8வது ஊதியக்குழு: அடி தூள்!! ஊதியம், ஓய்வூதியத்தில் வரலாறு காணாத உயர்வு... எவ்வளவு? எப்போது?

Published: Mar 20, 2025, 03:28 PM IST|Updated: Mar 20, 2025, 03:28 PM IST

8th Pay Commission: 8வது ஊதியக்குழுவில் மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் எவ்வளவு அதிகரிக்கும்? ஃபிட்மெண்ட் ஃபாக்டர் என்னவாக இருக்கும்? முக்கிய தகவல்களை இங்கே காணலாம்.

8th Pay Commission: 2016 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட 7வது ஊதியக் குழு, ஊழியர்களின் சம்பளத்தை கணிசமாக அதிகரித்தது. இதில், ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.57 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இதன் காரணமாக குறைந்தபட்ச ஊதியம் ரூ.7,000 -இலிருந்து ரூ.18,000 ஆக அதிகரித்தது. இதேபோல், பல்வேறு தர ஊதியங்களிலும் குறிப்பிடத்தக்க அதிகரிப்புகள் செய்யப்பட்டன. இப்போது, ​​8வது சம்பளக் குழுவிலிருந்தும் இதேபோன்ற மிகப்பெரிய சம்பள உயர்வு எதிர்பார்க்கப்படுகிறது.

8th Pay Commission1/11

8வது ஊதியக் குழு

8வது ஊதியக்குழு தொடர்பாக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பெரிய செய்தி கிடைத்துள்ளது. லட்சக்கணக்கான மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இந்த புதிய சம்பள ஆணையத்தின் உருவாக்கத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். 8வது சம்பளக் குழுவுக்கான அறிவிப்பு ஜனவரி 2025 இல் வந்தது. அது 2026 முதல் செயல்படுத்தப்படலாம். இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில் மிகப்பெரிய உயர்வு ஏற்படும்.

Central Government Employees2/11

மத்திய அரசு ஊழியர்கள்

அரசாங்கம் அடுத்த ஊதியக்குழுவை அமைப்பதன் முக்கிய நோக்கம், ஊழியர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதும், அவர்களின் வாங்கும் சக்தியை அதிகரிப்பதும் ஆகும். இதன் மூலம் கிடைக்கும் சம்பள உயர்வு நாளுக்கு நாள் அதிகரிக்கும் விலைவாசியை ஈடு செய்ய உதவும்.

7th Pay Commission3/11

7வது ஊதியக்குழுவில் சம்பளம் எவ்வளவு அதிகரித்தது?

2016 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட 7வது ஊதியக் குழு, ஊழியர்களின் சம்பளத்தை கணிசமாக அதிகரித்தது. இதில், ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.57 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இதன் காரணமாக குறைந்தபட்ச ஊதியம் ரூ.7,000 -இலிருந்து ரூ.18,000 ஆக அதிகரித்தது. இதேபோல், பல்வேறு தர ஊதியங்களிலும் குறிப்பிடத்தக்க அதிகரிப்புகள் செய்யப்பட்டன.

Basic Salary4/11

அடிப்படை ஊதியம்

இப்போது, ​​8வது சம்பளக் குழுவிலிருந்தும் இதேபோன்ற மிகப்பெரிய சம்பள உயர்வு எதிர்பார்க்கப்படுகிறது. 8வது சம்பளக் குழுவில் சம்பளம் எவ்வாறு தீர்மானிக்கப்படும்? 8வது ஊதியக் குழுவில், சம்பளம் ஃபிட்மென்ட் ஃபாக்டரின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும். ஃபிட்மென்ட் ஃபாக்டர் என்பது ஒரு பெருக்கி ஆகும். இதன் மூலம் ஏற்கனவே உள்ள அடிப்படை சம்பளத்தைப் பெருக்கி புதிய அடிப்படை சம்பளம் தீர்மானிக்கப்படுகிறது.

Salary Hike5/11

ஊதிய உயர்வு

7வது சம்பளக் குழுவின் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.57 ஆக இருந்தது. இது குறைந்தபட்ச சம்பளத்தை ரூ.18,000 ஆக மாற்றியது. 8வது ஊதியக் குழுவில், ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.86 ஆக இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இது நடந்தால், குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000 -இலிருந்து ரூ.51,480 ஆக உயரக்கூடும்.

