200 கோடி ரூபாயை வேண்டாம் என்று உதறித் தள்ளிய நடிகை சமந்தா! ஏன் தெரியுமா?

Actress Samantha: நடிகர் நாக சைதன்யாவுடன் விவாகரத்திற்கு பிறகு 200 கோடி ரூபாய் ஜீவனாம்சம் (Alimony) தொகையை நடிகை சமந்தா வேண்டாம் என்று உதறித் தள்ளி உள்ளார்.

1 /7

தமிழ் நடிகையான நடிகை சமந்தாவிற்கும், தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவிற்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. பல பிரபலங்கள் திருமணத்தில் பங்கு பெற்றனர்.

2 /7

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான ஜோடியாக இருந்த இவர்கள் இருவரும் 2021 ஆம் ஆண்டு விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். இது பலருக்கும் அதிர்ச்சியை தந்தது.

3 /7

இருவருக்கும் இடையே ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகள் காரணமாக சமந்தா மற்றும் நாக சைதன்யா ஒரு மனதாக பிரிகிறோம் என்று அறிகையில் தெரிவித்து இருந்தனர்.

4 /7

விவாகரத்திற்கு பிறகு நடிகர் நாக சைதன்யா 200 கோடி ரூபாய் ஜீவனாம்சம் கொடுக்க முன் வந்ததாக கூறப்படுகிறது, ஆனால் இதனை நடிகை சமந்தா மறுத்துள்ளார்.

5 /7

தனக்கு யாருடைய பணமும் வேண்டாம் என்றும், நான் உழைத்து சம்பாதித்துக் கொள்வேன் என்றும் சமந்தா இந்த பணத்தை நிராகரித்ததாக கூறப்படுகிறது.

6 /7

விவாகரத்து பெற்ற பிறகு நடிகை சமந்தா பிஸியாக சினிமாவில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவை தாண்டி பாலிவுட்டில் தற்போது அதிகம் கவனம் செலுத்துகிறார்.  

7 /7

மறுபுறம் நாக சைதன்யா சமந்தாவை விவாகரத்து செய்ய பிறகு, பாலிவுட் நடிகையான சோபிதாவை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். எளிமையான முறையில் இவர்களது திருமணம் நடைபெற்றது.