கடலுக்கு அடியில் வாழும் பழங்குடியினர்! தண்ணீரை விட்டு வரமாட்டார்கள்!

காடு, மலை போன்ற இடங்களில் பழங்குடியினர் வசித்தாலும் கடலில் வசிக்கும் சில பழங்குடியின மக்கள் உள்ளனர். அவர்கள் யார் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

1 /6

உலகம் முழுவதும் பல்வேறு விதமான பழங்குடி இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இன்றைய உலகில் பலர் மக்களுடன் சாதாரணமாக பழகினாலும், ஒரு சிலர் தனித்து வாழ விரும்புகின்றனர். 

2 /6

அந்த வகையில் வெளியுலகை அதிகம் தெரியாமல் வாழ்ந்து வரும் பழங்குடியினர் தான் பவாஜ். இவர்கள் மலேசியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா போன்ற கடல் பகுதிகளில் அதிகம் வசிக்கின்றனர். இவர்களை கடல் நாடோடிகள் என்றும் அழைக்கின்றனர். 

3 /6

பவாஜ் இன மக்கள் எப்போதும் கடல் மற்றும் கடல் சார்ந்த பகுதிகளில் மட்டுமே தங்குகின்றனர். ஏதேனும் தேவை இருந்தால் மட்டுமே அரிதாக நிலப்பகுதிக்கு வருகின்றனர். 

4 /6

கடலை சுற்றியே இவர்கள் வாழ்க்கை இருப்பதால் கடலை பற்றி நன்கு தெரிந்து வைத்திருக்கின்றனர். குறிப்பாக ஆழ்கடலில் நீந்துவது மற்றும் கடல் வாழ் உயிரினங்களுடன் இணைந்து இருப்பது போன்றவற்றை நன்கு தெரிந்திருக்கின்றனர். 

5 /6

சாதாரண மனிதர்களை விட இந்த பவாஜ் பழங்குடியின மக்களால் ஆழ்கடலில் நீண்ட நேரம் இருக்க முடியும்.  இதனால் இவர்களுக்கு நீர் மனிதர்கள் என்றும் இன்னொரு பெயரும் உண்டு.   

6 /6

பவாஜ் மக்கள் பெரும்பாலானோர் முஸ்லிம் மதத்தை வழிபடுகின்றனர். நிலத்தில் கால் வைக்கவே பயப்படும் இவர்களுக்கு படிப்பறிவு மிகவும் கம்மியாக உள்ளது. இதனாலும் சாதாரண மக்களிடமிருந்து தள்ளியே உள்ளனர்.