8வது ஊதியக்குழு: 4 நல்ல செய்திகள், ஊழியர்களுக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட், விவரம் இதோ

8th Pay Commission: 8வது ஊதியக்குழு அப்டேட். ஊழியர்களுக்கு காத்திருக்கும் 4 நல்ல செய்திகள். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலம்.

8th Pay Commission: ஊழியர்களின் அடிப்படை சம்பளம், வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA), அகவிலைப்படி (DA) மற்றும் ஓய்வூதியத்தில் இப்போது பெரிய மாற்றங்கள் காணப்படும் என்று நம்பப்படுகிறது. இவை அனைத்தும் ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வரும். அரசின் இந்த முயற்சியால் நாட்டின் 47.85 லட்சம் மத்திய ஊழியர்களும், 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் நேரடியாகப் பயனடைவார்கள்.

 

1 /11

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. லட்சக்கணக்கான ஊழியர்களின் சம்பளம் மற்றும் படிகளை நேரடியாகப் பாதிக்கும் 8வது சம்பளக் குழுவுக்கான அறிவிப்பை மத்திய அரசு ஜனவரி மாதம் வெளியிட்டது. இதன் பலன்கள் 2026 பாதி முதல் அல்லது 2027 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கிடைக்கும் என எதிர்பாக்கப்படுகின்றது.  

2 /11

8வது ஊதியக்குழு எப்போது அமலுக்கு வந்தாலும், ஜனவரி 2026 முதல் அதன் நிலுவைத் தொகை கிடைக்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நிதி அமைச்சகம் ஆணையத்திற்கான பணிகளைத் தொடங்கியுள்ளது. இதற்காக, 35 பதவிகளில் புதிய நியமனங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

3 /11

ஊழியர்களின் அடிப்படை சம்பளம், வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA), அகவிலைப்படி (DA) மற்றும் ஓய்வூதியத்தில் இப்போது பெரிய மாற்றங்கள் காணப்படும் என்று நம்பப்படுகிறது. இவை அனைத்தும் ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வரும்.

4 /11

ஏப்ரல் 17, 2025 அன்று நிதி அமைச்சகம் வெளியிட்ட சுற்றறிக்கையில், ஆணையத்திற்கான நியமனங்கள் டெபுடேஷன் அடிப்படையில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த அதிகாரிகள் ஆணையம் அமைக்கப்பட்ட நாளிலிருந்து அது முடிவுக்கு வரும் வரை பதவியில் இருப்பார்கள். பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் (DoPT) வழிகாட்டுதல்களின் கீழ் இந்த நியமனங்கள் செய்யப்படும். இதற்காக தகுதியான அதிகாரிகளின் பெயர்கள் சம்பந்தப்பட்ட துறைகளிடமிருந்து கோரப்பட்டுள்ளன.  

5 /11

அரசின் இந்த முயற்சியால் நாட்டின் 47.85 லட்சம் மத்திய ஊழியர்களும், 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் நேரடியாகப் பயனடைவார்கள். 8வது சம்பளக் குழு அமல்படுத்தப்படுவதால், அவர்களின் அடிப்படை சம்பளம், ஓய்வூதியம் மற்றும் படிகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

6 /11

8வது ஊதியக்குழுவில் ஃபிட்மெண்ட் ஃபாக்டருக்கு முக்கிய பங்கு இருக்கும். இதன் அடிப்படையில்தான் அடிப்படை ஊதியம் எவ்வளவு அதிகரிக்கும் என்பது தீர்மானிக்கப்படும்.

7 /11

தற்போது செயலில் இருக்கும் 7வது ஊதியக் குழுவின் கீழ், ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.57 ஆக உள்ளது. 8வது உதியக்குழு இதை 2.85 ஆக அதிகரிக்க பரிந்துரைக்கும் என கூறப்படுகின்றது. இதனால் ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் கணிசமாக அதிகரிக்கும். உதாரணமாக, ஒருவரின் அடிப்படை சம்பளம் ரூ.50,000 என்றால், புதிய ஃபிட்மெண்ட் ஃபாக்டரின் படி, அது ரூ.1,42,500 ஆக அதிகரிக்கலாம்.

8 /11

8வது ஊதியக் குழுவில் அடிப்படைச் சம்பளத்துடன் அகவிலைப்படி (DA) இணைக்கப்படலாம் என கூறப்படுகின்றது. இது சம்பள கட்டமைப்பை எளிதாக்குவது மட்டுமல்லாமல், அதன் அடிப்படையில் HRA (வீட்டு வாடகை கொடுப்பனவு) மற்றும் TA (பயண கொடுப்பனவு) போன்ற பிற கொடுப்பனவுகளிலும் மாற்றங்களைக் கொண்டுவரும்.

9 /11

மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு மட்டுமல்லாமல் ஓய்வூதியதாரர்களின் வசதிகளையும் அதிகரிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. ஓய்வூதியத்தை சரியான நேரத்தில் வழங்குவது மற்றும் தொகையை அதிகரிப்பது குறித்தும் ஆணையம் ஆலோசனைகளை வழங்கக்கூடும்.

10 /11

ஒரு உதாரணத்தின் மூலம் சம்பளத்தில் வரக்கூடிய வேறுபாட்டைப் புரிந்து கொள்ளலாம். ஒரு ஊழியரின் தற்போதைய அடிப்படை சம்பளம் ரூ.50,000 என்று வைத்துக்கொள்வோம். புதிய ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.85 ஆக நிர்ணயிக்கப்பட்டால், புதிய அடிப்படை ஊதியம் = 50,000 × 2.85 = 1,42,500. வீட்டு வாடகைப்படி 30% என்றால் = ரூ.15,000, மதிப்பிடப்பட்ட மொத்த சம்பளம் = ரூ. 1,57,500

11 /11

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் 8வது ஊதியக்குழுவின் கீழ் கிடைக்கக்கூடிய ஊதிய உயர்வு அல்லது ஓய்வூதிய உயர்வுக்கு எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கப்படுகிறது.