கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : ரேஷன் கார்டு இல்லாதவர்கள் விண்ணப்பிக்க முடியுமா?

Kalaingar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு ரேஷன் கார்டு இல்லாதவர்கள் விண்ணப்பிக்க முடியுமா? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

Kalaingar Magalir Urimai Thogai : ரேஷன் கார்டு இதுவரை பெறாதவர்கள், இல்லாதவர்கள் எல்லாம் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்க முடியுமா? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்...

1 /8

தமிழ்நாடு அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை (Kalaingar Magalir Urimai Thogai) திட்டத்தை வெகு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இந்தியாவிலேயே மிகச் சிறப்பாக இந்த திட்டத்தை செயல்படுத்தி வரும் அரசு தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு குட்நியூஸை அண்மையில் அறிவித்தது.

2 /8

அதாவது, இந்த திட்டத்தில் இதுவரை பயனாளியாக இல்லாதவர்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவித்தது. அதாவது, இந்த திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்ய உள்ளது தமிழ்நாடு அரசு.  

3 /8

இதனால், இந்த திட்டத்தில் பயன்பெற தகுதியான பெண்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்க ஜூன் 4 ஆம் தேதி தமிழ்நாடு அரசு மக்களுடன் முதலவர் என்ற சிறப்பு முகாமை மாநிலம் முழுவதும் 9000 இடங்களில் நடத்த உள்ளது.  

4 /8

அப்போது, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், வங்கி பாஸ்புக் நகல் உள்ளிட்ட ஆவணங்களுடன் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.  

5 /8

இதில் பலருக்கும் ஒரு சந்தேகம் இருக்கிறது. அது என்னவென்றால் ரேஷன் கார்டு இல்லாதவர்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாமா? என கேட்கின்றனர்.

6 /8

உண்மையில் இந்த திட்டத்துக்கு மிக அடிப்படையான முக்கியமான ஆவணமே குடும்ப அட்டை (Ration Card) தான். ரேஷன் கார்டு இல்லாதவர்கள் கட்டாயம் இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்க முடியாது.

7 /8

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் நீங்கள் பயனாளியாக சேர வேண்டும் என்றால் முதலில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து பெற வேண்டும். அதேபோல் பொருளில்லா அட்டை வைத்திருப்பவர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது. 

8 /8

எனவே, ரேஷன் கார்டு பெற்று கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விதிமுறைகளையும் அறிந்து கொண்டு இந்த திட்டத்துக்கு நீங்கள் விண்ணப்பித்தீர்கள் என்றால் உங்களின் விண்ணப்பம் ஏற்கப்படும்.