Kalaingar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பத்தினருக்கு கிடைக்குமா? கிடைக்காதா? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Kalaingar Magalir Urimai Thogai : முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்ப பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனாளியாக இருக்க முடியாதா? என்ற கேள்வி பொதுவாக இருக்கும் நிலையில் அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் விரிவாக்கப் பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கிவிட்டது. அதனால் இதுவரை இந்த திட்டத்தில் பயன்பெறாத பெண்கள் கலைஞர் உரிமைத் தொகை கோரி விண்ணப்பித்து வருகிறார்கள்
தமிழ்நாடு அரசு ஏற்கனவே இந்த திட்டத்துக்கு விண்ணிப்பிப்பவர்களுக்கு சில தகுதிகளை நிர்ணயித்துள்ளது. அந்த தகுதிகளை பூர்த்தி செய்பவர்களுக்கு மட்டுமே மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் இந்த திட்டத்தில் பயனாளிகளாக சேர்க்கப்படுவார்கள்
ஒருவேளை தகுதியில்லாதவர்கள் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டிருந்தால் மாதம்தோறும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளை ஆய்வு செய்ய தொடங்கியிருக்கிறது தமிழ்நாடு அரசு
அதில் இறந்தவர்களின் பெயர்கள் மற்றும் தகுதியில்லாத பெண்களின் பெயர்கள் எல்லாம் நீக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு பதிலாக புதிய பயனாளிகள் விரைவில் சேர்க்கப்பட்டடு, அவர்களது வங்கிக் கணக்கில் மகளிர் உரிமைத் தொகை நேரடியாக வரவு வைக்கப்பட உள்ளது.
அதேநேரத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கும் முன் சிலருக்கு சந்தேகங்கள் இருக்கின்றன. அதில் முதன்மையான ஒரு சந்தேகம் என்னவென்றால், ரேஷன் கார்டில் பெயர் இருக்கும் முதியவர்கள் அரசின் மாத ஓய்வூதியத் தொகை பெற்றால், இந்த திட்டத்தில் சேர முடியுமா?, முடியாதா? என்ற கேள்வி பலரிடத்திலும் இருக்கிறது.
உண்மையில், அமைப்பு சாரா நல வாரியம் உள்ளிட்ட பிற துறைகளின் வழியாக முதியோர்கள் ஓய்வூதியம் பெற்றாலும், அந்த குடும்பத்தில் அல்லது ரேஷன் கார்டில் பெயர் இருக்கும் தகுதி வாய்ந்த பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறலாம். இந்த திட்டத்துக்கும் விண்ணப்பிக்கலாம். அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படாது. ஏற்கப்படும்.
ஓய்வூதியதாரராக இருப்பவர்கள் மட்டும் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க முடியாது. அவர்களுக்கு இந்த ஆயிரம் ரூபாய் கிடைக்காது. அவர்களின் குடும்பத்தில் இருக்கும் தகுதி வாய்ந்த பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் சேர்ந்து பயன் பெறமுடியும்.
பல ஊர்களில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது என்ற அச்சத்தில் முதியவர்களின் பெயர்கள் ரேஷன் கார்டுகளில் இருந்து நீக்கக்கோரி குடும்பத்தினர் விண்ணப்பிக்கின்றனர். ஆனால், அப்படி செய்யத் தேவையில்லை. முதியவர்களுக்காக தமிழ்நாடு அரசு இந்த விதிவிலக்கை கொடுத்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.