதாக புகார்கள் எழுந்து வரும் நிலையில் தர்பூசணி பழத்தை எப்படி பார்த்து வாங்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

1 /6

கோடைகாலத்தில் நீர்ச்சத்துடன் இருக்க பழங்கள் அவசியமான ஒன்று. அதிக நீர் சத்துக் கொண்ட பழமாக தர்பூசணி உள்ளது. ஆனால் அவற்றில் போலிகள் வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் தர்பூசணி பழத்தை எப்படி பார்த்து வாங்கலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

2 /6

தர்பூசணி பழத்தில் ஒரு சிறிய துண்டை எடுத்து தண்ணீரில் போடவும். தண்ணீர் சிவப்பு நிறமாக மாறினால் பழத்தில் செயற்கையான ரசாயனங்கள் சேர்க்கப்பட்டுள்ளது என்று அர்த்தம்.

3 /6

தர்பூசணி பழத்தை முற்றிலும் நன்கு உற்றுப் பாருங்கள், ஏதேனும் ஊசி துளையிட்ட அடையாளங்கள் அல்லது சிறிய வெடிப்புகள் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். அப்படி இருந்தால் அவற்றில் ரசாயனங்கள் சேர்க்கப்பட்டிருக்கலாம்.

4 /6

முழு தர்பூசணி பழத்தை எடுத்து தட்டிப் பாருங்கள். இயற்கையாக நன்கு பழுத்த பழங்கள் நல்ல சத்தத்தை கொடுக்கும். அதுவே அவற்றில் செயற்கை ரசாயனங்கள் இருந்தால் அவ்வளவு அதிகமாக சத்தம் கேட்காது.

5 /6

தர்பூசணி பழத்தில் கிரீமி மஞ்சள் நிறம் அல்லது மஞ்சள் புள்ளி இருந்தால் அது இயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழம். அதிகமாக வெள்ளை நிறம் இருந்தால் அது செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழம்.  

6 /6

தர்பூசணி பழம் பொதுவாக அடர் பச்சை நிறத்தில் இருக்கும். அதிக பச்சையாகவோ அல்லது பளபளப்பாகவோ இருக்க கூடாது. அப்படி இருந்தால் அவற்றில் ரசாயனங்கள் சேர்க்கப்பட்டிருக்கலாம்.