ஆஹா...! இவர்களின் சம்பளம், ஓய்வூதியம் உயர்வு... மத்திய அரசு அறிவிப்பு!

Central Government: தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஓய்வுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின்  சம்பளம், தினசரி கொடுப்பனவு, ஓய்வூதியம் மற்றும் கூடுதல் ஓய்வூதியம் ஆகியவை உயர்த்தப்பட்டுள்ளது. 

MPs Salary, Pension Hike: மேலும் இந்த சம்பள மற்றும் ஓய்வூதிய உயர்வு என்பது 2023இல் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

1 /8

மக்களவை உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் சம்பளம், தினசரி கொடுப்பனவு, ஓய்வூதியம் மற்றும் கூடுதல் ஓய்வூதியம் குறித்த அப்டேட் இன்று வந்துள்ளது.   

2 /8

அதாவது, இவர்களின் சம்பளம், ஓய்வூதியம், கூடுதல் ஓய்வூதியம், தினசரி கொடுப்பனவு உயர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.   

3 /8

இந்த சம்பள உயர்வு 2023ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த 2 ஆண்டுகளுக்கான அரியர் தொகையும் வழங்கப்படும் எனலாம்.  

4 /8

இந்த உயர்வு என்பது நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வூதியச் சட்டம் 1954, மூலம் சாத்தியமாகியிருக்கிறது. மேலும் வருமான வரிச் சட்டம், 1961இல் சுட்டிக்காட்டப்பட்டுள்ள செலவு பணவீக்கக் குறியீட்டைக் கணக்கில் எடுத்துக்கொள்கிறது.  

5 /8

சம்பள உயர்வு: தற்போது மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் சம்பளம் ரூ.1 லட்சமாக உள்ளது. இது தற்போது ரூ.1 லட்சத்து 24 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.   

6 /8

தினசரி கொடுப்பனவு: மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் தினசரி கொடுப்பனவு ரூ.2000 ஆக உள்ளது. அது தற்போது ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.  

7 /8

ஓய்வூதியம்: நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஓய்வுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாத ஓய்வூதியம் தற்போது ரூ.25 ஆயிரமாக உள்ளது. அது தற்போது ரூ.31 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.   

8 /8

கூடுதல் ஓய்வூதியம்: முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒவ்வொரு வருட சேவைக்கும் கூடுதல் ஓய்வூதியம் வழங்கப்படும். அது தற்போது ரூ.2,000 ஆக உள்ளது. ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.