தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் இன்றும் நாளையும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் என்பதை இங்கு பார்க்கலாம்.
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில், வெயில் சுட்டெரித்து வருகிறது. இருப்பினும் அவ்வபோது பல்வேறு மாவட்டங்கள் லேசான மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், அக்னி நட்சத்திரம் வரும் மே 4 ஆம் தேதி முதல் ஆரம்பிப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. இதனால் வரும் நாட்களில் வெப்பம் அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது. குறிப்பாக இயல்பு நிலையை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் உயர கூடும் என கூறியுள்ளது.
இருப்பினும் தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்றும் நாளையும் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறபட்டுள்ளது. புதுவை, காரைக்காலிலும் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
அதேபோல் மே 1 முதல் 5 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை இன்றும் நாளையும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 37 முதல் 38 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.