12 ஆண்டுக்குப் பிறகு உச்ச ராசியில் பெயர்ச்சியடையும் குரு: 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், செல்வ மழை

Written ByVijaya Lakshmi
Published: Sep 15, 2025, 10:46 AM IST|Updated: Sep 15, 2025, 10:46 AM IST

Jupiter Transits In Cancer 2025: வேத ஜோதிடத்தின்படி, குரு பகவான் கடக ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார், இதன் காரணமாக சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகலாம்...

Guru Peyarchi in Kadagamஇந்த ஆண்டின் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக தேவர்களின் குருவான குரு பகவான் தனது உச்ச ராசியான கடகத்தில் பெயர்ச்சி அடையப் போகிறார். இந்த நிகழ்வு அக்டோபர் 18 ஆம் தேதி நிகழும். இதனால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம், செல்வ மழை பொழியும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.

1/7

ஜோதிடத்தின் படி, குரு பகவான் தனது ராசியை மாற்ற சுமார் 13 மாதங்கள் எடுத்துக் கொள்ளும். ஆனால் மிதுன ராசியில் குரு தற்போது பயணித்து வரும் நிலையில், அக்டோபரில் கடக ராசிக்குள் வேகமாக நுழைவார். 

2/7

கடக ராசி என்பது குருவின் உச்ச ராசி ஆகும். இதன் காரணமாக சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாகக்கூடும். இதனுடன், வருமானம் அதிகரிப்பதோடு, பதவி மற்றும் கௌரவத்தையும் அடையலாம். அதே நேரத்தில், குழந்தை பாக்கியம் உண்டாகலாம். சிக்கிய பணத்தை மீட்டெடுக்கலாம்.

Gemini3/7

மிதுனம்

மிதுனம்: உங்களுக்கு, குரு ராசி மாற்றம் சுபமாக இருக்கும். ஏனெனில் குரு உங்கள் ராசியிலிருந்து இரண்டாம் இடத்திற்கு பெயர்ச்சி அடைவார். இது செல்வம் மற்றும் பேச்சுக்கு உகந்த இடமாகக் கருதப்படுகிறது. எனவே, இந்த நேரத்தில் உங்களுக்கு திடீர் பண ஆதாயங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. அதே நேரத்தில், உங்களுக்கு மூதாதையர் சொத்துக்களும் கிடைக்கும். வேலை செய்பவர்கள் நிதி லாபம் கிடைக்கும். அதே நேரத்தில், திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும்.

Cancer4/7

கடகம்

கடகம்: உங்களுக்கு, குருவின் ராசி மாற்றம் சாதகமாக இருக்கும். ஏனென்றால் குரு உங்கள் ராசியிலிருந்து லக்ன வீட்டிற்கு பெயர்ச்சியாகப் போகிறார். எனவே, இந்த நேரத்தில் உங்கள் பணியிடத்தில் பலம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவாக இருக்கும். வேலையில் இருப்பவர்கள் பதவி உயர்வு மற்றும் முன்னேற்றத்தைப் பெறலாம். உங்களுக்கு மரியாதை கிடைக்கும்.

Libra5/7

துலாம்

துலாம்: கடக ராசிக்காரர்களுக்கு குரு பகவானின் பெயர்ச்சி சாதகமாக இருக்கலாம். ஏனெனில் குரு உங்கள் ராசியிலிருந்து கர்ம ஸ்தானத்தில் பெயர்ச்சி அடையப் போகிறார். இந்த நேரத்தில் நீங்கள் பல நிதி நன்மைகளைப் பெறலாம். பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். நல்ல வேலை வாய்ப்புகள் வரலாம். இதனுடன், சமூக வட்டமும் அதிகரிக்கும். மரியாதை அதிகரிக்கும். தொழிலதிபர்கள் நல்ல பண நன்மைகளைப் பெறலாம்.

6/7

குரு பகவானின் முழுமையான அருளை பெற இந்த மூல மந்திரத்தை கூறவும்: ஓம் ஷ்ரம் ஷ்ரீம் ஷ்ரௌம் ஸஹ் குரவே நமஹ! தினமும் இந்த மந்திரத்தை ஜபிக்கவும்

Disclaimer7/7

பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.