பிரியங்காவின் 2வது கணவரின் உண்மை முகம்! அரசியல் வாரிசு..இந்தியரே இல்லை? முழு விவரம்

Anchor Priyanka Husband Vasi Sachi Biography : சில நாட்களுக்கு முன்பு திருமணம் முடித்த பிரியங்காவின் கணவர் குறித்த விவரங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. முழு தகவலை இங்கு பார்ப்போம்.

Anchor Priyanka Husband Vasi Sachi Biography : கடந்த சில நாட்களாகவே, இணையதளத்தில் எங்கு திரும்பினாலும், தொகுப்பாளர் பிரியங்கா குறித்த செய்திகளாக இருக்கிறது. காரணம், அவருக்கு சமீபத்தில் வசி சச்சி என்பவருடன் திருமணம் நடந்தது. இது, அவருக்கு இரண்டாவது திருமணம் ஆகும். இவர் குறித்த சில தகவல்கள், பிரியங்காவின் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.

1 /7

தமிழ் நாட்டில், எத்தனையோ தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் இருந்தாலும் ஒரு சிலரே ஸ்டார் தொகுப்பாளர்களாக இருக்கின்றனர். அப்படி, நட்சத்திர தொகுப்பாளராக இருப்பவர், பிரியங்கா தேஷ்பாண்டே. 

2 /7

12-10 ஆண்டுகளுக்கு முன்னர், குழந்தைகளை வைத்து நடத்தப்படும் நிகழ்ச்சிகளையும் சமையல் நிகழ்ச்சிகளையும் நடத்தி வந்தார் பிரியங்கா. இதையடுத்து, அவருக்கு தொடர்ந்து ஹிட் ஷோ-வான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை நடத்தும் வாய்ப்பு கிடைத்தது. இதில், இவரும் மா.க.பா ஆனந்தும் இணைந்து நடத்தும் சேட்டைகளை பலர் ரசிப்பதுண்டு.

3 /7

பிரியங்கா, 2016ல் பிரவீன் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில காரணங்களால், இந்த திருமணம் விவாகரத்தில் முடிந்தது. இதற்கான காரணம் குறித்து எங்கும் வெளியில் தெரிவிக்கப்படவில்லை. 

4 /7

பிரியங்காவிற்கு, கடந்த 16ஆம் தேதி திருமணம் நடந்திருக்கிறது. இவரை வசி சச்சி என்பவர் காதலித்து கரம் பிடித்திருக்கிறார். இவர்களின் திருமண நிகழ்வில் மிக நெருங்கிய நண்பர்களும் உறவினர்களும் மட்டுமே கலந்து கொண்டனர்.

5 /7

வசி சச்சி, டிஜே-வாக இருக்கிறார். திருமண நிகழ்வுகள், சினிமா நிகழ்வுகள், மக்கள் அதிகம் கூடும் டிஸ்கோ க்ளப் உள்ளிட்ட இடங்களில் இவர் டிஜேவாக செயல்படுகிறார். இவர் குறித்த சில தகவல்கள்தான், மக்களை தற்போது வியப்படைய செய்திருக்கிறது. 

6 /7

பிரியங்காவின் இரண்டாவது கணவர் வசி சச்சி, இந்தியர் இல்லை, இலங்கையை சேர்ந்த ஈழத்தமிழர் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. இவரது குடும்பம்  இலங்கையில் இருக்கும் திரிகோணமலையில் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இலங்கை வாழ் தமிழரான வசி, அரசியல் வாரிசு என்றும் கூறப்படுகிறது. இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சியின் முன்னாள் தலைவராக இருந்த, மறைந்த இரா.சம்பத்தின் தங்கை மகன்தான் வசி என தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

7 /7

வசி, தற்போது இலங்கையில் ஒரு ஈவண்ட் மேனேஜ்மண்ட் நிறுவனத்தை (மேடை மற்றும் திருமண நிகழ்ச்சிகளை நடத்தும் நிறுவனம்) நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இலங்கையில் ஒரு நிகழ்ச்சியின் போது பிரியங்கா அங்கு சென்றதாகவும், அப்போது இருவருக்கும் நட்பு ஏற்பட்டு பின்னர் அது காதலாக உருவானதாகவும் கூறப்படுகிறது.