Pension Hike6/11

ஓய்வூதிய உயர்வு

ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.86 ஆக நிர்ணயிக்கப்பட்டால், ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்திலும் மிகப்பெரிய மாற்றம் இருக்கும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9,000 -இலிருந்து ரூ.25,740 ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளது. 8வது சம்பளக் குழு அமல்படுத்தப்பட்டால், அரசு ஊழியர்களின் சம்பளம் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

8th CPC Latest News7/11

எந்தெந்த பதவிகளுக்கு எவ்வளவு சம்பளம் உயர்வு இருக்கும்?

8வது சம்பளக் குழுவில் 2.86 என்ற ஃபிட்மென்ட் ஃபாக்டர் செயல்படுத்தப்பட்டால், பல்வேறு அரசுப் பதவிகளில் சம்பளத்தில் மிகப்பெரிய அதிகரிப்பு ஏற்படும். பியூன் / உதவியாளரின் ஊதியம் ரூ.18,000 -இலிருந்து ரூ.51,480 ஆக அதிகரிக்கும். கீழ் பிரிவு எழுத்தர் (LDC): ரூ.19,900 -இலிருந்து ரூ.56,914, கான்ஸ்டபிள் / திறமையான பணியாளர்கள்: ரூ.21,700 -இலிருந்து ரூ.62,062, ஸ்டெனோகிராஃபர் / ஜூனியர் கிளார்க்: ரூ.25,500 -இலிருந்து ரூ.72,930, சீனியர் கிளார்க் / தொழில்நுட்ப பணியாளர்கள்: ரூ.29,200 -இலிருந்து ரூ.83,512 ஆக அதிகரிக்கும்.

Pensioners8/11

ஓய்வூதியதாரர்கள்

8வது சம்பளக் குழுவால் ஓய்வூதியதாரர்கள் எவ்வளவு பயனடைவார்கள்? 8வது சம்பளக் குழு மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டுமல்ல, ஓய்வூதியதாரர்களுக்கும் பயனளிக்கும். 2.86 என்ற ஃபிட்மென்ட் ஃபாக்டரை பயன்படுத்தினால், குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9,000 -லிருந்து ரூ.25,740 ஆக அதிகரிக்கலாம். இது ஓய்வு பெற்ற ஊழியர்களின் நிதி நிலையை வலுப்படுத்தும். மேலும் அவர்கள் தங்கள் வயதான காலத்தில் நிதி பாதுகாப்பை அனுபவிக்க முடியும்.

Central Government9/11

மத்திய அரசு

8வது சம்பள கமிஷன் எப்போது அமல்படுத்தப்படும்? 2025 ஆம் ஆண்டுக்குள் 8வது சம்பளக் குழுவை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. மேலும் இது ஜனவரி 2026 முதல் செயல்படுத்தப்படும். முன்னதாக, 7வது சம்பளக் குழு 2014 இல் அமைக்கப்பட்டு 2016 இல் செயல்படுத்தப்பட்டது. இருப்பினும், அரசாங்கத்தால் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

Central Government Employees10/11

மத்திய அரசு ஊழியர்கள்

8வது சம்பளக் குழுவை அமல்படுத்துவதால் ஏற்படும் தாக்கம் என்ன? 8வது சம்பளக் குழு அமல்படுத்தப்பட்டால், அதன் தாக்கம் நாட்டின் பொருளாதாரத்திலும் காணப்படும். அரசு ஊழியர்களின் வருமானம் அதிகரிப்பதால் நுகர்வு அதிகரிக்கும். இது சந்தையில் அதிக பணத்தை கொண்டு வந்து பொருளாதாரத்திற்கு ஊக்கத்தை அளிக்கும். இதனால் ரியல் எஸ்டேட், ஆட்டோமொபைல், நுகர்வோர் பொருட்கள் மற்றும் வங்கித் துறைகள் பெரிய நன்மைகளைப் பெறக்கூடும். ஓய்வூதியதாரர்களின் நிதி நிலைமை வலுப்படுத்தப்படும், இது அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும்.

Disclaimer11/11

பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் 8வது ஊதியக்குழுவின் கீழ் கிடைக்கக்கூடிய ஊதிய உயர்வு அல்லது ஓய்வூதிய உயர்வுக்கு எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.