அன்புகரங்கள் திட்டம் : மாதம் ரூ.2000! யாருக்கெல்லாம் கிடைக்கும்? முக்கிய அப்டேட்

Anbukkarangal scheme : அன்புகரங்கள் திட்டம் மூலம் மாதம் 2000 ரூபாய் பெறுவது எப்படி? என்பதை இங்கே பார்க்கலாம்

 

Anbukkarangal scheme : அன்புகரங்கள் திட்டம் மூலம் மாதம் 2000 ரூபாய் யாருக்கெல்லாம் கிடைக்கும்? என்பதை இங்கே விரிவாக பார்க்கலாம்.

 

1 /9

அன்புகரங்கள் திட்டம் (Anbukkarangal scheme) மூலம் பெற்றோரை இழந்த குழந்தைகள் மற்றும் கைவிடப்பட்ட 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 உதவித் தொகை தமிழ்நாடு அரசு கொடுக்கிறது.   

2 /9

மிகவும் வறிய நிலையில் உள்ள குடும்பங்களில் தங்கள் இரண்டு பெற்றோரையும் இழந்து தங்களது உறவினர்களின் பாதுகாப்பில் குழந்தைகள் வளர்ந்து வருவதை அறிந்து, இக்குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து, பாதுகாத்திடும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தை அறிவித்தார்.  

3 /9

இக்குழந்தைகள் பள்ளிப் படிப்பு வரை இடைநிற்றல் இன்றி அவர்கள் கல்வியைத் தொடர, 18 வயது வரை மாதம் 2000 ரூபாய் உதவித்தொகையை தமிழ்நாடு அரசே வழங்கும்.  

4 /9

இது மட்டுமல்லாமல், பள்ளிப்படிப்பு முடித்தவுடன் கல்லூரிக் கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் அவர்களுக்கு வழங்கிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  

5 /9

இத்திட்டத்துக்கு இரண்டு பெற்றோரையும் இழந்து, தங்களது உறவினர்களின் பாதுகாப்பில் வளர்ந்து வரும் குழந்தைகள் மற்றும் ஒரு பெற்றோர் இழந்து, மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்.  

6 /9

மேலும், பெற்றோரில் ஒருவர் இறந்து மற்றொரு பெற்றோர் மாற்றுத்திறன் தன்மை கொண்டவராக இருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் சிறையில் இருக்கும் குழந்தைகளும் அன்புகரங்கள் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்.  

7 /9

பெற்றோர் ஒருவர் இறந்து மற்றொரு பெற்றோர் உயிருக்கு ஆபத்தான நோய்களுடன் வாழ்ந்து வரும் குழந்தைகள் தகுதியுடையவர்கள் ஆவார்கள்.  

8 /9

தகுதியுடைய குழந்தைகள் குடும்ப அடையின் நகல், குழந்தையின் ஆதார் அட்டையின் நகல், குழந்தையின் வயது சான்று நகல், குழந்தையின் வங்கிக் கணக்குப் புத்தகத்தின் ஆவணங்களுடன், வசிக்கும் மாவட்டங்களில் உள்ள தாலுகா அலுவலகத்துக்கு சென்று விண்ணப்பிக்கவும்.  

9 /9

வாரந்தோறும் நடக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நடக்கும் குறைத்தீர்ப்பு முகாம்களிலும் இத்திட்டத்துக்கு மனு கொடுக்கலாம். அரசு அதிகாரிகளின் அறிவுறுத்தல் மற்றும் வழிகாட்டுதல்களை பின்பற்றி இத்திட்டத்துக்கு விண்ணப்பிக்கும்போது பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் 2000 ரூபாய் கிடைக்கும்.